மொத்தப் பக்கக்காட்சிகள்

10/17/2012

உலக தினங்களின் பட்டியல்



காதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.

இவற்றுக்கே இதென்ன அன்னையர் தினம், நட்பு தினம் என்று தனித்தனியாக ஒரு தினம் என்று சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.

இவர்கள் எல்லாம் இந்த பட்டியலைப் படித்துவிட்டு என்னத்தான் சொல்வார்களோத் தெரியவில்லை.

உலக தினங்களின் பட்டியல்


பிப்ரவரி 14, காதலர் தினம்

பிப்ரவரி 28, உலக றிவியல் தினம்
மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்
ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்
மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக ன்னையர் தினம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

 

 
ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்
ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்

செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்

நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்

டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

வெற்றி பெற வேண்டும்



வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள்.
அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.
அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...

அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.

அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.

பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.

சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.

சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.

எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.

உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.

எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.

பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர
 

உ‌யி‌ரின‌ங்க‌ளி‌‌ல் ‌சில வினோதம்


பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.
சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.
ஆப்ரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.
மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
பாம்புகளுக்க ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.
கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.
மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.
முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.
நாம் தூங்குவதை விட 50 விழுக்காடு அதிக கலோரிகள் தொலைக்காட்சி பார்க்கும் போது நம் உடல் செலவழிக்கிறது

விடுமுறை நாளொன்றில்...


அம்மாக்களின்
அடுப்படி வேலை இரட்டிப்பாகும்!
குழந்தைகளின் கூச்சலால்
தெருக்கள் நிறைக்கும்!
ரிமோட்களின் கை மாறலால்
தொலைக்காட்சிபெட்டி விசும்பும்!
பிள்ளைகளின் சப்தமின்றி
பள்ளிகள் ஏங்கும்!
தந்தைகளின் விடுமுறைகளை
சுப நிகழ்சிகள் விழுங்கும்!
எப்பொழுதும் போல் இவர்களை
திங்கள்கள் திரும்பி அழைத்துகொள்ளும்!

மாறாத வடுக்கள்!



மனிதனுக்கு மனிதன் செய்யும்
மாறாத துரோகமும்,
மனிதநேயம் இழந்து
மற்றவர்மேல் கொள்ளும் விரோதமும்,
மண்ணில் அவன் வாழும்வரை
மாறாத வடுக்களாய் ‍ அவன்
மனதில் பதிந்து தெரிகிறது!

தன்னைப்போல் பிறரையும்
தன்மையோடு நேசிக்கும்
தயாளகுணம் ஒன்றேதான்
வடுக்களற்ற மனங்களை
வாழ‌ச்செய்யும் மனிதனிடம்

நோயற்ற வாழ்வுக்கு..


நாவின் சுவைக்கு
அடிமை நானில்லை
என்றிருந்தால்,
நோய்கள் நோக்குவதில்லை,
பாயும், படுக்கையும்
அழைப்பதில்லை!
‘அருந்தியது செரித்தபின்
அடுத்தவேளை உணவு உண்டால்
மருந்தினை நாடும்
தேவையில்லை’
என்ற
வள்ளுவனின் வாக்கினை
வாழ்வினில் கைக்கொண்டு
வாழ்வோம் வளமுடனே!