மொத்தப் பக்கக்காட்சிகள்

4/20/2017

வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம் !

Memes on Rajinis press meet about political stand
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்
திடீரென இறந்து போனான்.,
.
அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.. ]
.
#கடவுள் :

"வா மகனே.... நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது.."
.
#மனிதன் :
"இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
.
#கடவுள் :
"மன்னித்துவிடு மகனே....
உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."
.
#மனிதன் :
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
.
#கடவுள் :
"உன்னுடைய உடைமைகள்....."
.
#மனிதன் :
"என்னுடைய உடைமைகளா!!!
என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,....
எல்லாமே இதில் தான் இருக்கின்றனவா?"
.
#கடவுள் :
"நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது.."
.
#மனிதன் :
அப்படியானால்,
"என்னுடைய நினைவுகளா?"
.
#கடவுள் :
"அவை காலத்தின் கோலம்...."
.
#மனிதன் :
"என்னுடைய திறமைகளா?"
.
#கடவுள் :
"அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது...."
.
#மனிதன் :
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?"
.
#கடவுள் :
"மன்னிக்கவும்.......
குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள்...."
.
#மனிதன் :

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா?"
.
#கடவுள் :
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."
.
#மனிதன் :
"என் உடலா?"
.
#கடவுள் :
"அதுவும் உனக்கு சொந்தமானதல்ல....
உடலும் குப்பையும் ஒன்று...."
.
#மனிதன் :
"என் ஆன்மா?"
.
#கடவுள் :

"அதுவும் உன்னுடையது அல்ல...,
அது என்னுடையது......."
.
●மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்..கண்ணில் நீர் வழிய கடவுளிடம்,
"என்னுடையது என்று எதுவும் இல்லையா?"
எனக் கேட்க,
.
#கடவுள் சொல்கிறார்,

"அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்..
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே........"
.
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
.
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
.
-- மகிழ்ச்சியாக வாழ்
அது மட்டுமே நிரந்தரம்..
.
-- உன் இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது
.
வாழுகின்ற
ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்வோம்.🙏