மொத்தப் பக்கக்காட்சிகள்

12/24/2012

தத்துவங்கள் 2016

  •  எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை!
  •  
  • தவறி விழும்போது மட்டுமே சிலருக்கு வாயிலிருந்து வருகிறது - "அம்மா"
  •  
  • சரியோ தவறோ கடந்துவிடுகிறது -வாழ்க்கை     
  •  
  • மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!
  •  
  • பிரதர்க்கும் பிரதமர்க்கும் என்ன வித்தியாசம்? 
  •  
  • பிரதர் பேசியே கொல்லுவான், பிரதமர் பேசாம கொல்லுவார்!
  •  
  • போனில் பாஸ் பேசும்போது 
  •  
  • பதில்-"எஸ் சார், ஓகே சார், ஓகே சார், எஸ் சார், ஓகே சார், ஓகே சார், ஓகே சார்!"
  •  
  • உங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது!
  •  
  • பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்! 
  •  
  • இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு!
  •    
  • நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும் 
  •  
  • பெண்கள் அழகு என்பதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்!
  •  
  •  மறுத்து நான் அழகு என்பவர்கள் என்னை நேரில் பார்க்கவும்!
  •  
  • 'சட்டம் தன் கடைமையைச் செய்யும்'ங்கிறாங்களே எங்க வீட்டிலேயும் கூரைல சட்டம் தன் கடைமையைச் செய்துகிட்டிருக்கே அதானா இது?
  •  
  • பவர் ஸ்டாரை புடிச்சு ஜெயில்ல போட்டுட்டீங்க,
  •  
  •  அப்புறம் எப்படி இருக்கும் தமிழ் நாட்டுல பவரு !
  •  
  • கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்!
  •  
  •  ஆசையை வளரவிடாதே அது "கள்" ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை"கள்")
  •  
  • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் - ஒவ்வொரு முறையும்!!
  •  
  • இந்தியாவில தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி உயிரோடு இருப்பதில்லை.
  •  
  • காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே!
  •  
  • சில தவறுகள் மன்னிக்கப்படாதது தான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!
  •  
  • நல்லதாய் ஒரு காரியம் செய் என்பதற்கு வேண்டாத ஒருவருக்குக் காரியம் செய் என்பது பொருளல்ல!
  •  
  • கஷ்டம் என்றால் என்னவவென்று தெரிந்துகொள்ளவே கஷ்டப்படுகிறேன்!      
  •  
  • வாழ்க்கைல நல்லவனா இருப்பதைவிட நல்லவனா நடிப்பது ரொம்ப கஷ்டம்டா சாமி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக