மொத்தப் பக்கக்காட்சிகள்

4/08/2013

சாதி, மதமெதற்கு உனக்கு?

 

மதமெதற்கு உனக்கு?

சிகரம் தொடு
அகரம் எடு
ஆயுளுள்ளவரை
ஆணவம் போக்கு

சாதிக்காக
மோதிச் செத்தவர்களின்
சரித்திரங்களை விட்டுவிடு
மீதியுள்ளவர்களைப்
பாதிக்கவிடாமல்
சாதிக்கவிடு

முற்றிய முதுகெலும்பு
முன்னும் பின்னும் வளையாது - நீ
இளமையிலே தூக்கி எறி
இனியெதற்குச் சாதி

மனிதனைப்
பதம் பார்க்கும்
மதமெதற்கு உனக்கு? - அதை
அடியோடு ஒதுக்கு

வஞ்சகரின்
நெஞ்சமெரிய - நம்
வண்ணத்தமிழின் பெருமையை
வான்மீது முழங்கச் செய்


சுசி. ஜெயசிலன்

எதுவும் சில காலம் தான்.



வாழ்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்:-

1. எதுவும் சில காலம் தான்.

2. சிந்தனை செய், கோபப்படாதே.

3. கடவுளையும், உன்னையும் மட்டுமே வாழ்வில் முழுமையாக நம்பு.

4. எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால், ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது.

5. வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை, அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு செ
ல்.



எதிர் காலத்தை பற்றி நீ சிந்திக்காவிட்டால்,

உனக்கு எதிர் காலம் என்ற ஒன்றே இருக்காது...

************************
விடலைப்பருவம்

நல்ல விஷயங்களை கேட்க மாட்டோம்...

நல்ல விஷயங்களை பார்க்க மாட்டோம்...

நல்ல விஷயங்களை பேச மாட்டோம்....

**********************************

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்

மரணம் உன்னை விட்டு விலகி நிற்கும்..


***********************

பிறர் குற்றம் காண்பதும்

தன் குற்றம் மறுப்பதுமே,

மடமையின் முழுமையான அடையாளம்..


***********************************************

"பணத்தை சம்பாதித்தால்

மகிழ்ச்சியாக வாழலாம்" என்று எண்ணி,

நாம் போட்டி பொறாமையை

மனதில் வளர்த்துக் கொள்கிறோம்....

ஆனால்,

பணக்காரர்கள் பெரும்பாலும்,

மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்..

**********************************************

விடியும் வரை தெரியாது

நடந்தது கனவு என்று....

நட்பு
ம்,  அன்பும் அப்படித்தான்,

பிரியும் வரை தெரியாது,

எவ்வளவு ஆழமானது என்று...

*****************************************************

கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம்

நம் மனக்குறையைச் சொல்லி வருந்துவது

நல்ல குணமல்ல.....

கருணைக்கடலான, இறைவனிடம்

உங்கள் குறைகளை முறையிட்டு வாருங்கள்.

நிச்சயம் மனஅமைதி கிடைக்கும்.....

*********************************************