மொத்தப் பக்கக்காட்சிகள்

6/30/2016

படித்ததும் வலித்தது...** யதார்த்தங்கள் **

படித்ததும் வலித்தது...
〰〰〰〰〰〰〰〰


** யதார்த்தங்கள் **

இன்றைய சூழ்நிலையில்
வீரம் என்பது
பயப்படாத மாதிரி
நடிக்கிறது.

புத்திசாலி என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது.

சந்தோஷம் என்பது
பணம் இருப்பதாய்
காட்டி கொள்வது.

அமைதி எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது.

குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்
போது தெரிவது.

தன்னிலை விளக்கம்
என்பது தன் தவறுக்கு
சால்ஜாப்பு சொல்வது.

பொதுசனம் என்பது
கூடி நின்று
வேடிக்கை பார்ப்பது.

தலைவர் என்பது
ஊரை அடித்து
உலையில் போடுவது.

தானம் என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது.

பணிவு என்பது
மரியாதை இருப்பது
போல் நடிப்பது.

காதல் என்பது
இரண்டு பேரும் சேர்ந்து
பொய் சொல்வது.

கல்வி என்பது
காப்பி பேஸ்ட்
செய்வது.

நேர்மை என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது.

நல்லவன் என்பது
கஷ்டப் பட்டு
நடிப்பது.

எதார்த்தம் என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது.

மனிதம் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது.

சிரிப்பு என்பது
அடுத்தவன் விழும்
போது வருவது.

Thanks to C.Malathi