மொத்தப் பக்கக்காட்சிகள்

12/03/2011

மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமை


உலக வரலாற்றில் மனிதகுலம் மூன்று வகையான தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது. முதலாவதாக, கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொண்டு மனிதர்கள் வளர்ந்தார்கள். அடுத்தபடியாக, காட்டுவாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்றவற்றின் தாக்குதல்களைச் சமாளித்து வாழ அவர்கள் கற்றுக் கொண்டார்கள். வாழ்க்கைமுறை செம்மைப்பட்டு, வீடு - ஊர் - நாடு என்று சமுதாயம் வளர்ந்த பின்னர், மற்றொரு விதமான ஆபத்து மனிதர்களுக்கு வந்தது. மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக மாறி, மற்றவர்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால், தாக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான் பெருமளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது.

அத்தகைய மனித நேயம்மிக்க உத்தமர்கள் தற்காலத்திலும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். 2001 செப். 11 நியூயார்க் நகரின் உலக வர்த்தகக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டு, அமெரிக்க இராணுவத் தலைமையிடமான பெண்டகன் தாக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவின் சீற்றமும் இராணுவ பலமும் ஒன்று சேர்ந்து, மத்திய ஆசிய நாடுகள் நோக்கிச் சென்று, தற்பொழுது இராக் நாட்டு மக்களை அல்லற்படுத்தியபடி இருக்கின்றன.

இதை உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள் மட்டுமல்ல, அமெரிக்க மக்களில் பலரும் கண்டித்திருக்கிறார்கள். தேசபக்தி - மதப்பற்று ஆகியவற்றைக் கடந்து, போர்நிலைமையிலும் அவர்களில் ஒரு சிலரின் மனித நேயம் மிகவும் உயர்ந்து நிற்கிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பெய்த் பெப்பிங்கர் என்பவர் குருடர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின்பும் தொடர்ந்து ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவும் பணியில் உலக அளவில் அவர் ஈடுபட்டார். புத்தரின் அன்பு மார்க்கத்தால் ஈர்க்கப்பட்ட அவர், 2002-ம் ஆண்டு மத்தியில் இந்தியா - நேபாளம் - திபெத் பகுதியில் இருந்த புத்த மார்க்க இடங்களைப் பார்க்க வந்தார்.

அமெரிக்காவின் போர் சரியானதல்ல என்று ஆர்ப்பாட்டம் செய்வதுமட்டும் போதாது என்று நினைத்த பெய்த் அம்மையார், போரினால் பாதிக்கப்படும் இராக் மக்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்று நினைத்து, ஜோர்டான் நாடு சென்று அங்கிருந்து பாக்தாத் சென்றார்.

தாயகம் திரும்ப வேண்டுமென்று அமெரிக்க அரசாங்கம் விடுத்த உத்தரவுகளையும் மீறி, 62 வயதான பெய்த், பாக்தாத் நகரில் தங்கி, போரினால் பாதிக்கப்பட்ட இராக் மக்களுக்கு உதவத் தலைப்பட்டார்.

அதுபற்றி அவர் கூறுவதாவது: ""நான் சென்றது சதாம் உசேனுக்கு ஆதரவாக அல்ல. ஒரு சர்வாதிகார ஆட்சிக்கும் அமெரிக்க இராணுவ பலத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காகவே நான் சென்றேன். விமானத் தாக்குதலால் இறந்தவர்களைவிட, கை கால் இழந்து கதறும் முடவர்கள், குழந்தையின் பிணத்தைத் தாங்கியபடி கண்ணீர் விடும் தாய்மார்கள், இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அழுதிடும் குடும்பத்தினர், இவர்கள் என்னை அழச் செய்தனர். அதே சமயம் இராக்கில் உயிர்விடும் அமெரிக்க - நேசநாட்டுப் போர்வீரர்களுக்காகவும், நான் கண்ணீர் விட்டேன். இந்த இருசாராருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த விதமான பகையும் வெறுப்பும் கிடையாது. குண்டடிபட்டுக் கைகளை இழந்த ஒரு கர்ப்பவதி, நான் இருந்த மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அழுகின்ற குழந்தையை எடுக்க முடியாமல், "ஐயோ! என் குழந்தையைத் தூக்கக்கூட எனக்குக் கைகளில்லையே!'' என்று கண்ணீர்விட்டு, அவள் கதறிய பரிதாபம் என் மனக் கண்ணில் இன்றைக்கும் இருக்கிறது. நான் அமெரிக்காவைச் சேர்ந்தவள் என்று தெரிந்த பின்பு அவர்கள் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி, "ஏன் இந்தப் போர்?' என்பதுதான். அதற்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. என்னிடம் இருந்த பணம் செலவாகிவிட்ட நிலையில், அவர்களுக்குச் சுமையாக இருக்க மனமில்லாமல், நான் திரும்ப அமெரிக்கா வந்து சேர்ந்தேன்''.

தாயகம் திரும்பிய அந்த அன்பு மூதாட்டிக்கு அமெரிக்க அரசாங்கம் ஒரு வினோதமான வரவேற்பைத் தந்தது. அமெரிக்க உத்தரவை மீறி இராக் நாட்டில் தொடர்ந்து இருந்தது குற்றம். அந்தக் குற்றத்திற்காக, 12 ஆண்டுகள் சிறை செல்ல வேண்டும் அல்லது ஒரு லட்சம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்ற சட்டப்பிரிவை அவருக்கு அரசாங்கம் அனுப்பி வைத்தது.

இதுபற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்டபொழுது அவர் சொன்னார்: ""அரசாங்கத்தின் அழிவு வேலைக்குப் பயன்பட, என் பணத்தை நான் தரமாட்டேன். காந்தியார் கூறிய அகிம்சை முறையில் நான் போராடுவேன். எத்தகைய நிலைமைக்கும் நான் தயாராக இருக்கிறேன்!'' இதுவரை அவர்மீது அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

""நாட்டுப்பற்று என்பது ஒரு நாட்டைப் பாதுகாக்கப் பயன்பட வேண்டுமே தவிர, நாட்டை ஆளுகின்ற அரசாங்கம் செய்கிற தவறுகளைப் பாதுகாக்க அது பயன்படக்கூடாது!'' என்று மார்க் ட்வெயின் கூறியதை அமெரிக்க மக்கள் இன்று நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.

மகாத்மா காந்தி கூறிய அகிம்சை முறையை நினைவுபடுத்தி, ஓர் அமெரிக்க மாது மனித நேயத்துடன் போரில் உள்ள எதிரி நாட்டுக்குச் சென்று பணிபுரிந்தார். காந்தியார் தலைமையில் விடுதலை பெற்ற இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் காந்தியார் பிறந்த குஜராத் மாநிலத்தில் எந்த அளவு அவரின் அகிம்சை முறை நிலவுகிறது? ""குஜராத்தில் நேர்ந்தவை சோகமயமான, கடுமையான கண்டனத்துக்கு உரிய வன்முறைச் சம்பவங்கள்'' என்று அண்மையில் லண்டன் சென்ற இந்தியப் பிரதமர் வாஜபேயி கூறினார். குஜராத்தில் இனக் கலவரம் கோரத்தாண்டவமாடிய நேரத்தில், அரசாங்கமும் சட்டம் - ஒழுங்கும் அமைதியாக உறங்கிய நேரத்தில், உத்தமர்கள் சிலர் மனிதப் பண்பும், மனித நேயமும் உள்ளவர்களாக நடந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பத்திரிகையில் வந்த செய்தியின்படி, ஒரு வயதுள்ள அபாஸ் என்ற சிறுவன் கோத்ராவில் தன் தாய் - தந்தை இருவரும் உயிருடன் மண்ணில் புதைக்கப்படும் கோரக்காட்சியை நேரில் கண்டான்; குவிக்கப்பட்ட மண்மேட்டையும் அதன்மீது போடப்பட்ட கருங்கல் பாரத்தையும் அகற்ற முடியாமல் அவன் கதறினான். நைரன் என்ற மற்றொரு சிறுவனின் கண்ணெதிரில் அவனது தந்தையை ஓட ஓட விரட்டி வெட்டி ரத்தம் பீறிட அவரைச் சில வெறியர்கள் மண்ணில் சாய்த்தனர்.

இந்த இரு சிறுவர்களும் இஸ்லாமிய ஜமாத்தால் நடத்தப்படும் ஓர் அநாதை இல்லத்தில் தற்பொழுது இருக்கிறார்கள். முதலில் ஜமாத் நடத்திய அந்த அநாதை இல்லம் ஒரு முஸ்லிம் பிரமுகரின் நிலத்தில் வைக்கப்பட்டிருந்ததாம். கலவரம் கடுமையான நேரத்தில், நிலத்துக்குச் சொந்தக்காரர் தனது நிலத்தைவிட்டு வெளியேறிவிடுமாறு அநாதை இல்ல நிர்வாகத்துக்குக் கூறினார். இருக்க இடமில்லாமல் அநாதை இல்லமே ஒரு அநாதையாக ஆகிவிட்டது. அந்த நேரத்தில் ஒரு பிரமுகர் - நவீன் சந்திர பாட்டியா என்னும் இந்து பிரமுகர் தமக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை அளித்து, அந்த அநாதை இல்லம் நடைபெற உதவினார். அத்துடன், இஸ்லாமிய சிறுவர்களுக்கு நிரந்தரமாகக் கல்வி தருவதற்கும் தங்கியிருப்பதற்கும் தேவையான கட்டடங்களைக் கட்டிக்கொள்ளவும், தம்மிடமுள்ள 100 ஏக்கர் நிலத்தைத் தந்திடவும் முன்வந்துள்ளார். மதவெறி தாண்டவமாடிய நேரத்தில் ஓர் இந்துப் பிரமுகர் முஸ்லிம் சிறுவர்களைக் காப்பாற்ற முற்பட்டார். இஸ்லாமியச் சிறுவர்களை இஸ்லாமியப் பிரமுகர்கள் கைவிட்ட நேரத்திலும், இந்துவாகப் பிறந்த ஒருவர், இந்துவாக அல்ல, ஒரு மனிதனாக, மனித நேயத்துடன் நடந்துகொண்டார்.

"உண்டால் அம்ம இவ்வுலகம்' என்ற புறநானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறர்க்குரிய சான்றோர்களில் சிலர் மனித நேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் என்பது இருக்கிறது. இன - மத - தேச வேறுபாடுகளைக் கடந்து, மனிதனை மனிதனாக மதிக்கும் மனித நேயம் மனித குலத்துக்கு நம்பிக்கையைத் தருகிறது.

"அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய், தம்நோய்போல் போற்றாக் கடை'' என்பது வள்ளுவம்.

கல்வியறிவு, செல்வச் செழிப்பு, பட்டம், பதவி ஆகியவை பெருமளவில் ஒருவனுக்குக் கிடைத்திருந்தாலும், அவற்றுடன் மனித நேயம் என்பது அவனிடம் இல்லை என்றால், சேர்ந்துள்ள மற்ற வசதிகளால் அவனுக்கோ அவன் சார்ந்த சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும்!

இந்தியாவில் அணுமின் உற்பத்தி தேவையா?

 
மனித இனத்தின் வளர்ச்சிக்கு சோஷலிச சிந்தனையின் வழிப்பட்ட அரசும், மின்சக்தியும் அவசியம் என்று மாமேதை லெனின் சோவியத் விடுதலையின்போது குறிப்பிட்டார். அந்நாளில் அவர் அணுமின்சக்தியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. வளர்ச்சி (வீக்கம்) என்ற ஆசையால் உந்தப்படும் அணுமின்சக்தி ஆதரவாளர்கள், அதில் உறைந்திருக்கும் பேரழிவைக் குறைத்து மதிப்பிடுவது கவலையளிக்கிறது.

 கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தென்கிழக்கே, 104 கி.மீ. தொலைவில், கடலுக்கடியில் ஓர் எரிமலை இன்றும் கனன்று கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.÷உலக எரிமலை ஆய்வு நிறுவனத்தால் "0305-01' என்று குறிப்பிடப்படும் இந்த எரிமலை, 1757-ம் ஆண்டு ஜனவரி 20-ம் நாள் வெடித்துச் சிதறியதாக ஆவணங்கள் உள்ளன. பூம்புகார் நகரம் கடல்கோளால் மூழ்கியது என்ற இலக்கியங்களின் கூற்றும், அகழ்வாய்வில் அதற்கான தடயங்கள் உள்ளதும் நாமறிந்ததுதான்.
 
 அணுமின் நிலையங்களின் கதிர்வீச்சின் விளைவாக, தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளர்ச்சிக் குன்றல், வயிற்றுப்புண் எனப் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
 
இவ்வனைத்தையும் மறந்துவிட்டு மின்சாரத்தின் தேவையை மட்டுமே முன்னிலைப்படுத்தும் அணுமின்சக்தி ஆதரவாளர்கள், தற்போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி சரியான முறையில் செலவிடப்படுகிறதா என்பதைப் பற்றி பேசுவதே இல்லை.
 
 இந்நாட்டில் உற்பத்தியாகும் மின்சக்தி நம் மக்களின் தேவைகளுக்கு, வேலை வாய்ப்புக்கு, உள்நாட்டு நுகர்வுக்கான உற்பத்திக்கு என முன்னுரிமை கொடுத்து திட்டமிடுவதை விடுத்து, ""ஏற்றுமதி பொருளாதார நோக்கில்' செலவிடப்படுகிறது என்ற உண்மையை விளக்க மறுக்கின்றனர்.
 
 ÷எடுத்துக்காட்டாக, சென்னை துறைமுகத்திலிருந்து தினமும் 300 மகிழுந்துகள் ஏற்றுமதியாகின்றன. இது 16 லட்சம் யூனிட் மின்சாரச் செலவில் உருவானது.
 
 இதுபோலவே மென்பொருள் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் பி.பி.ஒ. பன்னாட்டு நிறுவனங்கள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், மால்ஸ் எனும் பேரரங்குகள், கேளிக்கை-விற்பனை அரங்குகள் என சென்னை பகுதியில் அமைந்துள்ள 1000-க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட கட்டடங்கள் நாளொன்றுக்கு பல லட்சம் யூனிட்டுகள் மின் சக்தியை நுகர்கின்றன.
 
 இந்தியாவில் தனி மனித ஆண்டு மின் நுகர்வு 704 யூனிட்டுகள்.
 மக்கள்தொகையில் 33 சதவிகிதம் பேர் மின் இணைப்பற்றவர்கள். இந்த நுகர்வு ஐரோப்பியர்களின் நுகர்வில் 11 சதவிகிதம் மட்டுமே. எனவே, இந்திய ஆட்சியாளர்கள் உரத்து கூச்சலிடும் மின்சக்தி தேவை என்பது யாருடைய நலன்களுக்காக என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
 
நம் நாட்டில் 65 சதவிகிதம் மக்கள் வேளாண் துறையை சார்ந்துள்ளனர். தற்போது உலகில் உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து, விலையும் அதிகரித்திருக்கும் சூழலில், வேளாண் உற்பத்தித் திறனையும், உற்பத்தியையும் பெருக்கி, வேளாண் பொருள்களின் மதிப்புக் கூட்டும் செயல்பாடுகளில் அரசு முனைந்து செயல்பட்டு, நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (ஜிடிபி) உயர்த்தவும், மக்களின் வறுமையைப் போக்கவும் முன்னுரிமை கொடுத்து மின்சக்தியை வழங்கும் போக்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும்.
 
 ÷இந்தியா உலக மக்கள்தொகையில் 17 சதவிகிதம். எரிசக்தி பயன்பாடு 4 சதவிகிதம்; அமெரிக்கா உலக மக்கள்தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. ஆனால், எரிசக்தி பயன்பாடு 24 சதவிகிதம்.
 
 உலகின் மிகவும் பணக்கார நாடான, தொழில் நுட்பத்திறனில் முன்னோடியான, அமெரிக்கா, தனது தேவையில் 20 சதவிகிதம் அளவுக்கே அணுமின் சக்தியை உற்பத்தி செய்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஓர் அணுமின் நிலையத்தைக்கூடக் கட்டவில்லை. படிப்பறிவால் உலகின் முன்னோடியாக உள்ள அந்நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்க அமெரிக்க அரசினால் இயலவில்லை. அப்படி இருக்கும்போது, இங்கே அணுமின் நிலையம் பற்றிய அச்சம் அடிப்படை இல்லாதது என்று எப்படிக் கூற முடியும்?
 
 ÷இந்தியாவில் தற்போது அணுமின்சக்தி 2.70 சதவிகிதம் மட்டுமே. மின் சக்தியைக் கடத்துவதிலும், விநியோகிப்பதிலும் ஏற்படும் இழப்பு 25 சதவிகிதம் (உலகத்திறன் 9 சதவிகிதம் மட்டுமே).
 
 இதை மேம்படுத்துவதன் மூலம் 16 சதவிகிதம் இழப்பு மிச்சப்படுத்தலாம். இதுபோல மின் திறன் மேம்பாடுகளின் மூலம் குறைந்தது 15 சதவிகிதம் மிச்சப்படுத்தலாம்.
 
 உற்பத்திக்கான சக்தி பயன்பாட்டில் இந்தியாவின் திறன் ஜப்பானுடன் ஒப்பிடுகையில் 27 சதவிகிதம் மட்டுமே. இதை மேம்படுத்தினால் நாம் இருக்கின்ற மின்சக்தியை வைத்தே இரு மடங்கு உற்பத்தியை எட்ட முடியும்.
 
 ÷நீர்மின் நிலையங்கள் மூலம் 90,780 மெகாவாட் மின் உற்பத்திக்கான வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப்பகுதி 2 லட்சம் சதுர கி.மீ. இங்கு சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்கலாம். நம் நாடு மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளதால் நீண்ட கடற்கரையையும், பல்வேறு நதிகள் நாட்டின் குறுக்கே ஓடுவதால் நீண்ட நீர்வழித்தடத்தையும் கொண்டுள்ளது.
 இது நமக்கு இயற்கையில் கிடைத்துள்ள பெருவாய்ப்பாகும். நாளும் 60 லட்சம் டன் பொருள்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு தரைவழி மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு நீர்வழித்தடத்தைப் பயன்படுத்தினால் 86 சதவிகிதம் எரிசக்தி மிச்சப்படும்.
 
இது நாட்டின் எரிசக்தி பயன்பாட்டில், 14 சதவிகிதம் குறைய வழிகாணும். இது 21,000 மெகாவாட் மின்சக்திக்கு சமம். அதாவது, 2.73 லட்சம் கோடி ரூபாய் செலவினைத் தவிர்த்து, அதனை நீர்வழி கட்டமைப்புக்குப் பயன்படுத்தலாம். பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்படுவது குறையும்.
 
 ÷உலக மயமாக்கல் போர்வையில் இந்தியா மேலைநாடுகளின் சந்தைக் காடாக மாறிவருவதையும், இதை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கட்சிகள் ஆதரிக்கிறது என்பதையும் விக்கி லீக்ஸ் பலமுறை அம்பலப்படுத்தியிருக்கிறது. வரும் 20 ஆண்டுகளில், 40 ஆயிரம் மெகாவாட் அணுமின் நிலையங்களை, 6.4 லட்சம் கோடி ரூபாயில் அமைக்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது. இது வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்குத்தான் உதவும் என்பது தெளிவு.
 
 ÷அணுமின் நிலைய விபத்துகளில் சில உங்களது பார்வைக்கு:
 
 4 மே 1987-ல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து
2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர்.
 
 10 செப்டம்பர் 1989-தாராப்பூர் அயோடின் கசிவு - கதிர்வீச்சு பாதுகாப்பு அளவைவிட 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர்.
 
 3 பிப்ரவரி 1995 -கோட்டா ராஜஸ்தான் - ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டுகள் மூடல். செலவு 280 மில்லியன் டாலர்.
 
 22 அக்டோபர் 2002 - கல்பாக்கம்-100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு செலவு 30 மில்லியன் டாலர்.
 
 எல்லா உற்பத்தி நிகழ்வுகளிலும் விபத்து என்பது தாங்கக்கூடிய அழிவு என்பதை உள்ளடக்கியதாக உள்ளதுதான். ஆனால், பேரழிவு என்பது அணுமின் நிலையங்களில் நிகழ வாய்ப்புள்ளது. இது இயற்கை சீற்றங்களினால் மேலும் உயரும் என்பது உண்மை. இம் மின் நிலையங்களில் பெறப்படும் கழிவுப் பொருள்களின் அரை ஆயுள் காலம் என்பது 25,000 ஆண்டுகளாகும். இதைப் பாதுகாப்பது என்பது வருங்கால சமுதாயத்துக்கு நாம் விட்டுச்செல்லும் பேராபத்தல்லவா?
 
 ÷கடந்த 8 மாதங்களுக்கு முன் (மார்ச்-2011) ஜப்பானில் சுனாமி வழி அணுமின்நிலைய விபத்து புகுஷிமாவில் ஏற்பட்டது.
 
 அதைப் பார்வையிட சமீபத்தில் இதழாளர்களை அவ்வரசு அனுமதித்துள்ளது. கதிர்வீச்சைக் குறைத்து, செயலிழக்க வைத்து இந்நிலையத்தை மூட முப்பது ஆண்டுகள் ஆகும் என்பது செய்தி.
 அணுமின் நிலையத்தில் உற்பத்தி இலக்கை அடைய பல மணி நேர இயக்கத்துக்குப் பின்னரே இயலும். இதை அவசியத் தேவை எனக் குறிப்பர். இதன் இயக்கத்தை நிறுத்தவும் பல மணி நேரமாகும். எனவேதான் இந்நிலையத்தை அடி ஆதார நிலையம் என்று அழைப்பர்.
 
 சுனாமியின்போது அணுஉலையை குளிர்விப்பது என்பது மிகவும் சிக்கலானது என்பது ஜப்பானில் புகுஷிமா அணுமின்நிலைய விபத்தின்போது தெளிவாகியது. இதன் கதிர்வீச்சு 200-300 கி.மீ. என்பது கல்பாக்கம்/கூடங்குளத்துக்கும் பொருந்தும்.
 
 உலகமயமாக்கல், ஏற்றுமதி பொருளாதாரம் என்ற மாயையிலிருந்து விலகி, நமது மண்ணுக்கேற்ற பொருளாதாரம், பெருவாரியான மக்களின் உழைப்பு சார்ந்த உற்பத்தி முறைக்கு முன்னுரிமை என்று திட்டமிட்டால்,
 
"அணுமின்சக்தி' இல்லாமலேயே நாம் சிறப்பாக வாழ முடியும்.
 அணுமின் நிலையம் பற்றிய தேவையற்ற பயம்; யாராவது "ரிஸ்க்' எடுக்கத்தானே வேண்டும்; தெருவில் நடந்து போனால் விபத்து ஏற்படும் என்பதால் நடக்காமலா இருக்கிறோம்; அணுமின் சக்தி இல்லாமல் இந்தியா வளர்ச்சியடைய முடியாது - இப்படி எத்தனை எத்தனையோ காரணங்களைக் கூறுபவர்களில் ஒருவர்கூட தங்களையோ, தங்கள் குடும்பத்தினரையோ சின்ன அளவில்கூட "ரிஸ்க்' எடுக்க அனுமதிக்காதவர்கள் என்பதையும் மினரல் வாட்டர் அல்லாமல் சுத்திகரிக்கப்படாத தண்ணீரைக்கூடக் குடிக்காதவர்கள் என்பதையும் மறுக்க முடியுமா?
 
 சின்ன அளவு "ரிஸ்க்' எடுக்கவே பயப்படுபவர்கள் வீட்டு முற்றத்தில் அணு உலையை நிறுவ ஆதரவுக் குரல் எழுப்புகிறார்கள் என்றால், இவர்களது நோக்கம் மக்களை வளப்படுத்துவது அல்ல. வியாபார மற்றும் தொழில் நிறுவனங்களை பலப்படுத்துவதுதான்!
 
 கட்டுரையாளர்: மின் பொறிஞர் - சமூக ஆர்வலர்.

முல்லைப் பெரியாறு அணை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

 
மனித சமுதாயம் அன்பையும், அமைதியையுமே விரும்புகிறது; அவையே போரையும், பூசலையும் விரட்டுகிறது; கலகம் இல்லாத உலகத்தைக் காட்டுகிறது; ஞானியரும், மகான்களும், மேதைகளும் விரும்பியதும், போதித்ததும் அதுவே.

 காலம் காலமாக அறநூல்களும் அவைபற்றியே பேசுகின்றன; ஜாதி, சமயம், இனம், மொழி என்னும் இந்த எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கவே இவை பாடுபடுகின்றன.
 
 ஆனால், இதற்குத்தான் எத்தனை தடைகள்; எதிர்த்து நிற்கும் இடர்ப்பாடுகளும் ஏராளம். மக்களைப் பிரித்து வைக்கவும், மனங்களைக் கெடுத்து வைக்கவும் இடைவிடாமல் பரப்புரை செய்யப்படுகின்றன. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்தானே!
 
 முல்லைப் பெரியாறு அணை பற்றிய விவகாரம் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு விளையாடும் போக்கு பல காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அரசாங்கமே காரணமாக அமையலாமா?
 
 தமிழ்நாட்டுக்கும், கேரளத்துக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 100 ஆண்டுகள் பழைமையான இந்த அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு முனைந்து நிற்கிறது.
 
 இதில் கட்சி வேறுபாடு இல்லை. மார்க்சிஸ்ட் கட்சி அரசாங்கமாயினும், காங்கிரஸ் அரசாங்கமாயினும் அங்கு ஒன்றுபட்டுச் செயல்படுகின்றன.
 முல்லைப் பெரியாறு அணை உடைவதைப்போல "கிராபிக்ஸ்' செய்து குறுந்தகடாக வெளியிட்டார் கேரளத்தின் முந்தைய முதல்வர் அச்சுதானந்தன். இவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்; இப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது; அதன் முதல்வர் உம்மன் சாண்டி ஆட்சிக்காலத்தில் புதிய ஆங்கிலத் திரைப்படம் "டேம் 999' வெளிவந்துள்ளது.
 
 "நூறு ஆண்டுகாலப் பழைமையான முல்லைப் பெரியாறு அணையை முன் எச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும்' என்பதை விளக்குவதுபோல இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அணை உடைவது போலவும் அதிலிருந்து வெளிவரும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானவர்கள் இறப்பதுபோலவும் இப்படத்தில் காட்டப்படுகிறது.
 கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோஹன்ராய் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் நாயகனாக வினய், நாயகியாக விமலாராமன் நடித்துள்ளனர்.
 ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயம் கருதி வலுவற்ற அணையைக் கட்டுகிறார்.
 
 இதனால் அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதன் மூலம் பழைய அணைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.
 
 ஏற்கெனவே இவர் முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து, "டாம்ஸ்' என்ற டாகுமெண்டரி எடுத்துள்ளார். இதற்கு ஹாலிவுட்டில் விருது கிடைத்துள்ளது. இப்போது பழங்கால அணை உடைவதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
 முல்லைப் பெரியாறு அணையைப்போல உலகில் 100 ஆண்டுகாலப் பழைமை வாய்ந்த 4 ஆயிரம் அணைகள் உள்ளன. இதன் எண்ணிக்கை 2020-ம் ஆண்டுவாக்கில் 20 ஆயிரமாக உயரும் என்றும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. ""அணுவால் வரும் அழிவுக்குக் கவலைப்படுகிறோம். அணையால் வரும் அழிவும் மோசமானது'' என்று இவர் கூறுகிறார்.
 1975-ம் ஆண்டு சீனாவில் நிகழ்ந்த பான்கியோ அணையின் பேரிடரில் சிக்கி இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழந்த சம்பவமே இந்தப் படத்துக்கு அடிப்படையாகும் என்று இயக்குநர் கூறியுள்ளார். இது உலகில் ஒன்பதாவது பேரிடர் நிகழ்வாகும். முல்லைப் பெரியாறு அணையிலும் அதே அபாயம் இருப்பதாக இப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 
 "முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தாம். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு, இந்த அணையை உடைத்துவிட்டுப் புதிய அணையைக் கட்டுவதற்குத் தமிழக அரசே ஒத்துழைக்கும்' என்றும் அதன் இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் முல்லைப் பெரியாறு அணை எரியும் பிரச்னையாக மாறிவிட்ட நிலையில் "டேம் 999' படம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
 
 இதுபற்றித் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
 
 முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் நீரால் தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசனம் கிடைக்கிறது என்றும், அணை உடைவதுபோல காண்பிக்கும் காட்சி தமிழக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்தப் படம் திரையிடப்படுவதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் தடைவிதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சியினர் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
 
 தமிழக முதல்வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார். தற்போதுள்ள அணை பாதுகாப்பாக இருப்பதாலும், இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், அரசியல் ஆதாயம் பெறுவதற்காக கேரள மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும், பீதியையும் ஏற்படுத்தாமலும், புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
 ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நவம்பர் 23 அன்று முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் இதற்கு எதிர்மாறாக உள்ளது. "முல்லைப் பெரியாறு அணையில் தற்போது சேமிக்கப்படும் 136 அடி நீருக்குப் பதிலாக 120 அடி தண்ணீரைச் சேமிக்க வேண்டும். மேலும் இந்த அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்ட தமிழகம் ஒத்துழைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்துவதற்காக கேரள எம்.பி.க்கள் பிரதமரைச் சந்திப்பார்கள்' என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
 இந்நிலையில் அணை பற்றிய வரலாற்றை அறிவது மிகவும் அவசியம். பெரியாறு அணை கட்டப்பட்டு 116 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது ஆங்கில அரசு ஒதுக்கியிருந்த நிதி அணை கட்டுவதற்குப் போதுமானதாக இல்லை. அந்த அணைகட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கர்னல் பென்னி குயிக் என்ற ஆங்கிலப் பொறியாளர் இங்கிலாந்து நாட்டில் இருந்த தன் சொத்துகளை விற்று, அந்தப் பணத்தில் இந்த அணையைக் கட்டி முடித்தார்.
 முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் நீரை 1895 அக்டோபர் 10 முதல் 999 ஆண்டுகள் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அப்போது ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் சென்னை அரசாங்கமும், திருவாங்கூர் சமஸ்தானமும் கையொப்பமிட்டுள்ளன.
 1979-ம் ஆண்டுவரை ஒப்பந்தப்படி பெரியாறு அணையிலிருந்து நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால், கேரளத்தில் உள்ள "இடுக்கி' அணைக்கு நீர் வரத்தைக் கூட்டக் கருதிய கேரள அரசு, பெரியாறு அணையில் கூட்டப்படும் நீரின் அளவைக் குறைத்து, அதை "இடுக்கி' அணைக்குத் திருப்ப நினைத்தது. இதற்கு அணை பலவீனப்பட்டுவிட்டதாகப் பொய்யான காரணங்கள் கூறப்பட்டன. போலியான போராட்டங்கள் நடத்தப்பட்டு அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது.
 
 இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று 2006 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கும் கட்டுப்பட மறுத்து, 2006 மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி பெரியாறு அணையை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.
 இதன் மூலம் கேரள அரசு நீதிமன்றத் தீர்ப்பையே கேலிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சட்டத்தை எதிர்த்தும் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்துள்ளது.
 
 இது இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில் கேரள அரசு இப்போது தன்னிச்சையாக புதிய அணையைக் கட்ட முடிவெடுத்திருப்பது "நீதிமன்ற அவமதிப்பு' இல்லையா?
 
 இயற்கை நியதி, மனிதநேயம், அரசாங்க ஒப்பந்தம், நீதிமன்றத் தீர்ப்பு என எதைப் பற்றியும் கவலைப்படாமல் மக்கள் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் செய்வதை மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
 நியாயங்களையும், சட்டங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு ஓர் அரசாங்கம் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்க முடியுமா? அண்டை மாநில உறவுகளை அலட்சியம் செய்துவிட்டு ஒருமைப்பாடு பற்றி உபதேசம் செய்வதால் பயன் என்ன?
 
 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை இரண்டு மாநில மக்களின் உறவுக்கும், ஒற்றுமைக்கும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோல இந்தத் திரைப்படம் "டேம் 999' வெளிவந்திருக்கிறது. இதற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாகும்.
 
 ""எனக்கு உயிர்களிடம் அன்பு கொள்ளுவது போன்றதுதான் தேசப்பற்றும். நான் மனிதனாகவும், மனிதநேயத்துடனும் இருப்பதினாலேயே தேசப்பற்று கொண்டவனாகவும் இருக்கிறேன்.
 
 இந்தியாவுக்குச் சேவை செய்வதற்காக இங்கிலாந்துக்கோ, ஜெர்மனிக்கோ தீங்கிழைக்க மாட்டேன்'' என்றார் காந்தியார். தம் மாநில மக்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காக அடுத்த மாநிலத்தின் உரிமையை மறுக்கலாமா?
 இந்திய மக்களுக்காகத் தன் சொத்துகளை விற்று, அணை கட்டிய ஆங்கிலேயனின் மனிதநேயத்தைப் பாராட்டுவதா? அண்டை மாநிலத்துக்கே தண்ணீர் தர மறுக்கும் சொந்த நாட்டுச் சோதரனைப் பாராட்டுவதா? இந்திய தேசிய ஒருமைப்பாடு படும் பாடு இதுதானா?
 
Thanks to Dinamani News Magazine

பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?

வால் தெருவைக் கைப்பற்றுவோம்'' என்னும் போர் முழக்கம் அண்மை க்கால உலகில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
 வால் தெரு அமெரிக்க முதலாளித்துவத்தின் புகலிடம்! ""பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?'' என்னும் வெளிப்படையான கேள்வி அமெரிக்காவை மூச்சுத் திணறச் செய்துவிட்டது.
 உலகின் பாதி சிவப்பாகிவிட்ட காலகட்டத்தில்கூட, இப்படி ஒரு போராட்டம் அமெரிக்காவில் வேர் பிடிக்க முடியவில்லை.
 உலகெங்குமுள்ள நாடுகள் சுரண்டப்படுவதால், குவிந்து வழிகின்ற செல்வத்தில் அடிமட்ட மக்களுக்குப் பங்கில்லை என்றாலும், வழிவதைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பாவது அவர்களுக்கு இருந்தது. அதோடு அவர்கள் அமைதியடைந்தனர்.
 இன்று "உயிரைக் கையில் பிடித்துக் கொண்டாவது வாழலாம்' என்னும் நிலைக்கும் மோசம் வந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம்;கிடைக்கும் வேலைக்கும் போதிய ஊதியம் இல்லை என்பது இன்னொரு புறம்.
ஒபாமாவுக்கு முந்திய காலத்திலேயே இந்தச் சிக்கல் தோன்றிவிட்டது. ஆயினும், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் சிறந்த தீர்வைத் தன்னால் வழங்க முடியும் என்று ஒபாமா தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்!
 ""இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்த அந்த மக்கள் நாம்தாம்!'' ஒபாமாவின் இந்த முழக்கம் அமெரிக்கர்களுக்குக் கிளர்ச்சி ஊட்டியது. அந்தத் தருணம் வந்துவிட்டதாக மக்கள் நம்பினார்கள்.
 மூடி இறுகிப் போயிருந்த கதவுகளை ஒபாமா திறந்துவிடப் போகிறார்; வாழ்க்கைச் சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரப்போகின்றன என்று எதிர்பார்த்திருந்தார்கள்.
 பொருளாதார முறை மாறாமல் பீடத்தில் அமர்கின்ற மனிதர்கள் மாறுவதால் என்ன மாற்றம் வந்துவிட முடியும்?ஒபாமா இன்று புறந்தள்ளப் பட்ட மனிதராகிவிட்டார்!
 1989-ல் சோவியத் நாடு சீர்குலைந்து சிதறிச் சின்னாபின்னப்பட்ட பிறகு, தம்பட்டம் அடித்துக்கொண்டு உயர்ந்தெழுந்த தாராளமயமாக்கல் கொள்கை உலகை ஒரு கிராமமாகச் சுருக்கி பன்னாட்டு முதலாளிகளை வெடித்துப் போகுமளவுக்குப் பெருக்கச் செய்தது.
 அந்தக் கொள்கை உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தது. மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும், ப. சிதம்பரமும் இந்தியாவில் அந்தக் கொள்கை ஈன்றெடுத்த மக்கள்தாம்!
 நாளொன்றுக்கு 32 ரூபாய் வருவாய் உள்ளவனும், ஒரு கணவனும், மனைவியும் இரு மக்களும் வசிப்பதற்கு 77 மாடிகள் கொண்ட வீட்டை 7,000கோடி ரூபாய்க்குக் கட்டிக் கொண்டுள்ள அம்பானியும் வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் என்று ஒரே தட்டில் வைத்துச் சமப்படுத்த நினைக்கும் மன்மோகன் அரசின் கொள்கைகள் தாராளமயமாக்கல் கொள்கையிலிருந்து இரவலாகப் பெற ப்பட்டவைதாம்.
 ஒரு தனிமனிதன் தன்னுடைய சிறு தொழில் முறிந்து திவாலாகிப் போகின்றபோது கண்டுகொள்ளாத ஓர் அரசு, விஜய் மல்லைய்யாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் கடனில் மூழ்குகின்றபோது கவலை கொள்கிறது.அரசு கை கொடுக்க வேண்டும் என்பதை ஒரு கடமையாக்குகிறது அந்த நிறுவனம்; அப்படிச் செய்வது இன்றியமையாதது என்று மத்திய அமைச்சர் வயலார் ரவியும் பரிந்துரைக்க முந்துகிறார்.
 இதேபோல் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் வங்கிகள் முறிவுற்றபோதும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நலிவுற்றபோதும், அவற்றுக்கு முட்டுக்கொடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் முனைந்து நின்ற நிலையில் மக்களிடம் ஏற்பட்ட கொதிப்புத்தான் இந்த "வால் தெருவைக் கைப்பற்றுவோம்' என்ற போராட்டம்.
 மக்களின் வரிப்பணம் பெருமுதலாளிகளை முட்டுக்கொடுக்க ஏன் செலவு செய்யப்பட வேண்டும்? அவர்களின் நிறுவனங்களைக் காக்க அரசு ஏன் முன்னுரிமை அளிக்க வேண்டும்?
 வளம் கொழிக்கச் செய்யும் பொருளாதாரக் கொள்கை என்றீர்களே! தொண்ணூறு பேரை உறிஞ்சிப் பத்துப் பேர் வாழ்வது என்ன கொள்கை?
 வசதியுள்ள சிலருக்கும் வசதியற்ற பலருக்கும் உலகம் இதுவரை அறிந்திராத வகையில் இடைவெளி அகன்று போயிருப்பதுதானே இந்தக் கொள்கையால் ஏற்பட்ட பயன்?
 பெருமுதலாளிகளோடு கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவதன் விளைவுதானே இந்த அராஜகப் போக்கு!
 கூழுக்குப் போட உப்பில்லை என்பானுக்கும், பாலுக்குப் போடச் சீனி இல்லை என்பானுக்கும் கவலை ஒன்றுதான்! ஆனால், தேவை ஒன்று தானா? எவனுடைய தேவை முன்னுரிமை உடையது?
 "கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்னும் நூலில் சான்ரசுகின் சொல்வார்:
""ஒருவனிடம் பத்து ரூபாய் இருப்பதால் அவன் மகிழ்ச்சியடைவதில்லை; பக்கத்திலிருக்கும் இன்னொருவனிடம் அந்தப் பத்து ரூபாய் இல்லாதபோது தான் அவன் மகிழ்ச்சி அடைகிறான். அப்போதுதான் அடுத்தவனுக்கு ஒரு விலை குறிக்க முடியும்?''
 தாராளமயமாக்கல் கொள்கை மேட்டுக்குடியினர்க்கும், அடிமட்ட நிலையினர்க்கும் இருக்கும் இடைவெளியை மென்மேலும் பெருக்குவதில்தான் உயிர்த்திருக்கிறது.
 2008-ல் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கும் பொருளாதாரச் சீர்குலைவின் விளைவுதான் பெருமுதலாளிகளுக்கு எதிராக ஆங்காங்கே வெடித்துக் கிளம்பும் இந்தப் போராட்டம்!
 கிரீசு நொறுங்கிவிட்டது; இத்தாலி தவியாய்த் தவிக்கிறது. அயர்லாந்து நன்றாக இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் எந்த நாட்டு மக்கள்தான் நிறைவாக வாழ்கிறார்கள்?
 அமெரிக்காவின் நியூயார்க், இங்கிலாந்தின் லண்டன், இத்தாலியின் ரோம், ஜெர்மனியின் பிராங்பர்ட், ஸ்பெயினின் மாட்ரிட், போர்ச்சுகலின் லிஸ்பன், செர்பியா, மெக்ஸிகோ, பெரு, சிலி என 82 நாடுகளில் 951 நகரங்களில் "வால் தெருவைக் கைப்பற்றுங்கள்' என்னும் போர்த் தீ கொழுந்து விட்டு எரிகிறது.
 இந்தப் போராட்டத்தின் சிறப்பு அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் இதன் களங்களாக உள்ளன என்பதுதான். இன்னொரு சிறப்பு, குறிப்பான எந்தத் தலைவனாலும் இது வழிநடத்தப்படவில்லை என்பது. தானாக வெடித்துக் கிளம்பிய ஒன்று இது!
 பிறிதொரு பெருஞ்சிறப்பு, இந்தப் போராட்டம் எந்தக் குறிப்பிட்ட தனியொரு ஆட்சியாளனுக்கும் எதிரானதில்லை.
 கோபம் ஒபாமா மீதன்று, கடைப்பிடிக்கப்படும் பொருளாதார முறையின் மீதானது.
 ஒபாமாவானாலும், புஷ் ஆனாலும், மன்மோகன் ஆனாலும், அத்வானி ஆனாலும், எவரானாலும் போர்டு நிறுவனத்துக்கும், அம்பானிகளுக்கும் சேவை செய்ய வந்தவர்களே!
 2008-ல் பல மேலைநாடுகளைத் தாக்கிய பொருளாதார மந்தம் என்னும் நிலை இந்தியாவைத் தாக்கவில்லை என்று மன்மோகன் ஒரு முறை மகிழ்ந்தார்.
 ஆனால், அதற்கு முன்னரே இந்தியாவின் நிலை கவலைக்கிடம். அங்கே 82 நாடுகளில் போராட்டம் என்றால் இந்தியாவில் ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், ஆந்திரம், மேற்கு வங்கம்,உத்தரப் பிரதேசம் போன்ற ஒன்பது மாநிலங்களில் 60 மாவட்டங்களில் நம்முடைய ஆட்சியும் இல்லை; அரசியல் சாசனமும் இல்லை. அவை மாவோயியவாதிகளின் பிடியில் இருக்கின்றன.
 ஆந்திரம் தொடங்கி நேபாளம் வரை அந்த இயக்கம் வேர் பி டித்து நிலைபெற்றிருக்கிறது.
 இந்தியாவின் உள்துறை அமைச்சராகத் திகழும் ப. சிதம்பரம், ""மாவோயியம் என்பது பயங்கரவாதத்தை விடக் கொடுமையானது'' என்று சொல்கிறார்.
 அவரால் பயங்கரவாதத்தையும் ஒழிக்க முடியவில்லை; மாவோயியத்தையும் ஒழிக்க முடியவில்லை.
அலைக்கற்றை ஊழலில் இவர் பெயரும் சேர்ந்து அடிபடத் தொடங்கிய உடனே,இவர் சனியின் பீடிப்புத்தான் இதற்குக் காரணம் என்று ஒரு நவக்கிரகக் கோயிலுக்குத் தன் மனைவி, மகன், மருமகளுடன் சென்று காக்கை மண்பொம்மையைத் தலையில் சுமந்துகொண்டு குடும்பத்துடன் மூன்று முறை பிராகாரம் வந்திருக்கிறார்.
மாவோயியத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்குக்கூட ஏதாவது ஒரு தீர்த்த யாத்திரைக்குச் சிதம்பரம் திட்டமிட்டு வைத்திருக்கக் கூடும்!
 60 மாவட்டங்களில் மாவோயியவாதிகள் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் என்ன?
 இந்தியா முழுவதும் வனச் செல்வம், மலைச் செல்வம், சுரங்கச் செல்வம் ஆகியவை கடந்த சில காலங்களாகக் கொள்ளையடிக்கப்பட்டு சூறையாடப்பட்டன.ஆட்சியாளர்களும் தொழில் நிறுவனங்களும் கூட்டாளிகள்!
 மதுரைக்குப் பக்கத்தில் கீழவளவில் இருந்த ஒரு மலையே காணாமல்போய், மலை இருந்த இடம் சமதளம் ஆகிவிட்டது.
 அழகிரி ஆசீர்வாதம் மலைக்குக் கிட்டாமல், சில மனிதர்களுக்குக் கிட்டியமையால் மலை தன் ஆவியைத் துறந்துவிட்டது என்கிறார்கள் சுற்றுப்புறத்தில் வாழும் பொதுமக்கள்.
 கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கைங்கர்யத்தால் ஒரு சுரங்கமே சீனாவுக்கு ஏற்றுமதியானது; எல்லாம் நம் அரசின் துணையோடுதான்.
 அதில் அடித்த கொள்ளையைக் கொண்டு ரெட்டி சகோதரர்களால் எடியூரப்பாவின் அரசை உருவாக்கவும் முடிந்தது; அவரைக் கண்ணீர் விட வைத்துக் கீழிறக்கவும் முடிந்தது.
 மாவோயிய முறைகள் நியாயமானவை என்பதல்ல; சுரண்டல்காரர்களோடு கூட்டணி சேரும் ஆட்சியாளர்கள்தாமே மாவோயியவாதிகளின் பிறப்புக்குக் காரணம்.
 பெருமுதலாளிகளின் கருவறையில் அவர்களுக்கு எதிரானவர்கள் வளர்கிறார்கள் என்பதுதானே மார்க்சீய அறிவு வாதம்.
 மாவோயியவாதிகளோடு மன்மோகன் சிங்குக்குள்ள கோபமே கனி வளங்களைச் சந்தைப்படுத்த முடியவில்லை என்பதுதானே.
 தாராளமயமாக்கல் என்பதன் தாரக மந்திரம் சந்தை. தன்னுடைய பேரழகு மனைவியின் மேகம் போன்ற பெருங்கூந்தல் கூட ஒரு தொழில்முனைவோனுக்குச் சந்தைப் பொருள்தான்!
 "வால் தெருவைக் கைப்பற்றுவது' என்பதன் பொருள் சுரண்டலை ஒழிப்பது என்பதுதான்.
 பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?
 
posted by Dinamani

தேவை-மனித நேயம்!

சாலையோரங்களில் திரியும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு நீதிமன்றம் மூலம் அவர்களை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம், கடந்த ஜூலையில் காவல்துறை டிஜிபிக்கு ஓர் உத்தரவை பிறப்பித்தது.
மனநலம் பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி உத்தரவிட்டு அதனை 6 மாதத்துக்கு ஒரு முறை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியது.
திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாநகராட்சிப் பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக சுற்றுலா இடங்களான ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர்.
இவர்கள், சில நேரங்களில் ஆடையின்றி அலைவது பார்ப்பவர்களை வேதனையடையச் செய்கிறது. இவர்களில் மனநலம் பாதித்த பெண்களும் விதிவிலக்கு அல்ல.
அரசு மருத்துவமனைகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் பலர் உள்ளனர்.
பெரும்பாலானவர்கள் சாலைகளில் செல்லும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றனர்.நோயால் ஒரே இடத்தில் பல நாள்கள் கிடந்து சிலர் இறக்கின்றனர். இவ்வாறு இறந்தவர்களை போலீஸôர் மீட்டு அனாதை பிணமாக அடக்கம் செய்கின்றனர்.
மனநலம் பாதித்தவர்களில் சிலர் நீண்டதொலைவுக்கு நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும்போது இரவில் வாகனங்கள் மோதி இறக்கின்றனர். அடுத்து சாலையில் வரும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சடலத்தில் ஏறிச் செல்வதால் கடைசியில் சடலம் சிதைந்து அடையாளம் தெரியாமல் ஆகிவிடுகிறது.
மனநலம் பாதித்தவர்களை ஆரம்ப நிலையில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால் 90%சதம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இவர்களை யார், எப்படி மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பது என்பதுதான் இப்போது எழுந்துள்ள பிரச்னை.
காவல்துறையால் மட்டும் இதனைச் செய்துவிட முடியாது.தொண்டு நிறுவனங்கள் முழுமையாக இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
முதலில் இவர்களைப் பற்றி மாவட்டவாரியாக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் தெரிய வரும்.
இன்றைய சூழ்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களே தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மனநோயாளிகளாகத் திரிவதை பார்க்க முடிகிறது.
தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து மனநலம் பாதித்தவர்களை போலீஸôர் மீட்க வேண்டும்.
மீட்கப்பட்டவர்களை அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவர்கள் மூலம் மனநலப்பாதிப்பின் தன்மையைக் கண்டறிய வேண்டும்.
குணப்படுத்தக்கூடிய தன்மையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாவட்ட மருத்துவமனைகளில் தனி வார்டு ஒதுக்கி சிகிச்சை அளிக்கலாம்.
ஏனைய மனநலம் பாதித்தவர்களை சென்னை கீழ்பாக்கம்அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கலாம்.
மனநோயாளிகளை கையாளுவது என்பது சற்று கடினம் என்றாலும் மனிதநேயத்துடன் இதைச் செய்ய வேண்டும்.
மருத்துவமனைகளில் இதற்கென தனியாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும். வார்டுகள் தனியாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு அரசின் நிதிஒதுக்கீடு தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.
மனநலம் பாதித்தவர்களை மீட்க நீதிமன்றம் அக்கறையுடன் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் அனைத்துத் துறைகளும் கைகோர்த்து இதனைச் செய்வதுதான் மனிதநேயச் செயலாகும்.
Thanks to Dinamani News Paper

கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு



தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும்

தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி. தனது மாணவர் பருவத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கல்வியில் நாட்டம் காட்டவில்லை.

இருப்பினும் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள், தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.தனது இளமை பருவத்தில், வட்டார மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் மறுமலர்ச்சி
அமைப்பைக் தலைவர் கலைஞர்  அவர்கள் உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்திற்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர் கழகம்" என்ற அமைப்பாக உருவாக்கி அதன்மூலம் மொழிபற்றையும் இனமான உணர்வை ஊட்டியவர் நம் தலைவர் கலைஞர்.

தலைவர் கலைஞர் அவர்கள் திருக்குவளை தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தார். அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார்.

தலைவர் கலைஞர் அவர்களின் முதல் போராட்டம்

1936 திருவாரூர் உயர்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள இயலாது என்று தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார் மறுத்தார். இடம் தரவில்லையெனில் எதிரேயுள்ள தெப்பக் குளத்தில் குதித்து உயிரை விட்டுவிடுவேன் என்று கூறியது மட்டுமின்றி, அவ்வாறு குதிக்கவும் முனைந்தார். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு 5-ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க இசைவு  அளிக்கப்பட்டது.
முதல் போராட்டத்தின் வெற்றி இது.


பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி


1938 இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரம். நாள்தோறும் மாணவர்களைக் கூட்டி, கையில் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணி நடத்தினார். இதுவே தலைவர் கலைஞர் பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி எனலாம்.

முதல் சொற்பொழிவு

1939 பள்ளியில் நடைபெற்ற சொற்போட்டியில் “நட்பு” என்ற தலைப்பில் பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. அதே சமயம் தான் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து வாரம்தோறும் பேச்சுப் பயிற்சி அளித்தார். அப்போதே மாணவர்களிடையே வார சந்தா வசுலித்து அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார்.

முதல் அமைப்பு

19.4.1940 மாணவர் ஒற்றுமைக்கென "தமிழ்நாடு" "தமிழ்நாடு மாணவர் மன்றம்" என்கிற தனி அமைப்பு ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தினார்.

1941 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கிளைகள் தஞ்சை மாவட்டத்திலும், தமிழ் நாட்டில் பல இடங்களிலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார்.

முதல் பத்தரிக்கை

1941 மாணவர்களிடையே எழுத்தாற்றலைச் சிறப்பாக வளர்க்க “மாணவநேசன்” என்ற மாத இதழைக் கையெழுத்து ஏடாகத் தொடங்கி நடத்தினார்.

முதல் விழா

1942 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அன்றைய மாணவர்களை அழைத்துப் பேசச் செய்தார். அந்த ஆண்டு விழாவின் போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப்ப பிற்காலத்தில் உணர்ச்சிக் கவிதையாக வரலாற்றுப் புகழ் பெற்று அமைந்தது.

இந்நிகழ்ச்சியின் போது நிதிப் பற்றாக்குறைக்காக தமது கைச்சங்கிலியை அடகு வைத்துச் சமாளித்தார்.

முதல் கட்டுரை

1942 பேரறிஞர் அண்ணா நடத்திய “திராவிட நாடு” மூன்றாவது இதழில் “இளமைப் பலி” என்ற இவரது எழுத்தோவியம் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகைதந்த அறிஞர் அண்ணா அவர்கள் “இளமைப்பலி” கட்டுரை எழுதிய இளைஞர் மு.கருணாநிதியை சந்திக்க விரும்பி, அவரை அழைத்து வரச் செய்து நோரில் சந்தித்து தலைவர் கலைஞரின் எழுத்தாற்றலைப் பாராட்டினார்.

அத்துடன் படிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்டச் சொன்னார். அண்ணாவின் அறிவுரைகளில் தலைவர் கலைஞர் செயல்படுத்தாமல் விட்டது இது ஒன்றுதான். இதே ஆண்டில் தான் “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரால் ஒரு நிறுவனம் தொடங்கி “முரசொலியை” மாத இதழாக 10.08.1942ல் வெளியிட்டார். அதில் “சேரன்” என்ற புனைப் பெயரால் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார்.

முதல் நாடகம்

28.5.1944 திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் (பேபி டாக்கீஸ்) முதன் முதலாகப் ‘பழனியப்பன்’ என்ற சீர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார். திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார் அவர்கள் தலைவர் கலைஞாரின் முரசொலி ஏடு கண்டு மகிழ்ந்த மிகச்சிறந்த பணி என்று பாராட்டினார். அன்று முதல் பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு  ஆவேசமாகப் பேசத்
தொடங்கினார். திராவிட நடிகர் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் ‘பழனியப்பன்’ நாடகத்தை நடத்தியதோடு அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்தார்.

திருமணம்

11.11.44 அன்று பத்மாவதி அம்மையாரை வழக்கறிஞர் விசயராகவலு தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.

கலைஞர் மீது நடந்த முதல் தாக்குதல்

புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது காங்கிரசார் கலைஞைரைக் கடுமையாகத் தாக்கினார்கள். மயங்கி விழுந்து விட்டவரை இறந்துவிட்டார் எனக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டனர். கருணை உள்ளம் கொண்ட தாய் ஒருவரும், இளைஞர் ஒருவரும் அவரைக் காத்தனர். மறுநாள் முகமதியர் போன்று மாறு வேடமணிந்து பொயாரைச் சந்தித்தார்.

பெரியார் தலைவர் கலைஞரைக் கட்டித் தழுவிக் காயங்களுக்கு மருந்திட்டார். தன்னுடன் அழைத்துச் சென்று “குடிஅரசு” வார இதழின் துணை ஆசிரியராக்கினார்.

முதல் கொடி அமைப்பு

19.4.1946 திராவிடர் கழகக் கொடிக்கு மாதிhp அமைத்து நடுவில் உள்ள சிவப்பு நிறத்தைக் குறிக்க, தன் கைவிரலை அறுத்து இரத்தத்தை பதித்தார். முதன் முதலாக தன் குருதியை கொடிக்குக் காணிக்கையாக்கினார். கோவை ஜுபிடர் நிறுவனத்திற்கு கலைப் பணிபுரிய பெரியாரிடம் விடை பெற்றுச் சென்றார்.

தந்தை மறைவின் போது

19.4.1946 தம் தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது மருத்துவரை அழைக்க தலைவர் கலைஞர் சென்றார். அப்போது அந்த மருத்துவர், சித்த வைத்தியர்கள் மாநாட்டினை தலைமையேற்று நடத்திக் கொண்டு இருந்தார். அங்கு வந்த தலைவர் கலைஞரை கண்டதும் மாநாட்டில் உடனே அவரை உரையாற்றிட அறிவித்து விட்டார். தலைவர் கலைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நண்பர் தென்னன், தந்தையின்  மரணச்
செய்தியோடு வந்தார்.

முரசொலி வார இதழை வெளியிட்டார்.

1947 இந்தியாவுக்குச் சுந்திரம் கிடைத்ததைப் பெரியார் தமிழர்களுக்குத் துக்க நாள் என்றார். அண்ணா “அது திராவிடர்களுக்குத் திருநாள்” என்று குறிப்பிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் களைய, பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாலம் அமைக்க முரசொலியில் ‘கடைசி நாட்கள்’ என்ற கட்டுரையைக் தலைவர் கலைஞர் வடித்தார்.

துணைவியாரின் மறைவின் போதும்...

1948 துணைவியார் பத்மாவதி அவர்கள் நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த நேரத்திலும் இயக்கத் தோழர்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் தலைவர் கலைஞர் புதுக்கோட்டைக் கூட்டத்திற்கு உரையாற்றச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து லாரியில் ஊர் திரும்புவதற்குள் தலைவர் கலைஞரின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்.

திருமண நாளிலும்...

1948 தயாளு அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதே நாளில் திருமணத்திற்கு சற்று முன்பு, மணமகன் கோலத்தில் இருந்தபோதும், அவ்வழியே சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் நம் தலைவர் கலைஞர்.

தி.மு.க தொடக்கம்.

17.9.1949 இல் திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. நம் தலைவர் கலைஞர் அதன் தோற்றுநர்களுள் ஒருவர் ஆவர். 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும.1967ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் பொதுபணிதுறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும் அறிஞர் அண்ணா மறைந்த பின் அவரது இதயத்தை இரவல் வாங்கிக் கொண்டு, சோதனைகள்  நிறைந்த கால கட்டத்தில் முதல்வர் பொறுப்பினையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினையும் ஏற்று, கழகத்தையும், கழகம் மேற்கொண்ட கடமைகளையும் காப்பாற்றிய பெருமையானது தலைவர் கலைஞருக்கு மட்டுமே உரிமையானது கழகம் பிளவுபட்ட காரிருள் வேளைகளிலும் கதிரவனாய் முன் நின்று தி.மு கழகத்தை காப்பவர் நம் தலைவர் கலைஞர்.

தலைவரின் வரலாற்றில்....

தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969
தமிழக முதலமைச்சர் 1969 – 1971
இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976
தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983
தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986
மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991
நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001
ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006

நின்றார்! வென்றார்!

தமிழ்நாடு சட்டப் பேரவைக்குக் கீழ்க்காணும் தொகுதிகளில் போட்டியிட்டுத் தலைவர் கலைஞர் பெரு வெற்றி பெற்றார்.

குளித்தலை 1957-62
தஞ்சாவூர் 1962-67
சைதாப்பேட்டை 1967-71
அண்ணாநகர் 1977-76
அண்ணாநகர் 1977-80
அண்ணாநகர் 1980-83
சட்ட மேலவை உறுப்பினர் 1984-1986
துறைமுகம் 1989-91
துறைமுகம் 1991
சேப்பாக்கம் 1996-2001
சேப்பாக்கம் 2001-2006
சேப்பாக்கம் 2006 லிருந்து
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் - மேலவையில் 53 ஆண்டுகளாகப் பதவி வகிப்பவர். 1957 – லிருந்து 2006 வரை போட்டியிட்ட சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிச் சரித்திரம் படைத்தவர், படைத்துக் கொண்ட வருபவர்.

உருவாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள்

தமிழகம் முதல் இடத்தில்

* இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்,

* உயர் சிகிச்சைக்கான உயிர் காக்கும் கலைஞர் காப்பிட்டு திட்டம்,

* முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம்,

* மாற்று திறனாளிகளுக்கு அரசில் வேலை, வேலைக்கு சென்றுவர மூன்று   சக்கர வாகனமும் இலவசம்.

* விடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார்.

*குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைவாசிகளுக்காக அடுக்குமாடி வீடுகள் அமைத்து அவர்களைக் குடியேற்றினார்.

* தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும், இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தந்தார்.

* இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் கீர்திருத்தி அமைத்தார்.

* பணியாற்றும் பொழுது இறக்க நேரிடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.1,00,000 (தற்போது ஒரு இலட்சம்) உதவித் தொகை வழங்கும் முறையைத் தொடங்கி வைத்தார்.

* தனியார் பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கி சேர, சோழ, பாண்டியன், பல்லவன்-திருவள்ளுவர் ஆகியோர் பெயர்களால் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்.

* மாணவர்களுக்கு +2 வரை இலவசப் பேருந்துப் பயணச் சலுகை வழங்கினார்.

* பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ, ஐ.பி.எஸ். பயிற்சி முகாம் தொடங்கினார்.

* மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்க்ஷாவை ஒழித்து, அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்க்ஷாவை வழங்கினார்.

* ஏழையர்க்கு கண்ணொளி வழங்கும் திட்டம் செயல்படுத்தினார்.

* தொழுநோய் மற்றும் இரவலர்க்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தார்.

* ஆதரவற்ற குழந்தைகளைக் காத்திடக் கருணை இல்லம் அமைத்தார்.

* தமிழ்நாட்டில் மே முதல் நாளைத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என அறிவித்தார்.

* தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5% தனி இடஒதுக்கீடு வழங்கினார்.

* கல்வித்துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புத் தேர்வுகளை நடைமுறைப்படுத்தினார்.

* மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கினார்.

* மாநகராட்சி மேயருக்கு நேரடித் தேர்தல் முறையைக் கொண்டு வந்தார்.

* மாநில சுயாட்சி குறித்து ஆராய்ந்திட ‘இராஜமன்னார் குழு’ அமைத்தார்.

* மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்காக 20% இட ஒதுக்கீடு அளித்தார்.

* கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார்.

* தியாகி வ.உ. சிதம்பரனார் சிறையில் மெய்நோக இழுத்த செக்கினைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்து அதை நினைவுச் சின்னமாக்கினார்.

* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது போல், மொழிப்போர் தியாகிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கினார்.

* விடுதலைப் போராட்ட வீரர் இறந்துவிட்டால், அவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என ஆணையிட்டார்.

* ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட ஒரு சிற்றூரைத் தேர்ந்தெடுத்து, அதில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்தினார்.

* சாதி, சமயப் பூசல்களை மறந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்திட நாடெங்கும் சமத்துவபுரம் திறந்து அவற்றிற்குப் பெரியார் நினைவு சமத்துவபுரம் எனப் பெயரிட்டார்.

* நாட்டு மக்களிடையே கூட்டுறவு, தற்சார்பு உணர்வுகளை வளர்த்திட நமக்கு நாமே திட்டம் கொண்டு வந்தார்.

* தமிழ்நாட சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி அதனைத் தில்லிக்கு அனுப்பினார்.

* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலங்காக்கத் தனித்துறை (அமைச்சகம்) ஏற்படுத்தினார்.

* சமூக சீர்திருத்தத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்
.
* இடைத்தரகர்களின் தலையீடு இன்றி உற்பத்தியாளரும், நுகர்வோரும் நேரடித் தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கினார்.

* கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீட வழங்கினார்.

* பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச தொழிற் கல்வி வழங்கினார்.

* மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றினார்.

* உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு மகளிருக்கு இடஒதுக்கீடு

* அரசு அலுவலர்கள், அரசின் நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள். கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றில், பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு செய்தார்.

* நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட சிற்றுந்து (மினிபஸ்) திட்டம் கொண்டு வந்தார்.

* தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் (1969) ‘வங்கிகளை நாட்டுடைமை’ ஆக்கிட யோசனை கூறினார். (இதன் அடிப்படையில்தான் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் 14 தனியார் வங்கிகளை நாட்டுடைமை ஆக்கினார்.

* பன்னாட்டு மூலதனத்தை தமிழ்நாட்டுக்குக் கவர்ந்திட இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பூங்கா என்னும் கணினி மென்பொருள் பூங்காவினை அமைத்தார்.

* அரசு ஊழியர்களைப் பழிவாங்குவதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரகசியக் குறிப்பேடு முறையை ஒழித்தார்.

* தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக மாநில திட்டக்குழுவை அமைத்தார்.

* எட்டாம் வகுப்பு வரை படித்த ஏழை இளம் பெண்களுக்கு அரசின் சார்பில் ரூ.5,000 (அதன்பின் ரூ.10,000- இப்பொழுது ரூ.15,000- திருமண நிதி உதவித் திட்டம் வகுத்தார்)

* ஏழை எளியோருக்கான பன்முனை மருத்துவப் பரிசோதனைத் திட்டமான வருமுன் காப்போம் திட்டத்தை அறிவித்தார்.

* சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி அலுவலகம் கட்ட ரூ.5 இலட்சம் ஒதுக்கீடு செய்தார்.

* தமிழகத்தை இந்தியாவின் டெட்ராய்ட் ஆக மாற்றிய கார் உற்பத்தி தொழிற்கூடங்கள் தொடங்க அனுமதித்தார்.

* உலகத் தமிழ் இணையம் பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்.

* தமிழ்விசைப் பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை சிறப்பாக நடத்தினார்.

* சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு செய்தார்.

* தமிழர்களின் 150 ஆண்டு கனவான சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைக்கு வரச் செய்தார்.

* தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார்.

* தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார்.

* கடல் சார் பல்கலைக் கழகம் அமைக்கச் செய்தார்.

* பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் அதே மேடையில் தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்த 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் அறவே ரத்து, சத்துணவில் வாரம் இரு முறை முட்டைகள் வழங்கல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்து, அதற்கான கோப்புகளில் மக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டார்.

* தந்தை பெரியார் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணியாக தகுதியுள்ள அனைத்து சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகராக உத்தரவு பிற்பித்தார்.

* எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமக்கப்பட்டது.

* கண்ணகி சிலை திறப்பு

* இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கல்

* நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம்

* பனைத் தொழிலாளர் நலனுக்குத் தனி வாரியம்

* தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்

* நுழைவுத் தேர்வு ரத்துக்கு நிபுணர் குழு அமைப்பு

* மருத்துவம், பொறியில் கல்விக் கட்டணம் குறைப்பு

* மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறுதல்

* பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்க மானியம்

* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம்

* அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம்

* சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

* அரசு ஊழியர்களுக்கு எதிரான டெஸ்மா சட்டம் ரத்து

* அரசுப் பணியில் சேர வயது வரம்பு நீட்டிப்பு

* இளைஞர் சுய உதவி குழு அமைத்தல்

* சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டு வருதல்

* கிராமங்களில் அமைதி ஏற்பட கோவில்களில் வழிபடும் இடங்களில் ஏற்றத்தாழ்வு அகன்றிட முக்கியப் பிரமுகர்ளுக்கு, பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது.

* தலைவர் கலைஞர் அவர்களின் தன்னிகரில்லாப் பணிகள் இன்னும் பலப்பல.... பலப்பல.. பலப்பல.. தொடரும்... தொடரும்.....
.

12/01/2011

ஒரே சிந்தனை-இயற்கை சிரித்தது.


ஒரு மழைநாளில்
அறிமுகமானோம்
நதி நணைக்கும்
கோவில் வாசலில்...
மழையை ரசித்தபடி
இருந்த நீ
மழையில் நனைந்தபடி
இருந்த என்னை
நோக்கினாய் வியப்புடன்...
விழிகளில் பேசி
மொழிகளில் கலந்தோம்
ஒரே வகை எண்ணங்கள
பரிமாறிக் கொண்டோம
நம் சிந்தனைகளை...
இரவு பகல் எல்லையற்ற
இடம் பொருள் தடையின்றி
பேசினோம்.....பேசினோம்....
ஞானிகள் அறிஞர்கள
சிந்தனையாளர்கள
ஸ்தம்பிக்க.....
இயற்கை அதிர....
பிறந்தன
புதிய சிந்தனைகள
புதிய தத்துவங்கள
புதிய கோட்பாடுகள்...
கணம் தாமதியாமல
கலந்தாலோசித்த நம் பெற்றோர
மணமுடித்தனர் நம்ம
இல்வாழ்க்கை துணைவர்களாய்..
காலங்கள் உருண்டன
நமக்கான
புதிய சிந்தனைகள
உனக்கும் எனக்கும்
புதிய தத்துவங்கள
புதிய கோட்பாடுகள்...
ஸ்தம்பிக்க.....
பிறந்தன
குழந்தைகள்.... குழந்தைகள்...
இயற்கை சிரித்தது.