மொத்தப் பக்கக்காட்சிகள்

11/21/2011

புகையிலை ஒழிப்பு



பெரும்பாலான மக்களுக்கு புகைப்பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது என்பது தெரிந்திருந்த போதும், புகையிலையினால் உண்டாகும் தீமையின் அளவு குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை எனலாம். புகையிலை நிறுவனங்கள், புகையிலைப் பெட்டிகளை, பொட்டலங்களை அழகாக, வசீகரமாகத் தயாரித்து வழங்குவதன் மூலமும் வித்தியாசமான விளம்பர உத்திகள் பலவற்றின் மூலமும் புகையிலை விற்பனையைப் பெருக்கி, உடல்நலத்திற்கு புகையிலை உண்டாக்கும் தீமைகளை மக்கள் அறிந்துக்கொள்ள முடியாதவாறு திசை திருப்புகின்றன.

புகையிலையைப் பயன்படுத்துவதால் வரும் தீமைகளை மக்கள் உணருமாறு செய்யச் சிறந்த சிக்கனமான, பயனுள்ள வழி, புகையிலைப் பெட்டிகள் / பொட்டலங்களின் மீது புகைப்பதனால் வரும் தீங்கினைக் குறித்த எச்சரிக்கை செய்வதோடு, படங்களோடு கூடிய எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்படுவது மிகுந்த பலனளிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும். மக்கள், புகைப்பிடிப்பதைக் குறைத்துக் கொள்ளவும் முழுமையாக நிறுத்திக்கொள்ளவும் இந்த எச்சரிக்கைப் படங்களும் வாசகங்களும் பெரிதும் உதவுகின்றன. படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கும் எச்சரிக்கைப் படங்கள், தெளிவான உடனடியான எச்சரிக்கையைத் தருகின்றன எனலாம். இத்தகு எச்சரிக்கைப் படங்களும் வாசகங்களும் புகையிலைப் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்,அதிலிருந்து விடுபடவும் வழிவகுக்கின்றன. எச்சரிக்கை படங்களின் மூலம் எச்சரிக்கை விடுப்பது படிப்பறிவில்லாதவர்களுக்கும் உடனடியாக செய்தியைத் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. புகையிலைப் பெட்டியின் மீது இருக்கும் படமும் வாசகங்களும் புதிய வாடிக்கையாளர்களுக்குப் (குறிப்பாக இளைஞர்களுக்கு) புகையிலையின் மீது ஏற்படும் நாட்டத்தைப் பெரிதும் குறைக்கின்றன. புகைப்பிடிப்பதினால் வரும் பெரும் தீங்கு குறித்த எச்சரிக்கையை தெரிவிக்க வேண்டியிருந்தாலும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தியதாலும். 2009இல் நடத்தப்பட்ட புகையிலை ஒழிப்பு நாள் முகாம் பின்வரும் இன்றியமையாத செய்தியின் மீதுத் தன் கவனத்தைக் குவித்தது. அதாவது, உடல்நலம் குறித்த எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் புகையிலைப் பெட்டியின்மீது அச்சிடுதல் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் புகைப்பிடிப்பதனால் வரக்கூடிய மிகப்பெரிய தீங்கினை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு உண்டாக்குவதற்கும் புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் இந்த எச்சரிக்கை வாசகங்களும் படங்களும் உதவுகின்றன


  • முயன்றால் தடுக்கக்கூடிய இறப்புக்குக் காரணமாக இருக்கக்கூடிய காரணங்களில் ஒன்று புகையிலை. ஒவ்வொரு வருடமும் 5 மில்லியன் மக்களுக்கு மேல் புகையிலையினால் மக்கள் இறக்கின்றார்கள். ஒரு ஆண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ், மலேரியா, காசநோய் போன்ற அனைத்து நோய்களிலும் இறக்க கூடியவர்களைவிட புகையிலையால் இறப்பவர்களே அதிகம்.




  • புகையிலை மட்டுமே சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டு, தயாரிப்பாளரின் எண்ணப்படியே உபயோகிப்பவர்களைக் கொல்லும் நுகர்பொருளாகும். புகைபிடிப்பவர்களில் பாதிபேர் புகையிலை தொடர்பான வியாதிகளினாலேயே இறக்கிறார்கள். இரண்டாம் நிலை புகைப் பிடிப்பவர்களுக்கும், (அதாவது புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையினை சுவாசிப்பவர்கள்) புகையிலையினால் ஏற்படும் எல்லா நோய்களும் ஏற்படுகிறது.




  • புகையிலை நிறுவனங்கள் மாதந்தோறும் 10 மில்லியன் டாலர் அளவு பணத்தைச் செலவு செய்து புதிய வாடிக்கையாளர்களை புகைப்பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றனர். மேலும் புகைப்பிடிப்பவர்கள் அப்பழக்கக¢தை, விட்டுவிடாமலும் பார்த்துக் கொள்கிறார்கள். விளம்பரங்களின் மூலமாகவும், கவனமாக, அழகாகவும், தயாரிக்கப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் மூலமாகவும், புகையிலை நிறுவனங்கள் மக்களின் கவனத்தை திசைதிருப்பி, புகையிலை மற்றும் அதனால் செய்யப்படும் பொருள்களினால் ஏற்படும் உயிர்கொல்லித் தீமைகளை மக்கள் மறந்துபோகும்படி செய்கின்றன.




  • புகையிலைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் (WHO) உருவாக்கிய நெறிமுறைகளின்படி, புகையிலையினால் ஏற்படும் விளைவுகளை ஒழிக்க  எச்சரிக்கை படங்கள் மற்றும் வாசகங்கள் மூலம் அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன.சர்வதேச ஒப்பந்தப்படி இந்நோக்கினை எட்ட, எம்பவர் (MPOWER) தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்துகிறார்கள்.




  •  உடல்நலம் குறித்த எச்சரிக்கைகள், குறிப்பாக படங்களுடன் கூடிய எச்சரிக்கை வாசகங்கள், புகையிலை உபயோகிப்பவர்களை அப்பழக்கத்தை விட்டு விடவும், புகைப்பிடித்தலுக்கு அடிமையாகாமல் இருக்க வைக்கவும் உதவுகின்றன. ஆனாலும், புகைபிடிப்பவர்களில் பத்தில் ஒன்பது பேர் புகையிலைப் பெட்டியின் மீது எவ்விதமான எச்சரிக்கையும் தேவையில்லாத நாடுகளில்தான் வாழ்கிறார்கள்.




  • நிகோடின் என்பது மிகமோசமாக அடிமைப்படுத்தக் கூடிய போதைப் பொருளாகும். மக்களுக்கு அதனுடைய தீமைகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு உண்டாக்கும் பயணத்தில் நாம் நீண்டதூரம் செல்லவேண்டும். அதனால் புகையிலைப் பெட்டிகளின் மீது எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் அச்சிடுதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைத்து மக்களின் வாழ்க்கையைக் காக்க எளிய, சிக்கனமான ,பயனுறு வழியாகும்.




  • posted by: http://www.indg.in/



  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக