மொத்தப் பக்கக்காட்சிகள்

11/05/2011

வேலைக்கான நேர்காணலில்


வேலைக்கான நேர்காணலில்...... உண்மையைச் சொல்ல முடிந்தால்.....

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்...?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும் .. எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான் .... அதை தவிர உன் கம்பெனி மேல பெருசா ஒன்னும் மதிப்பு மரியாதைல்லாம் இல்ல ...!!

உங்களுக்கு ஏன் இந்த வேலையை தரவேண்டும் ....?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்... என்கிட்டேதான் கொடுத்துப் பாரேன் ....!!

உங்களுடைய தனித்திறமை என்ன ....?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழி இருக்கான்னு பார்ப்பேன் ... இங்கேருந்து என்னென்ன சுடலாம்னு நோட்டம் உடுவேன் .... உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததை சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன் ... அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதை தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்கு கொண்டு வரணும்ங்கற நம்பிக்கையெல்லாம் கிடையாது...

உங்கள் மிகப்பெரிய பலம்...?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிடுவேன்... மனசாட்சி.. நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா ... இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன் ....!!!

பலவீனம் ....?

ஹி.....ஹி..... பெண்கள் ....!!

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன....?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன் ... அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிறத அளவுக்கு சம்பளத்தை கறந்துருக்க மாட்டேனா.....??

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன ...? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்...?
ஆண்டவன் அருள்தான் காரணம்.... இது வரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கிறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபுடிச்சதே இல்ல.....

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள் ....??

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்க்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ .. அதே காரணதுக்காகதான் ..??

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன...?

நல்ல சம்பளம் , வேலை , பக்கத்துக்கு சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண் , நாட்டமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம், அது போதும் ....!!


நன்றி...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக