மொத்தப் பக்கக்காட்சிகள்

11/30/2011

எப்படி எனக்கு கண்ணு தெரியும்?


மனோதத்துவ டாக்டர் ஒருவரிடம் அறுபது வயதான பெரியவர் தன் மன நிலை சரியாத தான் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ள சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர் அவரிடம் மனநிலை சரியாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்..
டாக்டர்:- நான் உங்களோட வலது காதை வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- சத்தம் கேட்பது கொஞ்சம் சிரமமா இருக்கும்..
டாக்டர்:- வெரி குட்.. (தெளிவா தானே பதில் சொல்றார்)

பெரியவர்:- தேங்க்ஸ் டாக்டர்..

டாக்டர்:- ம்.. இப்போ உங்களோட இடது காதையும் வெட்டி எடுத்துட்டா என்ன ஆகும்?

பெரியவர்:- என்னால பார்க்க முடியாது சார்..

டாக்டர்:- (குழப்பத்துடன்...) என்ன சொல்றீங்க? ரெண்டு காதையும் வெட்டிட்டா பார்க்க முடியாதா?
பெரியவர்:- கண்டிப்பா டாக்டர்.
டாக்டர்:- (மனநிலை சரியில்ல தான் போலிருக்கு..) எப்படி சொல்றீங்க?

பெரியவர்:- என் மூக்கு கண்ணாடி காதுல தானே மாட்டி இருக்கேன், காதை வெட்டிடீங்கனா கண்ணாடி கழண்டு விழுந்துடுமே சார், அப்புறம் எப்படி எனக்கு கண்ணு தெரியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக