மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2011

இந்த நிலை மாறுவது எப்போது?


  1. அரிசியின் விலை கிலோ 44 ரூபாய்ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது
  2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்
  3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம்ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்
  4. பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும்,தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
  5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள்அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
  6. நாம் அணியும் ஊள்ளாடைகளும்ஆடைகளும்காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றனஆனால் நாம் உண்ணும் காய் கற்களும்பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
  7. நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றனபாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்தயாரிக்கப்படுகிறது 
    .
  8. மொத்தமாகப் பள்ளிகளையும்கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசுசாராயம் விற்றுக் கொண்டிருக்கிறதுசாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்
  9. கோதுமைக்கு வரியில்லைஅது விளைபொருள்கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. 
  10. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட்கேக்பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு
  11. பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டுஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!
  12. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம்ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்
  இந்த நிலை மாறுவது எப்போது?
 தூங்கும் பாரதமாதவைத்தான்(?) எழுப்பிக் கேட்க வேண்டும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக