மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

பேய்



மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவனின் மனைவி, தன் கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த எண்ணினாள்.


ஒரு நடு இராத்திரிப் பொழுதில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள்.
...
பேய் போன்று தன்னை உருவகப் படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின்பின்னே ஒழிந்திருந்தாள்.


கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள்.


எந்தவிதப் பயமும் இன்றிக் கணவன், "நீ யார்" என்று கேட்டான்.
"நான் தான் பேய்!!" என்று மனைவியானவள் பதிலளித்தாள்.








"நல்லது... என்னுடன் நீயும் எனது வீட்டிற்கு வா....உன்னுடைய சகோதரியைத்தான் நான் திருமணம் முடித்துள்ளேன்" என்று கணவன் அவளிற்குப் பதிலளித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக