மொத்தப் பக்கக்காட்சிகள்

12/24/2011

மாரடைப்பு ஏற்பட காரணமாகும் மரபணுக்கள்


சரியான உணவு முறைகளை பின்பற்றாமல் கண்டபடி, அதிக உப்பு கொழுப்பு பண்டங்களை சாப்பிடும் குழந்தைகள் இன்று அதிகம்.

குழந்தைப்பருவ உடற்பருமன் தற்போது 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் வாழ்வில் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து கழிக்கும் நேரம் அதிகரித்து, பெற்றோருடன் பழகும் நிலைமை மாறி, தனிமை அதிகரித்து அதனால் Steroids உடலில் உற்பத்தியாகி "சின்ட்ரோம் X '' என்ற உடல் பருமன் நோய் உருவாகுகிறது.
இதனால் 30 வயதிற்குள்ளாகவே உடற்பருமன், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறைந்து கெட்ட கொழுப்பு அதிகரித்து இருதய ரத்தக் குழாய்கள் தடித்துப்போய், அடைத்துப்போய் மாரடைப்பு ஏற்படுகிறது.

கெட்ட புரதச்சத்து ரத்தத்தில் அதிகரித்தல், நேரம் கெட்ட நேரத்தில் இரவு பகல் பாராமல் உட்கார்ந்து வேலை செய்தல், தூக்கமின்மை, தொலைக்காட்சி, கைபேசி மற்றும் கைபேசி டவரில் இருந்து வெளிப்படும் EMR என்ற மின்காந்த அலைகள் மற்றும் காற்று மற்றும் உணவு மாசுபடுதல் போன்றவைகளாலும் நோய்கள் ஏற்படுகிறது.

இதில் வியப்பான விஷயம் சீனர்களும், ஜப்பானியரும் கொழுப்பு உள்ள உணவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு மிகக்குறைந்த அளவே இருதய நோய் வருகிறது.

இதற்கு காரணம் அவர்கள் உடலில் உள்ள Geneகள் நல்ல கொழுப்பை ரத்தத்தில் அதிகரித்து அதிக கொழுப்பினால் வரும் ஆபத்தை தடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக