மொத்தப் பக்கக்காட்சிகள்

4/16/2015

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!




1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோபப்படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!

4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.."
என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ஜ் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திக்காக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!

அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!!!


Thanks to Mr.P.Thillai






4/13/2015

முன்னுக்கு வாங்கோ- கலைவாணர்



ஒரு முறை கலைவாணரை திருச்சி ஜட்கா வண்டிக்காரர் சங்கத்தின்ஆண்டு விழாவில் தலைமை உரை ஆற்றும் படி அழைப்பு வந்தது .அந்த விழாவில் உரையாற்ற கலைவானரும் ஒப்புக்கொண்டார் .சொல்லவா வேண்டும் ? ஜனதிரள் அலை மோதியது .


கலைவாணர் பேசதொடங்கினார்! கூட்டம் சிரித்தே கலைத்து விட்டது!  உங்களிடம் எனக்கு ரெம்ப பிடித்தது இதுதான்!

நீங்கள் உங்கள் (ஜட்கா வண்டிக்காரர்) வண்டியில் யார் ஏறினாலும் "முன்னுக்கு வாங்கோ"  "முன்னுக்கு வாங்கோ" என்பீர்கள் இந்த போட்டியும் பொறாமையும் உள்ள இந்த உலகில்,  யாரால் இப்படி சொல்ல முடியும் ..?

 உங்கலைத் விர !