மொத்தப் பக்கக்காட்சிகள்

12/26/2011

யார் பணக்காரன்

 
 
இன்று புலம் பெயர்ந்து வாழும் நம்மவரில் சிலர் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை நன்றாகக் கற்றுள்ளனர்.
 
ஆனால் ,எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை கற்றுக் கொள்ள வில்லை .
 
வாழ்வதற்காகப் பொருள் வேண்டும் .ஆனால் ,இவர்களோ பொருளீட்டுவதிலேயே வாழ்க்கையை இழந்து விட்டனர், அல்லது  இழந்துகொண்டிருக்கின்றனர்.
 
வாழ்க்கையை அனுபவிப்பதற்காகத் தான் பணம் .ஆனால்  இவர்களோ பணத்திற்காக வாழ்க்கையை விற்றுவிட்டார்கள்.
 
ஒருவன் எப்போது பார்த்தாலும் சிள்ளி பொறுக்கிக் கொண்டேயிருந்தான் .அவனைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் 'நீ எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருக்கின்றாயே எதற்கு?' என்று கேட்டான் .
 
அவன் "'குளிர் காய்வதற்கு" என்றான்.
 
கேட்டவனோ நீ குளிர் காய்வதை நான் பார்த்ததில்லையே?'என்றான்.
 
அவனோ "சுள்ளி பொறுக்கவே நேரம் சரியாக இருக்கின்றது .குளிர் காய நேரமில்லை"' என்றான் .
 
நம்மில் பெரும்பாலோர் இப்படித் தான் இருக்கின்றோம் .
 
பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு .ஆனால் ,சிலர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள் .அந்தப் பணத்தால் பெறக் கூடிய சுகங்களை அனுபவிப்பதில்லை .கேட்டால் அதற்கு எல்லாம் நேரம் இல்லை என்கிறார்கள் .இதென்ன பைத்தியக்காரத்தனம்?
 
பணம் சம்பாரிப்பது சிலருக்கு போதைபழக்கம் போல ஆகிவிட்டது.
 
குடும்பத்திற்காக சம்பாதிக்கின்றேன் என்கிறார்கள் ஆனால் ,அவர்கள் குடும்ப வாழ்வை அனுபவிப்பதில்லை .மனைவியிடமோ குழந்தைகளிடமோ சிரித்துப் பேசி மகிழ்வதற்கு நேரம் இல்லை என்கிறார்கள் .
 
இந்த இன்பங்களை அனுபவிக்கத்தானே பணம் .இந்த இன்பங்களை அனுபவிக்கத் தடையாக இருக்கின்றது என்றால் பின் எதற்குப் பணம்  ?
 
ஒருவன் பெட்ரோல் வாங்கி சேமித்துக் கொண்டேயிருக்கின்றான்  .காரில் செல்வதில்லை என்றால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?
 
எவனொருவன் தூங்க வேண்டிய நேரத்தில் ,எந்தக் கவலையும் இல்லாமல் ஆனந்தமாக உறங்குகின்றானோ
 
அவன் தான் உண்மையில் பணக்காரன் . எனவே அன்பான
சொந்தங்களே வாருங்கள் .இனியாவது அளவோடு உழைத்து

ஆனந்தமாக வாழப் பழகிக் கொள்வோம்

பணம்

இருந்தால் தூக்கமில்லை

இல்லாவிட்டால் சொந்தமில்லை

இரண்டும் இல்லாமல்

இளமையை தொலைத்து

சேர்த்து அனுப்பியும்

தேவையில் பூர்த்தியில்லை...
தேவைகள் துரத்த

தேடல்கள் தொடர

காலம் நொடிகளை

கழித்துவிட்டு

நரைகளை பதிலளிக்க

சாய்வு நாற்காலியில்

சாய்ந்தும்

மகன் இன்று அனுப்பியிருப்பானா?

நினைவுகள் துரத்துகிறது

என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே - ஆன்மீகத் துறவி விவேகானந்தர்



ஒருவன் சில பரீட்சைகளில் தேர்வு பெற்று, சொற்பொழிவு செய்யும் திறன் உள்ளவனாக இருந்தால்தான், அம் மனிதனைப் படித்தவன் என்று கருதுவீர்களா? வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் தகுதியைப் பெறுவதில் பாமர மகளுக்கு உதவி புரியாத கல்வியை, அவர்களது குணநலன்களைக் கட்டி வளர்க்காத கல்வியை, அதே போல் அம்மக்களிடம் ஈகைக் குணத்தையும்,சிங்கத்திற்குள்ளது போன்ற தைரியத்தையும் ஊட்டி வளர்க்காத கல்வியை, கல்வி என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா?



 எவனொருவன் தன் அறிவைக் கொண்டே தன்னைக் காத்துக் கொள்ளத் திறன் உடையவனோ, அவனே உண்மையான கல்வியை அடைந்த வனாவான்.”

இப்படி ஒரு காவியுடை அணிந்த ஒரு சாமியார் சொன்னார் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இதைவிட வேகமான, விவேகமான கருத்துக்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார் விவேகானந்தர்.


‘செங்காவிச் சிங்கம்’ என்று சொல்லும் அளவுக்கு விவேகானந்தரின் சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன.


இந்து மத மேன்மை, இந்தியாவின் வலிமை, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் தேவை, மெய்யான கல்வியாளர்கள், ஏழைகளின் நிலைமை என பல்வேறு பொருள்கள் பற்றி விவேகானந்தர் கூறிய கருத்துகள் மனித குல வளர்ச்சிக்கு மாமருந்தாகும்.


விசுவநாதர் – புவனேஸ்வரி தம்பதிக்கு 1863 ஜனவரி 12 அன்று பிறந்த விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாதர்.


சிறு வயதிலிருந்தே எது பற்றியும் ஆய்ந்து அறிகின்ற போக்கு நரேந்திர நாதருக்கு இருந்தது. ராமகிருஷ்ணரின் சீடராகச் சேர்ந்தார் நரேந்திரர். மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக நரேந்தர் திகழ்ந்தார். அதனால் நரேந்திர நாதருக்கு ‘விவேகானந்தர்’ என்று ராமகிருஷ்ணர் பெயர் சூட்டினார். இந்தப் பெயரே நிலை பெற்றுவிட்டது.


1885 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணர் மறைந்ததும், விவேகானந்தர் யாத்திரையை மேற்கொண்டார். காசி, லக்னோ, ஆக்ரா, பிருந்தாவனம், ஹத்ராஸ், ரிஷிகேஷ், பிரானாகோர் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
மற்றொரு முறை விவேகானந்தர் யாத்திரை புறப்பட்ட போது ராமேஸ்வரத்திற்கு வந்தார். இந்த யாத்திரைதான் விவேகானந்தரின் அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கும்,


 உலக மேதைகள் இந்திய தேசத்தின் வலிமையைப் புரிந்து கொள்வதற்கும், இந்து மத்த்தின் மேன்மையை உலக மதவாதிகள் தெரிந்து கொள்வதற்கும் காரணமாயின.
அப்போது இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.


இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது.


விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச் சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.


அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.


1893 மே 31 அன்று அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார்.


உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் ‘மெட்காப்’ என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் ‘இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும்.


பெண்கள் நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் முழக்கம் எழுச்சியோடு வரவேற்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள். அதனால் அமெரிக்காவில் விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள்.


இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார். அங்கு பேசிய மேலைநாட்டு மத போதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின் பேச்சைத் தொடங்கினர். இந்த வார்த்தை கூடியிருப்போருக்கும்,சொற் பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார்.


செப்டம்பர் 1-ம்தேதி விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் விவேகானந்தரைப் பார்த்தனர்.


 அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச் சிரிப்பை உருவாக்கியது. பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள் மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை; கண்டு கொள்ளவும் இல்லை.
எடுத்த எடுப்பிலேயே ‘சகோதர சகோதரிகளே!’ என்று தமது சொற் பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர் தொடங்கினார். ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர். ஆடையைக் கண்டு அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.


சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் விவேகானந்தர் தமது பேச்சைத் தொடங்கினார். அரங்கம் முழுவதம் அவரையே பார்த்தது; அவர் பேச்சை மட்டுமே கேட்டது;


அவர் சொல்வதைத் தங்கள் மனதில் பதிந்து கொண்டது. இந்தக் கூட்டத்தில ஆடையிலும், தோற்றத்திலும் அவர் தனித்து நின்றார் மேடை முழக்கத்திலும் அவரே தனித்து வென்றார். பேசி முடித்த பின் அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது.


அந்தக் கூட்டத்தில் ‘மெட்காப்’ நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம் பெண்ணும் இருந்தாள்.
இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது, “அளவுக்கு மீறிய மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி,இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன;வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து,
 நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன.அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலை எய்திருக்கும்” என்று விவேகானந்தர் முழங்கினார்.


விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும் கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது….அவற்றில் அந்தப் பெண்ணும் இருந்தாள்.. அந்தப் பெண் யார்?


மெட்காப் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசியதைக் கேட்டு, அவரைத் தனிமையில் சந்திக்க முயன்றாள். அது முடியாமல் போயிற்று!
சிகாகோவில் விவேகானந்தர் நான்கு நாட்கள் முழங்கிய போதும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு விவேகானந்தரைத் தனிமையில் சந்தித்து விட வேண்டும் என்று விரும்பினாள்;அப்போதும் அதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை!


அதன்பின் விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர்.


அத்தனை இடங்களுக்கும் அந்தப் பெண் வந்தாள்; விவேகானந்தரின் முழக்கத்தைக் கேட்டாள்;அப்போதும் அவளுக்கு விவேகானந்தரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை.
 


‘செயின்ட் லாரன்ஸ்’ என்ற நகரில் உள்ள தீவுப் பூங்காவில் விவேகானந்தர் ஐம்பது நாட்கள் ஓய்வெடுத்தார் அப்போதும அந்தப் பெண் அந்தத் தீவுப் பூங்காவிற்கு ஒவ்வொரு நாளும் வந்தாள்.இருப்பினும் விவேகானந்தரை அவளால் தனிமையில் சந்திக்க இயலவில்லை.
விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோதே அவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன.


அந்தப் புத்தகங்களைக் கையில் ஏந்தியபடி விவேகானந்தர் தங்கியிருக்கும் இடத்திற்குச்சென்று தனிமையில் அவரைச்சந்திக்க அந்தப் பெண் முயன்றாள். இருப்பினும் அவளுடைய முயற்சி பயன் தரவில்லை!


அமெரிக்காவிலிருந்து விவேகானந்தர் பாரீசுக்கு புறப்பட்டார். அமெரிக்க விமானத்தளத்தில் வைத்து ந்தப் பெண் விவேகானந்தரை மடக்கி விட்டாள்!


“தங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்” என்றாள்.

கூட்டத்திலிருந்து விலகிய விவேகானந்தர், “சொல்லு! தாயே! என்றார்.
அந்தப் பெண்ணுக்கோ இருபது வயது இருக்கும்…
அப்போது விவேகானந்தருக்கு முப்பது வயது…
அந்தப்பெண்ணோ நவ நாகரீக மங்கை…
விவேகானந்தரோ முற்றும் துறந்த முனிவர்…


எதற்காக விவேகானந்தரை விரட்டி விரட்டி அந்தப் பெண் பின் தொடர்கிறாள்?


மீண்டும், “சொல்லு தாயே!” என்றார் விவேகானந்தர்.


“நான் மெட்காப் நகரில் நடந்த மகளிர் மாநாட்டில் இருந்து உங்களைக் கவனித்து வருகிறேன்.. தனிமையில் சந்தித்துப் பேச பலமுறை மயன்றும் முடியாமல் போயிற்று..இனியும் காலம் தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும் என்பதனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டேன்.


அமெரிக்க இளைஞர் பலர் என் அழகில் மயங்கி, என்னை அன்றாடம் சுற்றி வருகின்றனர. ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச்சுற்றி வருகிறேன்..” என்று தயங்கினாள்.


“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தாயே” என்றார் விவேகானந்தர்.
“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து கொண்டால் எனது அழகோடும் உங்கள் அறிவோடும் நமக்கு குழந்தை பிறக்கும்.. அதற்காகத்தான் நான் உங்களிடம் தனியாகப் பேசுவதற்கு அலைந்து கொண்டிருந்தேன்” என்றாள் அந்தப் பெண்!


“தாயே! எனக்கு முப்பது வயது! உனக்கோ சுமார் இருபது வயது இருக்கலாம். நாம் திருமணம் செய்து, நமக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை வளர்ந்து, இருபது வயதைத் தொடுகின்றபோதுதான் அந்தக் குழந்தை அறிவு மிக்கதா? இல்லையா? என்பது தெரியும். அதற்குப் பதிலாக நீ என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே!” என்றார் விவேகானந்தர்.


இந்தப் பதிலைக் கேட்டு அந்தப் பெண் விக்கித்துவிட்டாள்.


ஆம்! காணுகின்ற பெண்களை எல்லாம் தாயாக்க் கருதியவர் விவேகானந்தர் என்பது அப்போதுதான் அந்தப் பெண்ணிற்குப் புரிந்தது!


1893-ல் விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள் இப்போதும் நினைவுபடுத்த வேண்டிய நிலையில்தான் உலகமும், இந்தியாவும், தமிழகமும் இருக்கிறது.
சிகாகோவிலிருந்து உலகில் பல நாடுகளுக்கு விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, 1897 ஜனவரியில் இராமேஸ்வரத்தில் உள்ள குந்தக்கல்லுக்கு வந்தார். அவர் வருவதை அறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி குந்தக்கல் வந்து காத்திருந்தார்.


கப்பலில் வந்து இறங்கிய விவேகானந்தர் தம் பாதங்களை முதன்முதலில் தம் தலையில் வைத்து விட்டுத்தான் மண் மீது பட வேண்டும் என்றார் மன்னர். ஆனால் மனித நேயம் கொண்ட விவேகானந்தர் அதற்கு இணங்கவில்லை.


உலக முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்து மத்ததன் மேம்னையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஜூலை 4 அன்று மறைந்தார்.


கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படுகிறது.


சிகாகோவில் பேசிவிட்டு விவேகானந்தர் முதன் முதலில் தமிழகத்தில் வந்த இறங்கினார். அதுவும் எந்த மன்னர் தமது அமெரிக்கப் பயணத்திறகுக் காரணமாக இருந்தாரோ, அந்த மன்னர் வாழுகின்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில்தான் விவேகானந்தர் இறங்கினார்.


விவேகானந்தர் ஒரு காலைப் பதித்து மற்றொரு காலை மண்ணில் வைத்த அந்த இடம் இன்றும் ‘குந்துக்கால்’ என்று அழைக்கப்படுகிறது.
சென்னையில் விவேகானந்தர் தங்கிய இடம் ‘விவேகானந்தர் இல்ல’மாகக் காட்சியளிக்கிறது.


இவை எல்லாவற்றையும் விட,விவேகானந்தரின் சீடராக நிவேதிதா இருந்ததும்.


நிவேதிதா –தேவியின் சீடராக மகாகவி பாரதியார் வாழ்ந்ததும் சிறப்பு
மிக்கவைகளாகும்.

12/24/2011

ஆன்மீகம் பொறாமை கூடாது


பகவான், மனிதர்களுக்கு மனதைக் கொடுத்தான். அதிலே எண்ணங்களை எழச் செய்தான். எண்ணங்களில் ஆசைகளைத் தோன்றச் செய்தான். ஆசையின் காரணமாக பாவங்களைச் செய்கின்றனர். பாவத்தின் காரணமாக பிறவி ஏற்படுகிறது. பிறப்பதும், பாவம் செய்வதும், மீண்டும் பிறப்பதுமே தான் தொழிலா? இதற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடையாதா? ஆசைகளை விட்டால் விடுதலை கிடைக்கும் என்று சொன்னார்கள். இதற்கு ஆசார்யர்களும், மகான்களும் தான் வழி காட்ட வேண்டும். அவர்களை அண்டினால் வழி பிறக்கும். ஆசை என்பது மட்டுமல்ல, பொறாமை என்பதும் கூடாது. இதை, “மாச்சர்யம்’ என்பர்.

“அவன் ஏதோ சவுக்கியமாக இருக்கிறான். அவன் செய்த புண்ணியம்…’ என்று நினைக்க வேண்டும். “அதுபோல் நமக்கு கிடைக்கவில்லையே…’ என்று மனம் வேதனைப்படக் கூடாது! நாம் முன்னுக்கு வர நல்ல வழியில் முயற்சி செய்ய வேண்டுமே அல்லாது பிறரைப் பார்த்து பொறாமைப் படுவதால் என்ன பயன்? அவர்களைப் போல் நாமும் இருக்க வேண்டும் என்று எண்ணி, தீய வழிகளில் ஈடுபட்டு, பணம், பொருள் சம்பாதித்தால், முடிவில் வேதனை தான் மிஞ்சும். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!’ இந்த மருந்து சிலருக்குப் பிடிக்காது; சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. என்ன செய்வது? காரணமின்றி ஒரு துவேஷம்! இது, இவனையே அழித்து விடும். யட்சப்ரச்னத்தில் துவேஷம் என்பதைப் பற்றி யட்சஸ் கேள்வி கேட்கும் போது, துரியோதனன் ஞாபகம் வருகிறது. துரியோதனனைப் பற்றி தர்மபுத்திரர் குறைவாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கிறது. அதனால், “மாச்சர்யம் உள்ளவன் யார்?’ என்று கேட்கிறது. தர்மபுத்திரரின் மனதில் துரியோதனனைப் பற்றிய ஞாபகமே வரவில்லை. துரியோதனனால் தான் தனக்கு இப்படி காட்டுக்கு வர நேர்ந்தது என்பதும் சொல்லவில்லை. “என் விதி வசத்தால் கானகம் வந்தேன்…’ என்றார். இது மகான்களின் நிலை, அடுத்து, “எது அகங்காரம்?’ என்று கேட்கிறது. தான், தனது என்ற எண்ணமே அகங்காரம் என்கிறார் தர்மர். “தானுள்ளது குழம்பு; தானற்றது ரசம்…’ என்கின்றனர். சமையலில், “தான்’ என்ற காய் இருந்தால் அது குழம்பு. அந்த தான் என்ற காய் இல்லாதது ரசம்!

“தான், தனது’ என்ற அகம்பாவம் உள்ளவரையில் ஒரு வித பற்றுதலும், ஆசையும் இருக்கும். இந்த இரண்டும் இருந்து விட்டால் மன அமைதி கெடும். மன அமைதி இல்லையேல் ஒரே குழப்பம்தான். மனம் குழம்பி விடுகிறதல்லவா? அதனால், “தான்’ இருந்தால் குழம்பு என்கின்றனர். இந்த “தான், தனது’ என்ற அகங்காரம் இல்லாவிடில், எதிலும் ஆசையோ, பற்றுதலோ இராது!

“நான், என்னுடையது என்று உலகில் என்ன சார் இருக்கிறது! ஏதோ அவன் கொடுத்தான்! வைத்துக் கொண்டிருக்கிறேன். அவன் எடுத்துக் கொள்வதானால் கொடுத்து விட வேண்டியது தானே…’ இப்படி ஒரு எண்ணம் இருந்து விட்டால் வாழ்க்கையே ரசமாக இருக்கும். பரமானந்தம் பெறலாம். அதனால், “தான்’ அற்றது ரசம் என்கின்றனர். குழப்பம் வேண்டாம். மனத் தெளிவு இருந்தாலே போதும்.

சஞ்சல மனதுடன் இருப்பவன் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? சதா சஞ்சலமும், குழப்பமும் இருந்தால் வாழ்க்கையை எப்படி ரசிக்க முடியும்? அதனால், “தான், தனது’ என்பது தான் அகங்காரம் என்பது தர்மரின் பதில். இதையெல்லாம் நாம் விவேகத்தோடு படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்! ஏனோதானோ என்று இருக்கலாமா? வாழ்நாள் என்பது ஒரு குறிப்பிட்ட குறுகிய காலம் தானே! நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்தி நல்ல பயன் பெற வேண்டாமா? இந்த ஜென்மாவில் இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு ஜென்மாவில் ஞானம் பெற்று விடுதலை பெற வேண்டாமா? அதற்கு இதெல்லாம் அஸ்திவாரமாக அமையுமே! வீண் பொழுது போக்கினால் என்ன பயன்? யோசிக்க வேண்டும்! ***

ராமகிருஷ்ண பரமஹம்சர்- பொன்மொழிகள்

  • சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது.
  • உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.
  • உலக வேலைகளைச் செய்த ுகொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்க வேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது. இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.
  • எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.
  • அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை எளிதில் பெறுவான்.
  • இறைவனை அடைய முயற்சி செய்யும் ஒருவன் சத்தியத்திலிருந்து சிறிதேனும் பிறழாதிருந்து பழகவேண்டும். சத்தியத்தில் நிலைத்திருப்பவனுக்கு ஈசுவரானுபூதி வாய்க்கிறது.
  • முளைத்து வெளியே வந்த யானையின் தந்தம் மறுபடியும் உள்ளே போவதில்லை. ஒருமுறை வெளியே வந்தால் வந்ததுதான். அது போல ஒருவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைக்கவேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து அவன் விலகிச் செல்லலாகாது.
    -ராமகிருஷ்ண பரமஹம்சர்

இயேசுவின் மொழிகள் மனிதனை மாசுபடுத்துபவை

 
 
மனிதனை மாசுபடுத்துபவை
மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தி விடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை, விபசாரம், சுயநலம், தீயச் செயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை.வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
  • ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
  • இம்மையில் துக்கம் அடைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தேற்றுவார்.
  • பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள்.
  • மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத் திருப்தியை தேவன் அளிப்பார்.
  • மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.
  • தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனின் அருகாமையிலிருபார்கள்.
  • அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார்.
  • நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக ராஜ்யம் அவர்களுக்குரியது.
  • உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும் பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய வெகுமதி உங்களுக்கு காத்திருக்கிறது.
தட்டுங்கள் திறக்கப்படும்
தொடர்ந்து கேட்டுக் கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டறிவீர்கள். தொடர்ந்து தட்டிக் கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும். ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக் கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.
அனைவரையும் நேசியுங்கள்
உங்களை நேசிக்கிறவர்களை மட்டும் நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களை விட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.
மெய்வாழ்வுக்கான வாசல்
பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில், நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள். ஆனால், மெய்யான வாழ்விற்கு வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டறிகிறார்கள்.

காந்தியடிகள் பொன்மொழிகள்




  • பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.
  • கடமையை முன்னிட்டு செய்தசெயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
  • தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
  • தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
  • பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே.
  • மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
  • கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியானகுருடன்.
  • மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.
  • உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.
  • சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாகஇருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.
  • செல்வம், குடும்பம், உடம்முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்குடமில்லாமல்போய்விடுகிறது.
  • மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.
  • சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அதுபோலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.
  • எல்லாக் கலைகளையும் விட வாழ்வுக்கலை ஒன்றே பெரிது.
  • நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.
  • தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.
  • பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.
  • கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.
  • ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
  • உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.
  • எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
  • மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.
  • கோபமோ, குரோதமோ இல்லாமல் துன்பத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வது உதயசூரியனுக்கு ஒப்பாகும்.
  • பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது.

தந்தை பெரியார் பொன்மொழிகள்!






  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
  • பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
  • மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
  • விதியை நம்பி மதியை இழக்காதே.
  • மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
  • மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
  • பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
  • பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
  • பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
  • தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
  • வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
  • கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  • ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  • ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
  • ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
  • எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
  • மற்றவர்களிடம் பழகும் வித்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
  • என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்
  • வாரியார் சொன்ன கருத்துக்கள்



    தருக்கு கூடாது

    "நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும்.

    கடவுளைக் காண

    புறப்பற்றும் அகப்பற்றும் நீங்கப் பெறாதவர்கள் எத்தனை கோடி காலம் தவம் கிடந்தாலும் கடவுளைக் காண முடியாது. யான், எனது என்னும் பற்று அறுக்காதவரை ஈன சமயத்தார் என்கின்றார் அருணகிரிநாதர். இந்தப் பற்றுகள் இரண்டும் நீங்குவதற்கு உபாயம் பற்றற்ற பரமனை வழிபடுவதேயாகும்.

    பிறவிப் பிணியை அகற்ற

    பிறருடைய உடமையோ, உயிருள்ளவையோ நமக்கு எட்டாக்கனி போல் கசக்க வேண்டும். பிறர் பொருளை விரும்புதல் கூடாது. பிறகு தன் பொருளில் வைக்கும் பற்றையும் அறவே அகற்ற வேண்டும். இதுதான் பிறவிப்பிணியை மாற்றும் மார்க்கமாகும்.

    மெய்ஞானம் தலைப்பட

    நான், நான் என்ற எண்ணம் தான் அகப்பற்று என்பது. நான் செய்தேன், நான் சம்பாதித்தேன், நான் எல்லோரையும் காப்பாற்றினேன், நான் மிகவும் சமர்த்தன் என்ற எண்ணங்களை அடியோடு தொலைக்க வேண்டும். இந்த நான் என்கிற எண்ணம் என்று நீங்குகிறதோ, அன்றே மெஞ்ஞானம் தலைப்படும். நான் என்ற எண்ணம் கெட்டழிந்தவுடனே, துன்பம் முழுவதும் நீங்கப்பெற்று, அருட்பெருஞ்சோதி தரிசனம் உண்டாகும். ஆனந்தம் உண்டாகும். என்றுமழியா இன்பம் தோன்றும்.
    அரியதை சாதிக்க
    நீ எப்போதும் பெரியோரைத் துணைக்கொள். கல்லின் தன்மை தண்ணீரில் மூழ்கிவிடுவது. கட்டையின் தன்மை தண்ணீரில் மிதப்பது. சிறிய கல்லோ, பெரிய கல்லோ தண்ணீரில் போட்டால் தண்ணீருக்குள் மூழ்கி அமிழ்ந்துவிடும். ஆனால் ஒரு கல்லைப் படகு மேல் வைத்தால் அந்தக் கல் தண்ணீரில் மிதந்து செல்கிறது. அதுபோல் அறிவாற்றலால் ஆன்ற பெரியோர்களை நீ அடுப்பாயானால் உனது அறிவாற்றலுக்கு இயலாத பெரிய கருமங்களை நீ செய்து முடிப்பாய்.

    படுக்கும் போது

    நீ இரவில் படுக்கும் போது, நான் இன்று காலை கண் விழித்து எழுந்தது முதல் இப்போது கண் உறங்கப் படுக்கும் இதுவரை என்ன என்ன நன்மைகள் புரிந்தேன்? என்னால் இன்று யாருக்கு என்ன பயன் உண்டாகியது? மனதாலே, வாக்காலே, காயத்தாலே நான் இன்று செய்த நலங்கள் யாவை? என்று எண்ணுவாயாக.

    பெரிய இன்பம்

    இன்பங்களுக்கெல்லாம் பெரிய இன்பமாவது அறிஞர்களோடு பழகுவதேயாகும். அறிஞரோடு பழகும்போது உண்டாகும் இன்பம் இமையவர் உலகத்திலுமில்லை. மொழிக்கு மொழி தித்திக்கும் இனிய அறிவுரைகளும் அறிஞரிடம் உண்டாகின்றன. அவற்றால் உன் உள்ளம், உயிர், உணர்ச்சி ஆகிய அனைத்தும் குளிரும்.

    கற்றவாறு ஒழுகு

    நிரம்பவும் படிப்பதைவிட படித்தபடி நின்று ஒழுகுவதற்கு முயற்சி செய். படிப்பது உணவு உண்பது போலே, படித்தபடி ஒழுகுவது உணவு செரிப்பது (ஜீரணமாவது) போலே. உணவு நிரம்ப உண்டாலும் செரிக்கவில்லை யானால் என்ன பயன்? செரிக்காத உணவு துன்பம் செய்கின்ற தன்றோ? ஆதலினால் சிறிது கற்றாலும் கற்ற வண்ணம் நிற்க வேண்டும். "ஓதலின் நன்று ஒழுக்கமுடைமை."

    ஆன்றோர் துணை

    அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த ஆன்றோர்களைத் துணையாகக் கொண்டு ஒழுகு. அதனால் உனது வாழ்வு உயர்ச்சி உறும். துன்பத்தில் அழுந்த மாட்டாய். கொடியானது உயர்ந்த மரத்தைப் பற்றிச் சுற்றிக் கொள்வதனால் வானம் நோக்கி உயர்கிறது. இல்லையேல் மண்ணில் படர்ந்து காலினால் மிதிபடுகிறது.

    இன்றே தருமம் செய்

    பின்புறத்திலேயே கூற்றுவன் நிற்கிறான். அவன் எந்த நிமிடத்தில் உயிரைப் பற்றுவானோ தெரியாது. வாழ்க்கையோ நிலையற்றது. நீர் மேல் குமிழிக்கு நிகரானது. "இன்றைக்கோ, நாளைக்கோ, இன்னும் அரை நாழிகைக்கோ, என்றைக்கோ ஆவியிழப்பு" என்ற முதுமொழியினை நினைந்து தீயவைகளை விட்டு இயன்ற அளவில் தருமம் புரிதல் வேண்டும்.

    இறைவனை நோவாதே

    இறைவன் பாராட்சமில்லாதவன். விருப்பு வெறுப்பு இல்லாதவன். தன்னருள் புரியும் தயாநிதி. மாம்பழங்களை அதிகம் உண்டவனுக்கு வயிற்றுவலி உண்டாகும். அவரவர் செய்த வினைகளை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும். நாம் செய்த வினைப்பயனை நாம் நுகர்வது முறைதானே. துன்பங்கள் நேரும்போது, நாம் செய்த வினையையும் நம்மையும் நோவதன்றி இறைவனையும் பிறரையும் நோவக்கூடாது.

    எம்.ஜி.ஆர். சொன்ன பொன்மொழிகள்


    நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து   இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது. 

    எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.

    மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.

    சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.

    சாதி, மத, இன,  மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும்.

    ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.

    எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. 

    ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.

    உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் தத்துதவத்தை நிலைநாட்டுவீர்.

    நம்மைப் பெற்ற தாய் தந்தையரிடம் மட்டும் எந்தப் பொய்யும் சொல்லக் கூடாது. மற்றவர்களிடம் சொல்லலாமா என்றால் சில சமயங்களில் அந்த நிலை ஏற்படும்.

    விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப் போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்து விடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது.

    வாழ்வின் சுவை எதையும் அறியாதிருக்கிற, லட்சக்கணக்கான நலிந்தோருக்காக, வருங்காலத் தலைமுறைக்காக இப்போதே இன்றே ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு எல்லோரிடமும் இருக்க வேண்டும்.

    முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் சக்திகளை நமது ஒற்றுமையாலும், உழைப்பாலும் முறியடிக்க அனைத்துப் பிரிவினரையும் அழைக்கிறேன். வறுமைக்கும், அறியாமைக்கும், சமூகத் தீமைகளுக்கும், பிளவு மனப்பான்மைகளுக்கும் எதிராக நாம் தொடங்கியுள்ள ஆக்கவழி, அறவழி புனிதப் போரின் வெற்றிக்கு நம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள உத்வேகம் பெறுவோம்.

    இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்கு பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

    சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன் கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம்? வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.

    மற்றவர்களின் கூகுள் பிளஸ் Page வசதியை உபயோகப்படுத்துவதற்கு

    கூகுள் பிளஸ் தளத்தில் Page வசதியை கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் பெரும்பாலானவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும், வலைப்பூக்களுக்கும் தனியாக Page உருவாக்கலாம்.
    தற்பொழுது இந்த கூகுள் பிளஸ் பக்கத்தில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். உங்கள் கூகுள் பிளஸ் பக்கத்தில் நீங்கள் மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்கள் நிறுவனத்தின் மேலாளர்களுக்கோ அட்மின் வசதியை அளிக்கலாம்.
    இதன்மூலம் குழு உறுப்பினர்களுக்கு அட்மின் வசதியை கொடுக்கலாம். எப்படி அட்மின் வசதி அளிப்பது என கீழே பார்ப்போம்.

    அட்மின் வசதியை வழங்குபவருக்கு:

    முதலில் கூகுள் பிளசில் நுழைந்து உங்களின் Page திறந்து கொள்ளுங்கள். அடுத்து Setting பகுதிக்கு சென்று Google Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
    உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Managers என்பதை கிளிக் செய்யுங்கள்.

    அதில் அட்மின் வசதி அளிக்க நினைக்கும் நபரின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.

    நீங்கள் அவரின் மின்னஞ்சல் முகவரி கொடுத்து Invite பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு ஒரு Pop-up விண்டோ வரும், அதில் Continue என்ற பட்டனை அழுத்தவும்.

    உங்களின் அழைப்பு அந்த மின்னஞ்சலுக்கு செல்லும். அவ்வளவு தான் உங்களின் வேலைமுடிந்தது, இனி நீங்கள் Invite செய்த நபர் என்ன செய்யவேண்டும் என பார்க்கலாம்.

    அட்மின் வசதியை பெறுபவர்களுக்கு:

    அதில் உள்ள Accept என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இன்னொரு பகுதி ஓபன் ஆகும், அதில் இதே முகவரியில் தொடரவேண்டுமா இல்லை வேறு ஏதேனும் மின்னஞ்சல் முகவரியில் அட்மின் வசதி வேண்டுமா என கேட்கும். உங்கள் விருப்பப்படி தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.

    Continue கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த பக்கம் ஓபன் ஆகும், அதில் உங்கள் User Id, Password கொடுத்து லொகின் செய்தால் போதும் அட்மின் வசதியை நீங்கள் பெற்று கொள்ளலாம்.

    Note1: கூகுள் பிளஸ் பக்கத்தின் உரிமையாளர்(Owner) நினைத்தால் எந்த நேரத்திலும் இந்த அட்மின் வசதியை நீக்க முடியும்.

    Note2: இந்த முறையில் அதிகபட்சமாக 50 நபர்கள் வரை அட்மின் வசதியை வழங்கலாம்.

    மாரடைப்பு ஏற்பட காரணமாகும் மரபணுக்கள்


    சரியான உணவு முறைகளை பின்பற்றாமல் கண்டபடி, அதிக உப்பு கொழுப்பு பண்டங்களை சாப்பிடும் குழந்தைகள் இன்று அதிகம்.

    குழந்தைப்பருவ உடற்பருமன் தற்போது 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் வாழ்வில் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து கழிக்கும் நேரம் அதிகரித்து, பெற்றோருடன் பழகும் நிலைமை மாறி, தனிமை அதிகரித்து அதனால் Steroids உடலில் உற்பத்தியாகி "சின்ட்ரோம் X '' என்ற உடல் பருமன் நோய் உருவாகுகிறது.
    இதனால் 30 வயதிற்குள்ளாகவே உடற்பருமன், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறைந்து கெட்ட கொழுப்பு அதிகரித்து இருதய ரத்தக் குழாய்கள் தடித்துப்போய், அடைத்துப்போய் மாரடைப்பு ஏற்படுகிறது.

    கெட்ட புரதச்சத்து ரத்தத்தில் அதிகரித்தல், நேரம் கெட்ட நேரத்தில் இரவு பகல் பாராமல் உட்கார்ந்து வேலை செய்தல், தூக்கமின்மை, தொலைக்காட்சி, கைபேசி மற்றும் கைபேசி டவரில் இருந்து வெளிப்படும் EMR என்ற மின்காந்த அலைகள் மற்றும் காற்று மற்றும் உணவு மாசுபடுதல் போன்றவைகளாலும் நோய்கள் ஏற்படுகிறது.

    இதில் வியப்பான விஷயம் சீனர்களும், ஜப்பானியரும் கொழுப்பு உள்ள உணவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு மிகக்குறைந்த அளவே இருதய நோய் வருகிறது.

    இதற்கு காரணம் அவர்கள் உடலில் உள்ள Geneகள் நல்ல கொழுப்பை ரத்தத்தில் அதிகரித்து அதிக கொழுப்பினால் வரும் ஆபத்தை தடுக்கிறது.

    ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று



    1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

    2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

    3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.

    எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

    5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

    6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

    7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

    சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

    8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.

    பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு



    நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம்.

    இதனால் வைரஸ், மால்வேர்கள் உங்களது பென்டிரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான கோப்புக்களை அழித்து விடுவதுடன், கோப்புறை குறுக்குவழிகளை(folder shortcuts) உருவாக்கிவிடும்.

    சில சமயங்களில் எப்படி உங்களது கோப்புக்களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.

    முதலில் Command Prompt யை திறப்பதற்க்கு Run–> சென்று அங்கே “cmd” என டைப் செய்யுங்கள்.

    பின்னர் திறக்கும் திரையில் attrib -h -r -s /s /d h:*.* என டைப் செய்யுங்கள்.

    மேலே காணப்படும் h என்பதற்கு பதிலாக உங்களது சரியான பென்டிரைவின் Drive Letter-ஐ கொடுங்கள்(இதை உங்களது My Computer யில் கிளிக் செய்து பார்க்கலாம்).

    இனி உங்களது பென்டிரைவில் சென்று அங்கு உள்ள தேவையற்ற shortcutsகளை அழித்து விடுங்கள்.

    இவ்வாறு செய்தால் உங்களது  பென்டிரைவின் கோப்புறை குறுக்குவழி(Folder Shortcut) சிக்கலை சரிசெய்து விடலாம்.

    Thanks to Lankasri.com

    12/16/2011

    திரு.முக்தா வி.சீனிவாசன்.

    ஆயிரம் கோவில்களை அமைப்பதைவிடவும், ஒரு பள்ளிக்கூடம் நிறுவுவது சாலச் சிறந்தது’ என்பார்கள். அதேபோல் இன்றைக்கு ‘ஒரு சினிமா திரையரங்கை நிர்மாணிப்பதைவிட, ஒரு நூலகத்தை அமைப்பது நாட்டுக்கும், ஊருக்கும், வீட்டுக்கும் நல்லது’ எனலாம். அந்த நல்ல வேலையை இப்போது செய்து வருகிறார் 85 வயதான திரையுலகப் பெரியவர் திரு.முக்தா வி.சீனிவாசன்.

    கதை, வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்ட இந்தப் பெரியவர் தீவிரமான காங்கிரஸ்காரர்.

    தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் பிறந்தவர் முக்தா சீனிவாசன். பெரும் சிரமத்திற்கிடையே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு வந்தவர். பின்னர் கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர்.

    பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1947 முதல் 1957ம் ஆண்டுவரையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு.
    1957-ல் இவர் இயக்கம் செய்த முதல் திரைப்படம் ‘முதலாளி’ வெளி வந்தது. இந்த முதல் திரைப்படமே, ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவருடைய அண்ணன் முக்தா வி.ராமசாமி அவர்களுடன் இணைந்து முக்தா பிலிம்ஸை துவக்கி அதன் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். இதுவரையிலும் மொத்தம் 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் முக்தா சீனிவாசன். கூடவே தெலுங்கில் புகழ் பெற்ற 12 திரைப்படங்களை டப்பிங் செய்தும் வெளியிட்டிருக்கிறார்.
    இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தில்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தயாரித்து, இயக்கிய ‘சூரியகாந்தி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டது அப்போதைக்கு மிகப் பெரிய பரபரப்பு செய்தி. அந்தப் பெருமையுடன் எனதருமை கவியரசன் கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலான ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ பாடலை வெளிக்கொணர்ந்த இயக்குநர் என்கிற முறையில் இவர் பெரும் பாராட்டுக்குரியவர்.

    ‘நடிகர் திலகம்’ சிவாஜியின் உற்ற நண்பரான இவர், ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’, ‘பரீட்சைக்கு நேரமாச்சு’, ‘கீழ்வானம் சிவக்கும்’ போன்ற படங்களை நடிகர் திலகத்தை நடிக்க வைத்து இயக்கினார். இதில் ‘அந்தமான் காதலியும்’, ‘இமயமும்’ நூறு நாள் ஓடிய திரைப்படங்கள்.. ‘அந்தமான் காதலி’யின் கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்கள் இன்னமும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ‘சூப்பர்ஸ்டார்’ அண்ணன் ரஜினியின் ‘பொல்லாதவன்’, ‘சிவப்புசூரியன்’ திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவரும் இவரே.

    இன்றளவிலும் உலகின் மிகச் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக ‘டைம்’ பத்திரிகையால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மணிரத்தினத்தின் ‘நாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்ததும் இவருடைய ‘முக்தா பிலிம்ஸ்’தான்..

    1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ முதல் முறையாக உருவாக்கப்பட்டது என்பது தமிழ்த் திரைப்பட உலகத்தின் வரலாறு..

    துவக்கக் காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்து வந்த முக்தா சீனிவாசன் அவர்கள், 1963-ம் ஆண்டு முதல் கதராடை அணிந்து காங்கிரஸ்காரராக பவனி வர ஆரம்பித்தார். பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தார். அதோடு ஜி.கே.மூப்பனாரின் பள்ளித் தோழர். அவருக்கும் சிறந்த நண்பர் இவர்தான். தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழகத் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

    இவருடைய இன்னுமொரு மிகப் பெரிய தகுதி.. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் கோஷ்டி சேர்க்கத் தெரியாத ஒரு தலைவர் உண்டென்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்..

    எதற்கு இவரது வரலாறு என்கிறீர்களா..?

    இவர் தற்போது செய்து வருகின்ற தன்னலமற்ற ஒரு சமூகத் தொண்டை குறிப்பிட்டுச் சொல்லும்முன் இவரைப் போன்றவர்களின் வரலாற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

    தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்ட முக்தா சீனிவாசன் துவக்கக் காலத்தில் இருந்தே பெரும் படிப்பாளியாகவும், படைப்பாளியாகவும் இருந்திருக்கிறார். இதன் விளைவாக கதை, வசன எழுத்தாளராகவும் உருமாறியிருக்கிறார்.
    எழுத்தாளர் என்றால் சும்மா இல்லை.. இதுவரையிலும் சுமார் 350 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் 16 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. மேலும் ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு’, ‘கலைஞர்களோடு நான்’, ‘கதாசிரியர்களோடு நான்’, ‘அறிஞர்களோடு நான்’ போன்ற புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

    இவர் எழுதிய மிக, மிக முக்கியமான புத்தகத் தொகுப்பு ‘தமிழகம் கண்ட இணையற்ற சாதனையாளர்கள்’ என்ற புத்தகம்தான். இதில் ஐந்து பாகங்களாக தமிழகத்தில் பிறந்து வளர்ந்து சாதனை படைத்த அத்தனை முக்கியப் புள்ளிகளின் வாழ்க்கை வரலாற்றையும் தொகுத்து தந்திருக்கிறார். இது நிச்சயம் மிகப் பெரும் சாதனைதான் என்பதை அந்தப் புத்தகங்களை லேசாகப் புரட்டிப் பார்த்தாலே தெரிகிறது.

    மேலும் காளிதாஸனின் ‘சாகுந்தலம்’, ‘மேகதூதம்’, ‘ருது சம்ஹாரம்’, ‘வடமொழி இலக்கியம்’ போன்றவற்றை தமிழில் மொழி பெயர்த்தும் தந்திருக்கிறார். மாணவர்களுக்கான ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை’ எழுதியிருக்கிறார்.

    இப்படி தனது கலையுலகப் பணிகளுக்கிடையே இப்படி எழுத்துப் பணியையும் விடாமல் தொடர்ந்து வந்திருக்கும் முக்தா சீனிவாசன், இத்தனை ஆண்டு காலமாய் படிப்பதற்காக அவர் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இரண்டு வீடுகள் தேவைப்படுகின்றனவாம்.

    சும்மா நாமே படித்து முடித்துவிட்டு அடுக்கி வைப்பதற்காக புத்தகங்கள்..? மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்பதற்காக இந்த வயதில் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார் இந்தப் பெரியவர்.

    தி.நகரில் வைத்தியராமன் தெருவில் இருக்கும் இவரது வீட்டின் கீழேயே ஒரு நூலகத்தைத் துவக்கியிருக்கிறார். அதில் தன்னிடமிருக்கும் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். வெறும் நூறு ரூபாய் அட்வான்ஸாக கட்டிவிட்டால் போதும்.. சிலரிடம் அதைக் கூட கேட்பதில்லை.. ஒரு நேரத்தில் இரண்டு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். 5 அல்லது 6 நாட்கள் டைம் கொடுக்கிறார். படித்துவிட்டு மீண்டும் வந்து வேறு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் என்கிறார்.

    ஆனால் ஒன்று.. திரும்பி வரும்போது யாராக இருந்தாலும் “புத்தகத்தைப் படித்தீர்களா..? முழுசாகப் படித்தீர்களா..? எனக்குச் சந்தேகமா இருக்கு.. எங்க நான் கேள்வி கேட்கிறேன்.. பதில் சொல்லுங்க..” என்று புத்தகத்தைப் பார்த்து கேள்வி கேட்டு அவர்களை அசடு வழியவும் வைக்கிறார். பார்ப்பதற்கு கொஞ்சம் காமெடியாகவும் உள்ளது.

    மனிதர் நிறைய பேசுகிறார். அரசியல், பொதுவாழ்வு, சினிமா என்று எல்லாவற்றிலும் ஒரு ரவுண்டு அடித்திருப்பதால் அத்தனையிலும் தெளிவாக இருக்கிறார்.

    பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து அதீதமாக முன்னேறிக் கொண்டிருக்கும் சினிமா துறையை போதும் என்று ஒதுக்கி வைத்துவிட்டதாகச் சொல்கிறார். “என்னை மாதிரியான ஆட்களுக்கு இனிமேல் இங்கு மரியாதை இல்லை என்பதை உணர்ந்துதான் ஓரமாக ஒதுங்கியிருக்கிறேன்..” என்கிறார் இவர்.

    வயசான காலத்தில் அக்கடாவென்று ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேளாவேளைக்கு சாப்பிட்டுக் கொண்டு ஓய்வெடுக்காமல் இப்படி எதுக்கு சின்னப்புள்ளைத்தனமா இப்படி ஒரு வேலை..?

    “மக்களுக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் வரணும் தம்பி.. எல்லாரும் டிவிலேயே மூழ்கிட்டு இருக்காங்க.. வரலாறை படிக்கணும்.. நாம எப்படி இருந்தோம்..? நாடு எப்படி இருந்துச்சு..? எதனால் நமக்கு இத்தனை வசதிகள் கிடைச்சது..? இப்படி எதுவுமே தெரியாம ஒரு தலைமுறை உருவாகிக்கிட்டிருக்கு.. பார்க்கிறதுக்கும், கேக்குறதுக்கும் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு தம்பீ.. அதுக்குத்தான் இதை ஆரம்பிச்சேன்..” என்று உண்மையான வருத்தத்தோடு சொல்கிறார் பெரியவர். “ரீடிங் ஹேபிட்டை உருவாக்கியே தீரணும்.

    அதுக்காகத்தான் படிச்சீங்களா.. படிச்சீங்களான்னு திருப்பித் திருப்பிக் கேக்கிறேன்..” என்று அழுத்தமாக தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.
    ஆரம்பத்தில் கேள்விப்பட்ட நான், சாதாரணமாகப் போய்ப் பார்க்கலாம் என்றுதான் சென்றேன். ஆனால் அங்கிருக்கும் புத்தகங்கள் என்னை மேலும், மேலும் இழுத்துக் கொண்டுவிட.. இப்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை சென்று வந்து கொண்டிருக்கிறேன்.

    மனிதருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் போச்சு.. புத்தகத்தில் கேள்விகளை கேட்கத் துவங்கி விடுகிறார். இதில் இருந்து தப்பிக்க முடியாமல் பலரும் தவிக்கின்ற சங்கடத்தை உணர்ந்தாலும், “திரும்ப இதையே எடுத்திட்டுப் போங்க.. நல்லா படிச்சிட்டு உங்களால எப்ப வர முடியுமோ அப்ப வாங்க.. போங்க..” என்று நயமாகச் சொல்லித் திருப்பி அனுப்புகிறார்.

    இந்த நூலகத்தில் பல அரிய பழைய காலப் புத்தகங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய புத்தகங்கள் தனது வீட்டில் இருப்பதாகவும், இங்கே வைப்பதற்கு இடமில்லாததால் வைக்க முடியவில்லை என்றும் வருத்தப்பட்டுக் கொண்டார்.

    நூலக முகவரி
    திரு.முக்தா சீனிவாசன்
    5, வைத்தியராமன் தெரு
    தி.நகர்
    சென்னை-600 017.

    பதிவர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் நூலகம் இயங்குகிறது. சீனிவாசன் ஐயா கலந்துரையாடலிலும் மிகவும் ஆர்வமாகவும் இருக்கிறார். பதிவர்களுக்கு இவருடனான ஒரு அறிமுகம் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். சென்று வாருங்கள்..
    பொறுமையாகப் படித்தமைக்கு எனது நன்றிகள்..

    12/15/2011

    Nareepol Tree..Amazing!!! மனிதகாய்



    This is amazing tree named "Nareepol" in Thai.
    Naree means "girl/woman" and
    pol means plant/tree or "buah" in Malay.

    It means women tree.


    It is amazing what God create the World in many forms

    that amused human beings....

    You can see the real tree at Petchaboon province about

    almost 500 kms away from Bangkok .

    தலை வலியை கை மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம்.

    அலுவலகத்தில் வேலை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது பலர் தலைவலியால் அவதிப்படுவதைப் பார்க்கலாம். இத்தகையத் தலை வலியை கை மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம்.

    இதற்கான எளிய மருத்துவச் சிகிச்சை முறை குறித்து விவரிக்கிறார் டாக்டர் டி. காமராஜ்.

    தலைவலி என்பது ஒரு நோயல்ல. ஒரு நோய்க்கான அறிகுறி தான். இத்தகைய தலைவலியைப் போக்க கைவைத்தியம் பலன் தரும்.
    கைகளால் தலைமுடியை நன்றாகப் பிடித்து பின் பக்கமாக இழுத்து சுமார் 5 நொடிகள் வைத்திருந்து, நிதானமாக கைகளை எடுத்தால் வலி கொஞ்சம் குறையும்.

    இது மட்டுமல்ல, நல்ல இயற்கைக் காற்று படும்படி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் தலைவலியை மட்டுப்படுத்தலாம்.

    யோகாசனங்கள் போன்றவைகளைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் தலைவலி ஏற்படும் நேரத்தில் யோகா, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைச் செய்து வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

    ஆவி பிடித்தல் மூலம் வியர்வையை வெளியேற்றினால் தலைவலியில் இருந்து தப்பிக்க முடியும்.

    சூடா டீயை வெப்பமான அறையில் வைத்து குடித்தால் தலைவலி குறையத் தொடங்கும்.