மொத்தப் பக்கக்காட்சிகள்

10/27/2025

காதல் வாழ்க்கை !

 

♥முதல் இரவில், அவள் தன் கணவனின் பர்ஸை திறந்து பார்த்தாள்... அதில் தன்னை விட அழகான ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது.

♥அவள் ஒரு கணம் திகைத்தாலும், அதைப் பார்த்ததாக காட்டிக்கொள்ளவில்லை...

மாறாக அவனுடன் மகிழ்ச்சியாகவே இருந்தாள்.

♥அடுத்த நாள், சிலரின் கதைகளிலிருந்து அவள் தெரிந்து கொண்டாள், கணவனின் பலமான முன்னைய காதல் வாழ்க்கையைப் பற்றி...

♥குடும்பத்தினரின் கட்டாயத்திற்காக, அந்த பாவமான பெண்ணை விட்டுவிட்டு, தன்னைத் திருமணம் செய்து கொண்டதாக...

♥அவளுக்கு வருத்தமாக இருந்தாலும், அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை...

அவள் நல்ல மனதுடன் அவனைக் காதலிக்கத் தொடங்கினாள்...

அவனின் பல கஷ்ட நேரங்களிலும் அவள் கரம் பிடித்து நின்றாள்...

♥அவனுடைய வெறுப்புகள் மெதுவாக மெதுவாக மறைந்தன...

சில நாட்களுக்குப் பிறகு, அவள் முற்றத்தை சுத்தம் செய்யும் போது கிழிந்த ஒரு புகைப்படத்தின் துண்டுகள் கிடைத்தன... அவள் அதை ஒட்டி வைத்தபோது, அவளால் நம்ப முடியவில்லை, அது கணவனின் பர்ஸில் இருந்த முன்னால் காதலியின் புகைப்படம்...

♥அவள் ஓடிச் சென்று தூங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பாமல், அவனுடைய பர்ஸை திறந்து பார்த்தாள்... அதில் அந்த அழகான பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக, தன் கருப்பான முகம்... அவள் அந்த பர்ஸை மார்போடு அணைத்துக் கொண்டாள்...

♥"காதலை வலுக்கட்டாயமாகப் பெற முடியாது... அது மனதில் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று...

அதற்கு அழகை விட நல்லது குணமே..."

♥பொறுமையாக காத்திருப்பதும்... தெளிவாக நடந்து கொள்வதும், காதலிப்பதும், அந்த காதலுக்கு முன் முகம் திருப்ப முடியாது...

♥அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் கத்தி கூச்சல் போட்டு பிரிந்து சென்று இருந்தால் இன்று இப்படி ஒரு அன்பான தம்பதிகள் இருக்கமாட்டார்கள்.

10/17/2025

ரஜினி என்றும் சூப்பர் ஸ்டார் !

 

1982 லேயே ரஜினிக்கு இந்தப் பாடலை எழுதியவர்  பஞ்சு அருணாச்சலம் தான்.. 
 அந்தப் பாடல் தான்  .............

 
"பொதுவாக எம்மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்"
 

இதுமட்டுமல்ல 1977ல் வெளிவந்த "புவனா ஒரு கேள்விக்குறி" தொடங்கி 1994ல் வெளிவந்த "வீரா" வரை ரஜினியின் பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் தான் என்பது பலரும் அறியாதது... தெளிவான பட்டியல் தயாரித்தால் இன்னும் நிறைய பாடல்கள் இடம்பெறும்.. உதாரணத்திற்காக சில மிக மிக பிரபலமான பாடல்கள் மட்டும்.
 
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
 
காதலின் தீபம் ஒன்று
 
விழியிலே மலர்ந்தது
 
ராஜா என்பார் மந்திரி என்பார்
 
பொதுவாக எம்மனசு தங்கம்
 
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
 
தென்மதுரை வைகைநதி
 
முத்தமிழ்க் கவியே வருக முக்கனிச் சுவையும் தருக
 
மானின் இரு கண்கள் கொண்ட மானே
 
மாசி மாசம் ஆளான பொண்ணு
 
ஏய் பாடல் ஒன்று ராகம் ஒன்று
 
இதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு. 
 
தனது நூலில் இளையராஜாவே சொன்னது தான்.. 
 
1984ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டு படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் இளையராஜா. ஊட்டியிலிருந்து "ரஜினி சார் கால்ஷீட் 2 நாள் இருக்கு. ராஜா சார்கிட்டேந்து 2 பாட்டு வாங்கி கொடுத்தீங்கன்னா ஷூட் பண்ணிரலாம்" என்று இயக்குனர் ராஜசேகரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது பஞ்சு சாருக்கு..
இளையராஜாவை நேரில் சந்தித்து அவரது உடல் நலனை விசாரித்து விட்டு தயங்கி தயங்கி விஷயத்தை சொல்கிறார்... பாடினால் அடிவயிற்றிலிருந்து காற்று எடுக்க வேண்டி தையல் பிரிந்து விடும் என்பதால், விசிலடித்தே மெட்டை பாடிக்காட்டுகிறார் இளையராஜா. அங்கேயே பஞ்சு அருணாச்சலம் பாடலை எழுதி முடிக்கிறார்.. உடனே ஒளிப்பதிவு செய்யப்பட அந்தப் பாட்டு தான் 
 
"காதலின் தீபம் ஒன்று". அவசரமாக எழுதப்பட்ட பாடலாயிருந்தாலும்.. "என்னை நான் தேடித் தேடி, உன்னிடம் கண்டு கொண்டேன்" என்று ரம்மியமான வரிகளை எழுதி இருப்பார்.
 
காமம் என்பது திரைப்பாடல்களில் இலைமறைகாயாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர் பஞ்சு சார்.. ஆனால் அதிலும் இலையுதிர்காலங்கள் நேர்ந்த பொழுதுகள் உண்டு..... அவரே
மஞ்சக் குளிக்கையிலே மதிலேறிப் பாத்த மச்சான் 
 
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தான்
 
மேயிற கோழியெல்லாம் பாயிறது சரியா
 
என்றெல்லாம் கூட எழுத வேண்டி வந்தது... இவை 
 
"சினிமா என்பது ஒரு வணிகம்.. அதில் நிறைய 
 
யோசிக்காதே" என்று கடந்து போக வேண்டுமோ 
 
என்று எண்ணத் தோன்றுகிறது.
 
உச்சகட்டமாக, கடல் மீன்கள் படத்தில் "மதனி மதனி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல" என்று இவர் எழுதிய பாடல் கடும் எதிர்ப்புக்களை சம்பாதித்து பிறகு சென்சாரால் "மதனி என்பது மயிலே" என்றும் "கொழுந்தா என்பது குமரா" என்றும் திருத்தப்பட்டது..
 
இளையராஜா நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டது இவரது பாடல்களில் தான்... நானறிந்த சிலவற்றைச் சொல்கிறேன்
 
"புள்ளிபோட்ட லவுக்காரி புளியம்பூ சீலக்காரி" என்று உத்தமபாளையம் பகுதிகளில் வழங்கி வந்த நாட்டுப்பாடல் தான் "அன்னக்கிளி உன்னைத் தேடுது".. ராஜாவின் இசையில் வந்த இந்த முதல் பாடல்.
 
திரையிசையில் முதன் முதலாக "ரீதி கௌளை" ராகம் இடம்பெற்ற "சின்னக் கண்ணன் அழைக்கிறான்.
 
இளையராஜா இசையில் வெளிவந்த முதல் ராகமாலிகை, கவிக்குயில் படத்தில் இடம்பெற்ற 
 
"ஆயிரம் கோடி காலங்களாக" (மாயா மாளவகௌளை, வகுளாபரணம், வாகதீஸ்வரி, வலஜி, சக்ரவாகம், மோஹனம், மோஹன கல்யாணி, சாருகேசி என்று எட்டு ராகங்களில் அமைந்தது)
 
தமிழ் சினிமாவில் முதல் நேரடி சிலோன் பைலா பாடலான "சுராங்கனி சுராங்கனி"
நாட்டுப்புற மெட்டில் Western Harmony யை இணைத்து உருவான "ஏரியில எலந்தைமரம்"
முதன் முதலாக Stereophonic இசையில் உருவான 
 
ப்ரியா படத்தின் அனைத்து பாடல்களும்
Unconventional Rhythm Pattern ல் உருவான "குரு" படத்தின் "நான் வணங்குகிறேன்"
இசைக்கருவிகள் இல்லாமல் வெறும் குரல்களை மட்டும் வைத்து உருவான பாடலான "மாயா பஜார் 1995" படத்தின் "நான் பொறந்து வந்தது"
இரண்டு கால்களின் Jogging சப்தத்தை தபலா வாசிக்கும் கண்ணையா மற்றும் Percussionist ஜெய்சா ஆகியோரை தொடையில் தட்டி அதன்மூலம் உருவான "பருவமே புதிய பாடல் பாடு"
இந்தப் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் பஞ்சு சார் அவர்கள் தான்.. இதற்கு என் மனதில் தோன்றிய காரணம் "இந்தப் பையன் நல்லா தான்யா பண்ணுவான்" என்கிற எண்ணம் பஞ்சு சாருக்கும், தன்னை அறிமுகப்படுத்தியவர் என்பதைத் தாண்டி அதீதமாக எழுதுகிறேன் பேர்வழி என்று பாடலைக் காலி பண்ணி விட மாட்டார் என்று இளையராஜாவுக்கும் பரஸ்பர நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்..
 
நா.காமராசன் அவர்கள் சொன்னதைப் போல, கண்ணதாசன் தமிழுக்கு வழங்கிய கொடைகளில் முக்கியமான ஒன்று "பஞ்சு.அருணாசலம்".
நல்ல தயாரிபாளர் மட்டும் அல்ல..
நல்ல கவிஞர் & சினிமா  
ஆல் ரவுண்டர்!

9/06/2025

ஓய்வுபெற்றவரின் வாழ்க்கை நிலைமை!

 ஓய்வுபெற்றவரின் வாழ்க்கை நிலைமை!  

🌷🌻🤓🙏😚🌷😁🌹🤐😂  

*
1. ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்…  
மனைவி : இன்னுமா எழுந்திருக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கணுமா?  

🤓🤓🤓  

*

2. ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்…  
மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க  எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க!  

🤓🤓🤓  

*
* 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்
மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா  உட்கார்ந்தா எப்படி? , எப்பப் பாரு டீ  காபி..... ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம்தானே  ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது!  

🤓🤓🤓  

*

 4. ஓய்வு பெற்றவர் எப்பொழுதும் வெளியே சுற்றித் திரிந்தால்…  
மனைவி : இவ்வளவு நேரம் எங்க போனீங்க? ஆஃபீஸ் தான் இப்ப 
கிடையாதே? இப்போவும் வீட்டிலேயே சும்மா இருக்க முடியலையா? குடும்பத்தோடு கொஞ்சம் பேசலாம் இல்ல .....!  

🤓🤓🤓  

*
 5. ஓய்வு பெற்றவர் பக்தி வழிபாட்டில் ஈடுபட்டால்…  
மனைவி : கோவில் கோவிலா சுத்தினா பணம் வருமா? அப்படி இருந்திருந்தா பூசாரிகள்தான் பெரிய பணக்காரர்கள் ஆகிருப்பாங்க.. . டாடா, பில் கேட்ஸ் எல்லாம் இல்லையே! எப்பவும் "ராம்ராம்", சங்கரா சங்கரா.... மாலை, மணி—அதே வேலை தானா!  

🤓🤓🤓  

*

6. ஓய்வு பெற்றவர் மீண்டும் வேலையிலே சேர்ந்தால்…  
மனைவி : உங்களுக்கு வேலைதான் எல்லாமா? இவ்வளவு வயசு ஆகிவிட்ட பிறகும் பணத்துக்காக ஏன் ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? எப்பவுமே உங்களுக்காக  காத்திருக்கிகணுமா  நாங்க?  

🤓🤓🤓🤓  

*
7. ஓய்வு பெற்றவர் மனைவியை புனித யாத்திரைக்கு அழைத்துச் சென்றால்…  
மனைவி : பக்கத்து வீட்டு மோகனப்பாருங்க.... ஒவ்வொரு மாதமும் தன் மனைவியை ஷிம்லா, டார்ஜிலிங் எல்லாம் கூட்டிட்டு போறாராம்! நீங்க, எப்பவும் என்னை கோவில் டூர், ஹரித்வாருக்குத்தான் கூட்டிக்கொண்டு போகிறீங்க!  

🤓🤓🤓🤓  

*

8. ஓய்வு பெற்றவர் மனைவியை சுற்றுலா இடங்களுக்கு (நைனி தால், காஷ்மீர், கோவா, ஊட்டி…) அழைத்துச் சென்றால்…  
மனைவி : வீடு தான் முக்கியம் ! வீணா செலவு பண்ணுறீங்க. உங்க கிட்ட பணம் கொட்டி கிடக்குதோ? அந்த பணத்தை வச்சு வீட்ட modify செய்யலாம்... , எனக்கு நாலு புடவை வாங்கி தரலாம்....   

🤓🤓🤓  

*
*9. ஓய்வு பெற்றவர் பழைய பாடல்களை ரசித்தால்…  
மனைவி : கிழத்துக்கு காதல் பாட்டு கேக்குதோ.... ? இளைமை ஊஞ்சலாடுதோ? பாடணும்னா பக்திப் பாடல்கள் பாடுங்க!  

🤓🤓🤓  

*

10. ஓய்வு பெற்றவர் நண்பர்களை அழைத்து பேசினால்…  
மனைவி : எப்பவும் மொபைலும் கையுமா...... தான் பேச்சுப்பேச்சு.... ! யார் கிட்ட இவ்வளவு நேரம் பேசறீங்க? நாங்கள் யாரையும் இப்படி பேசி போரடிக்க மாட்டோம்!  
🤓🤓🤓🤓
  
 11. ஓய்வு பெற்றவர் அழகாக மேக்கப் போட்டு இருந்தால் …  
மனைவி : இந்த வயசில என்ன அலங்காரம் கேக்குதோ ? வேற எங்கே போகப் போறீங்க? வீட்டில்  மருமகள் இருக்கிறா—உங்களைப் பார்த்து என்ன நினைப்பா?  

🤓🤓🤓  

*
 ஆஹா! ஓய்வு பெற்ற வாழ்க்கை!  
எல்லா ஓய்வு பெற்ற நண்பர்களுக்குமான அன்பான அர்ப்பணிப்பு 💓💓  

✨😄 உண்மையிலேயே நம்மில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும் அனுபவங்கள் தான்!

2/25/2025

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

 என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!



விரித்த படுக்கை விரிப்பில்
கசங்கல் இல்லை இப்போது.

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது.

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது.

புதிய புதிய உணவு கேட்டு
ஆர்ப்பாட்டமும் இல்லை இப்போது.

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

காலையில்
எழுந்ததும்
உள்ள  பரபரப்பு
நேரம்
இல்லை இப்போது!

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது!!

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது!

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது!

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்று விட்டேன்!!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது!

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது!

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது!

உணவு ஊட்டிய பின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது!

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது!

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

கண் இமைப்பதற்குள் வாழ்வின் பொற்காலம் ஓடித்தான் போனது

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ?

மழலை மொழியில்
வழிந்த ஆனந்தமும்,
நொடிச் சிரிப்பும், அழுகையும்,
முதுகில் தட்டித் தந்து,
மடியில் கிடத்தி, தோளில்
சாய்த்து தாலாட்டு பாடி,
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து, கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்,
நிலைமையும் இல்லை இப்போது!!

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது  இப்போது!

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது!!

பள்ளிக்கு
அழைத்துச் சென்ற வருடங்களை
நினைக்காத
நாளில்லை!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது!

நாற்காலிக்கு போட்டி அப்போது!  
ஆனால் அவை      அசைவின்றி, ஆளில்லா
வீடுபோல் நிற்கிறது.

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது!

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது!!

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி
அலைபேசியில் விசாரிப்பு.

நான் ஓய்வுடன் நலம் பேண, ஆயிரம் அறிவுரை தருகிறார்கள் இப்போது.

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்.

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

நான் குழந்தையாகி விட்டதை உணர்கிறேன் இப்போது!!

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்று விட்டேன்!!

யாரோ  ஒருவர் எழுதியது! இன்று இவை எனக்கு!!  நாளை இவை உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையை ரசித்து அனுப வியுங்கள்!

 


 

2/20/2025

நாகேஷ் !

 எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!


திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்! 


நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்!


`அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!


இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர். டைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.


பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

12/06/2024

எம்.ஜி.ஆரிடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்கம். ஏவிஎம் சரவணன் !

 

சிலர், ஒருசிலரிடமிருந்து எதாவது ஒரு நல்ல பழக்கத்தை வாழ்க்கையில் கற்றுக்கொள்வார்கள் .... இப்படித்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடமிருந்து தான் கற்றுக்கொண்ட நல்ல பழக்கம் குறித்து ஏவிஎம் சரவணன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில்....

'அன்பே வா ' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம், காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையான காலை 11 மணி அளவில் ஒரு மெல்லிய பசி இருக்கும். அந்த வேளையில் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும், டீ மற்றும் வடை கொடுப்பது வழக்கம். நாங்கள் அதை ‘குரங்கு டிபன்’ என்போம். அன்றும் அப்படித்தான் கொடுக்கப்பட்டது. அப்போது என் அருகில் இருந்த எம்.ஜி.ஆர்., ‘சரவணன்.. நீங்க வடையை உங்கள் ரூம்ல வச்சி சாப்பிடுங்க’ என்றார்.

நான் என்ன ஏதென்று புரியாமல், ‘என்ன சார்.. என்னாச்சி?’ என்றேன்.

‘ஒரு பொருளை எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடணும். இல்லையென்றால் தனியாக வைத்து சாப்பிட வேண்டும்’ என்றார்

.

நானோ, ‘இல்லை சார். எல்லோருக்கும் கொடுத்தாச்சே..’ என்றேன்.

எம்.ஜி.ஆர். மேலே கையைக் காட்டினார். அங்கு ஒரு லைட்மேன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ‘அவருக்கு நீங்க டீ, வடை கொடுக்கலை’ என்றார்.

எல்லாருக்கும் கொடுத்தாச்சான்னு பார்த்துட்டு சாப்பிடணும் என்று எம்.ஜி.ஆர். சொன்ன அந்த வார்த்தை, இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. நான் வெளியில் செல்வதற்காக புறப்படும்போது, என்னுடைய டிரைவரிடம் கூட ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டுக் கொண்டுதான் வண்டியை எடுக்கச் சொல்வேன். அந்தப் பழக்கம் எனக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் வந்தது என தெரிவித்தார்..

மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் !

 

முப்பது வயதாகியும் திருமணத்திற்கு வரன் கிடைக்காத என் நண்பனுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்கள்.

திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து அவனை சென்னையில் பார்க்கும் பொழுது புலம்பித் தள்ளி விட்டான். அவன் மனைவி அவனை விட ஒரு வருடம் பெரிய பெண்ணாம், இவன் கோதுமை நிறம் அவன் மனைவி மாநிறத்திற்கும் சற்று கம்மி.

ச்சே.. எல்லாம் இந்த ஜாதகம் ஜோசியம் இதனால வந்தது.. எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குறதுனால வேற எந்த பொண்ணும் கிடைக்கல..

"சரி விடுடா.. ரிலாக்ஸா மேரேஜ் லைப்பை ஓட்ட பாரு.." என்றேன். என்னால் வேறு என்ன சொல்ல முடியும்.

மூன்று மாதங்களுக்கு பிறகு அவனை சந்திக்க குடும்பத்துடன் சைதாபேட்டையில் இருந்த அவனுடைய அபார்ட்மெண்ட்டிற்கு சென்றிருந்தேன். கணவன் மனைவி இருவருக்குள் செல்ல சீண்டல்கள் போன்ற அன்னியோன்யம் தெரிந்தது. என் மனைவியும் அவனுடைய மனைவியும் சேர்ந்து சமையல் வேலை செய்து கொண்டிருக்க, என் மகன் டிவி பார்த்து கொண்டிருந்தான், நானும் அவனும் சில பொருட்களை வாங்க அருகிலிருந்த கடைக்கு சென்றோம்.

என்னடா மச்சான்.. அன்னைக்கு பிடிக்கல'ன்னு சொன்ன.. இப்ப பார்த்தா அப்படி தெரியலையே..

நிஜம் தான்'டா..

பிறகு அவனே வாய் திறந்தான். திருமணத்திற்கு பின் மூன்று மாதங்கள் ஆன பிறகும் கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லை. இருவருக்குள்ளும் 'ஆம்' 'இல்லை' என்று ஒரு வார்த்தை பதிலுடனே வாழ்க்கை சென்று கொண்டிருந்திருக்கிறது.

இவர்கள் போர்ஷனுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டி இதை கவனித்திருக்கிறார். ஒரு நாள் இவன் மனைவியிடம் விசாரிக்க, அவனுடைய மனைவியும் "அவரு விலகி போனா நான் என்ன செய்யுறது?.." என்று அழுது கொண்டே கூறியிருக்கிறார்.

அந்த பாட்டிக்கு இவனை, இவனுக்கு திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே தெரியும் என்பதால் இவனை அழைத்து "ஏன்டா.. பொண்டாட்டியை வெளிய கூட்டிகிட்டு போறது தான?.." என்று கூறியிருக்கிறார்.

இவன் அதற்கு "இந்த வாரம் ஞாயித்துக் கிழமை மாயாஜால் அழைச்சுக்கிட்டு போறேன்.." என்று கூறியிருக்கிறான்.

அந்த பாட்டி அதற்கு இவனை கபாலீஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து சில நாட்களுக்கு செல்லும்படி கூறி, அவருக்கு தெரிந்த அர்ச்சகர் மூலமாக சில பூஜைகளையும் புக் செய்து கொடுத்திருக்கிறார். அதுவும் அவருடைய சொந்த செலவில். அந்த பாட்டி தான் இவர்கள் இருக்கும் போர்ஷனின் உரிமையாளர் என்பதால் இவனால் மறுக்க முடியவில்லை.

சரிடா.. அதுக்கும் உன் மனசு மாறுனதுக்கும் என்னடா சம்பந்தம்..

இல்லடா.. தொடர்ந்து மூனு ஞாயித்து கிழமை அங்க போனோம்.. ஒரு பொண்ணு அவ்வளவு லட்சணமா இருந்தா, ஆனா கோவில் வாசல்'ல முட்டி போட்டு கண்ணை மூடிக்கிட்டு மடிப்பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தா.. அவளுக்கு பக்கத்துல அவளோட புருஷன் கைக்குழந்தையோட நிக்குறான்.. பார்த்தாலே கொஞ்சம் வசதியானவங்க தான்னு தெரியுது.. அந்த பொண்ணு ரெண்டு கையில பிடிச்சிக்கிட்டு இருக்குற புடவை முந்தானையில சில்லறை காசுங்களும் அஞ்சு பத்து ரூபா நோட்டெல்லாம் இருந்தது.. இவங்களுக்கும் ஏதோ பிரச்சினை இருக்குன்னு தான அர்த்தம்.. அங்க நாங்க போகும் போது நிறைய கல்யாணம் நடந்துகிட்டு இருக்கும்.. ஒன்னு மாப்பிள்ளை சுமாரா இருப்பான் பொண்ணு சூப்பரா இருக்கும்.. பொண்ணு சுமாரா இருந்தா மாப்பிள்ளை நல்லா இருக்கான்.. அதுவும் இல்லாம பொண்ணுங்களை புடைவையில பார்க்கும் போது ஏதோ ஒரு நிறைவா இருக்குடா.. என் மனைவி கூட இந்த நைட்டி குர்தா எல்லாத்தையும் விட புடவையில உறுத்தாத அழகோட இருக்காங்க.. என்னமோ அப்படியே எல்லாம் மாறி போயிடுச்சு..

கடையிலிருந்து அவனுடைய வீட்டிற்கு திரும்பி சென்றவுடன் நான் நேராக அந்த பாட்டியின் வீட்டிற்கு சென்றேன். எனக்கும் அந்த பாட்டியை ஓரளவிற்கு தெரியும்.

சிறிது நேர பேச்சுக்கு பின் நேரடியாக விஷயத்திற்கு வந்தேன். "இப்படி பண்ணா மனசு மாறிடுவான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?.." என்றேன். அதற்கு அந்த பாட்டியின் கணவர் தன் நடுங்கும் குரலில் "கண்ணை மூடி சாமி கும்பிடும் போது நம்ம மனைவி ரொம்ப லட்சணமா தெரிவாங்க'ப்பா.." என்றார் கிண்டலாக.

சும்மா சொல்லாதீங்க..

அந்த பாட்டி உடனே "மாலுக்கு தியேட்டருக்கு எல்லாம் போனா, ஆம்பளை ஒன்னு செலவை பத்தி கவலைப்படுவான்.. இல்லைன்னா அடுத்தவன் பொண்டாட்டியை பார்த்து வயித்தெரிச்சல் படுவான்.." என்றார். மேலும் "அதே அடிக்கடி கோவிலுக்கு போய் பாரு.. அங்க வர்ற பெரும்பாலான தம்பதிகள் அழகா இருந்தாலும் சரி, சொத்து சுகம் இருந்தாலும் சரி, இங்க பிரச்சினை இல்லாத மனுஷங்களே இல்லைன்னு புரியும்.. அதுமட்டுமில்லாம வெயில் நேரத்துல பொண்ணுங்க புடவை கட்டிக்கிட்டு பளிச்சுன்னு முகம் தெரிய கூட வரும் போது, எல்லா ஆம்பளைங்களுக்கும் அவங்க மனைவியை ரொம்ப பிடிக்கும்.." என்றார்.

அந்த குறும்புக்கார தாத்தா கிண்டலாக "ஈவ்னிங் கற்பூர வெளிச்சத்துல அம்மனை தரிசிச்சிட்டு அப்படியே திரும்பி அந்த மங்கலான கருவறை வெளிச்சத்துல, உன் பக்கத்துல நிக்குற மனைவியை பாரு.. ரெண்டு முகமும் ஒரே மாதிரி தெரியும்.." என்றார்.

என் நண்பனும் 2015-இல் வீட்டை காலி செய்து கொண்டு ஊரப்பாக்கம் சென்றுவிட்டான். என் நண்பனுக்கு இப்பொழுது ஆறாவது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்த பாட்டியும் தாத்தாவும் ஒருவரை தொடர்ந்து இன்னொருவர் காலஞ்சென்று நான்கு ஆண்டுகளாகின்றது.

ஆனால் இப்பொழுது அவர்களை பற்றி நினைத்தாலும் என் நண்பன் கண் கலங்குவான். அந்த தாத்தா இவனிடம் அடிக்கடி கூறுவாராம் "உனக்கான வீட்டுத் தெய்வம் உன் மனைவி தான்.. அவ நியாயமான விஷயங்களுக்கு அழுதா உனக்கு வாழ்க்கையில நிம்மதியும் ஏற்றமும் இருக்காது.." என்பாராம்.

அந்த பாட்டி அவனுடைய மனைவியிடம் "வீட்டு ஆம்பளைக்கு நம்மள விட்டா வேற யாரும்மா இருக்கா.. எல்லா பொண்டாட்டிகளுக்குமே அவங்க புருஷன் தான முதல் குழந்தை.." என்பாராம்.

11/30/2024

நடிகர் நாசர் சிவாஜியுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

 

இந்த சீன்ல நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்… அப்போ சிவாஜி சார் இப்படி சொல்லிட்டார்… நாசர் பகிர்வு…

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு அருகில் மேல்பாக்கம் என்ற ஊரில் எளிமையான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் நாசர். இவரது முழு பெயர் நாசர் முகமது ஹனீப் என்பதாகும். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் நாசர். நடிப்பது மட்டுமல்லாமல் நாசர் திரைக்கதை எழுதுதல், வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார்.

சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால் நாசர் puc படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு குடிப்பெயர்ந்தார்.. சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயின்று நடிப்புத் துறையில் பட்டம் பெற்றார் நாசர். பின்னர் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்பு பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார். இவரது ஆர்வத்தினை கண்ட கே. பாலச்சந்தர் ‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தில் நடிக்க வைத்தார் அன்று தொடங்கி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நாசர். சிறிது காலம் விமானப்படையிலும் பணியாற்றினார் நாசர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் பல தமிழ் சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நாசர். மணிரத்தினத்தின் நாயகன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்ததன் மூலம் சினிமாவில் திருப்புமுனையை பெற்றார் நாசர். கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்து பிரபலமானார் நாசர்.

90களில் பிற்பகுதியில் 2000களில் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார் நாசர். ‘ரோஜா’, ‘தேவர் மகன்’, ‘பம்பாய்’, ‘குருதிப்புனல்’, ‘தேவதை’, , ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘மகளிர் மட்டும்’, ‘படையப்பா’, ‘அவ்வை சண்முகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’,’போக்கிரி’, ‘தனி ஒருவன்’, ‘சிங்கம்’ போன்ற படங்கள் இவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

இது தவிர ‘பாப்கார்ன்’, ‘மாயன்’, ‘தேவதை’, ‘அவதாரம்’ போன்ற திரைப்படங்களில் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். நாசர் தனது நடிப்பிற்காக கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது, சிறந்த எதிர்மறை நடிகர், சிறந்த துணை நடிகர் என தமிழ்நாடு அரசு விருதுகளை வென்றுள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் நாசர் சிவாஜியுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.. அவர் கூறியது என்னவென்றால் தேவர் மகன் படத்தில் சிவாஜி சாரோட மகனா நடிச்ச அப்போ சிவாஜி சாரை திட்டுற மாதிரி ஒரு சீன் இருக்கும். அந்த சீன்ல எனக்கு சிவாஜி சார் முகத்தை பார்த்து எனக்கு திட்றதுக்கு மனசே வரல. அந்த சீன்ல நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போ சிவாஜி சார் என்னை கூப்பிட்டு என்னப்பா நடிக்க ரொம்ப கஷ்டமா இருக்கா. அப்பனை திட்றதுக்கு யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? உனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. நல்ல திட்டு நல்ல மனசார திட்டு அப்படின்னு சொல்லி எனக்கு புரிய வச்சு என்ன நடிக்க வச்சாரு சிவாஜி சார் என்று பகிர்ந்துள்ளார் நடிகர் நாசர்.

தமிழச்சி கயல்விழி!

அம்மா என் வீட்டுக்காரரை எப்படி கொலை செய்வது !

 

அம்மா என் வீட்டுக்காரரை எப்படி கொலை செய்வது !

ஒரு வீட்டில் ஒரு கணவன் மனைவி வாழ்ந்து வந்தனர் !

ஒரு நாள் மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போய், கோபமாக அம்மா என் வீட்டுக்காரருடன் என்னால் இனிமேல் வாழ முடியாது,தினம் பிரச்னை , நிதம் சண்டை . என் நிம்மதியே போச்சு.

எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டாம் ! அவன் முகத்தையே பார்க்க பிடிக்கலை அதனால் அவனை கொலை செய்து விட முடிவு செய்து விட்டேன் போலீசில் மாட்டி கொள்ளாத மாதிரி ஒரு நல்ல திட்டமா சொல்லுங்க என்றார்;

அதற்கு அவரின் அம்மா மகளின் பிடிவாத குணம் தெரிந்ததால் , சரி நான் உனக்கு ஒரு நல்ல யோசனை சொல்கிறேன் ; ஆனால் நான் சொல்கிறபடி நீ நடக்க வேண்டும் .

கவனமாக கேள் !

1. இனி வீட்டில் வெளியில் எங்கும் அவரிடம் சண்டை போட கூடாது ! அப்பத்தான் பார்ப்பவர்கள் இவர்கள் மிகவும் அன்பான தம்பதியர் என்று கருதுவார்கள் !

2. எப்பொழுதும் உன் கணவரிடம் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்து கொள்ள வேண்டும் .

3. நல்ல ருசியான உணவுகளை சமைத்து தினம் கொடுக்க வேண்டும் .

4. அவர் வீட்டு சொந்தங்களை அன்பாகவும் அக்கறையுடனும் நடத்த வேண்டும் .

5. அவரை கேட்டு தான் எந்த செலவும் செய்ய வேண்டும் ;

இது எல்லாம் தினம் செய் கூடவே நான் ஒரு மருந்து தருகிறேன் இரவு உன் கணவர் தூங்கும் முன் அதை ஒரு ஸ்பூன் பாலில் கலந்து கொடு ! ரெண்டு மாதம் யாருக்கும் எந்த சந்தேகம் வராது உன் வீட்டுக்காரர் இறந்து விடுவார் என்று சொல்ல !

சரிம்மா அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு போனார்!

இப்படியே ஒன்னரை மாதம் ஓடியது ! திடீர் என்று அம்மாவை பார்க்க மகள் ஓடி வந்தார்.

அம்மாவிடம் வந்து அம்மா நீங்க சொன்ன மாதிரி கடந்த ஒன்னரை மாதமாக நடந்து கொண்டு இருக்கேன் ! ஆனால் அவர் இப்பொழுது முற்றிலும் அன்பாக மாறி விட்டார் ! எனக்கும் அவர் மேல் அன்பும் பாசமும்,காதலும் அதிகம் ஆகி விட்டது !

அதனால் அவரை கொல்லும் எண்ணம் இல்லை . தயவு செய்து நீங்கள் கொடுத்த விஷத்திற்கு மாற்று மருந்து கொடுங்கள் என்று சொல்ல !

அம்மா சிறிது கொண்டே சொன்னார்கள் கவலை படாதே நான் வெறும் மூலிகை பொடி தான் கொடுத்தேன் அது விஷம் இல்லை !

போய் நிம்மதியுமாக வாழ்க்கையை நடத்து !

அண்ணாவின் சிகிச்சைக்கான செலவை ஏற்ற எம்.ஜி.ஆர்.!

 

அண்ணாவின் சிகிச்சைக்கான செலவை ஏற்ற எம்.ஜி.ஆர்.!

அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபின் 1968-ல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரம். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த அனந்த நாயகி கேள்வி நேரத்தின்போது அண்ணா அவர்களை நோக்கி, “முதல்வர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவானது. அது உங்கள் சொந்தப் பணமா? அல்லது அரசு பணமா? அல்லது உங்கள் கட்சி செலவா?” என்று கேட்டார்.

அதற்கு அண்ணா அவர்கள் சபையைச் சுற்றிப் பார்த்து, “உங்களுடைய இந்தக் கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன்” என்றவுடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர்.

மறுநாள் சட்டப்பேரவைக் கூடியதும் அதே கேள்வி நேரத்தில், “நேற்று நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்” என்று அவர் மீண்டும் கேட்டார்.

அண்ணா அவர்கள், “எனது சிகிச்சை முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை. தமிழக அரசும் கொடுக்கவில்லை. எங்கள் கட்சியும் அந்தச் செலவை ஏற்கவில்லை.

செலவான தொகை ஒரு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய். அதை மொத்தமும் இங்கே, இதோ சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கிற என் அன்புத் தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், அவரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை, எனக்காக, என் சிகிச்சைக்காக அவரே ஏற்றுக் கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ.

நேற்று அவர் அவைக்கு வரவில்லை. அவர் முன்னால் இந்த விளக்கத்தைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை” என்றவுடன் சட்டமன்ற அவையில் எழுந்த கரவொலி கட்டடம் தாண்டிக் கேட்டது.

வாழ்க்கையின் அனைத்து விநாடிகளையும் செதுக்கிச் செதுக்கி தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டவர் எம்.ஜி.ஆர்.

பட்டினியில் கிடந்தபோதும் சரி, பணம் மழைபோல அவர் வாழ்வில் கொட்டிய போதும் சரி தன்னிலை தவறாதவர் எம்.ஜி.ஆர்.

அண்ணா அவர்களுக்கான சிகிச்சை தொகையை எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொண்டதாக ஒரு நாளும், ஒரு இடத்தில் கூட அவர் சொன்னதில்லை. அண்ணா அவர்கள் சொன்ன பிறகே இந்த உண்மை நாட்டுக்குத் தெரிந்தது.

– நன்றி

எதற்காக திருமண பொருத்தம்???

 திருமண பொருத்தம்images for indian tamil marriage4

முன்னுரை:

💐 நாகரிகமும், அறிவியலும் வளர்ந்த இந்த நவீனக் காலத்தில் திருமணங்கள் முறையாக நடக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். இரு மனங்கள் இணையும் திருமண வாழ்வு, பயிர்களை போலச் செழித்து நிற்க நம் முன்னோர்கள் பல உத்திகளைக் கையாண்டனர். பெயர், ராசி, நட்சத்திர பொருத்தம் எனப் பல பொருத்தங்களைப் பார்த்து திருமணம் நடத்தினர். அதன் மூலம் முழு மனதுடன் வாழ்ந்து தங்கள் குடும்பத்தை வாழவைத்து வாழ்வை வளப்படுத்தினர். இத்தகைய திருமண பொருத்தம் பார்த்து திருமணம் புரிய நமது நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! திருமண வாழ்வைத் தொடங்குங்கள்!!

எதற்காக திருமண பொருத்தம்???

💐 இந்தப் பொருத்தங்கள் எல்லாம் எதற்காகப் பார்க்கப்பட்டன? இது நம் முன்னோர்களின் அபார திறமையை விளக்குகிறது. உதாரணமாகத் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது மூடநம்பிக்கையாகவோ அல்லது நகைச்சுவையாகவோ இருக்கலாம். ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால் செவ்வாய் என்பது இரத்தத்தைக் குறிக்கிறது. எண்ண ஓட்டங்களும் இரத்த ஓட்டங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இரத்த வகையை பரிசோதித்தால்தான் அது "பாசிட்டிவ்" அல்லது "நெகட்டிவ்" என்பதை அறிய முடியும். இதைத்தான், செவ்வாய் ஸ்தானத்தை வைத்து நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. இப்படிப் பல அறிவியல் விஷயங்கள் இந்த ஜோதிடத்தில் மறைந்துள்ளன. நமது முன்னோர்கள் இதை அறிவியல் பூர்வமாக விளக்காமல் அதை ஜோதிடம் என்று விட்டு விட்டதால் தான் இன்று நாம் ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கை கொள்ள மறுக்கிறோம்.

💐 எனவே, திருமண பொருத்தமானது மிகவும் முக்கியமானது. திருமணம் செய்யப்போகும் ஆண், பெண் இருவருக்கும் ஜாதகம் பொருத்தம் உள்ளதா என்று தெரிந்து கொண்டு திருமணம் செய்தால், வம்சம் "வாழையடி வாழையாக" தழைக்கும்.

திருமண பொருத்தம்:

💐 திருமண பொருத்தம் மொத்தம் 12 ஆகும். அவற்றுள் 10 பொருத்தம் மட்டுமே முக்கிய பொருத்தம் என்பார்கள்.

1. தினப்பொருத்தம்
2. கணப் பொருத்தம்
3. மகேந்திர பொருத்தம்
4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்
5. யோனிப் பொருத்தம்
6. ராசிப் பொருத்தம்
7. ராசி அதிபதி பொருத்தம்
8. வசியப் பொருத்தம்
9. ரஜ்ஜுப் பொருத்தம்
10. வேதைப் பொருத்தம்

1. தினப்பொருத்தம்:

💐 தினசரி பொருத்தம் என்பது கணவன்-மனைவிக்கு இடையேயான அன்றாட சூழ்நிலையைப் பார்க்க இந்த பொருத்தம் உதவுகிறது மற்றும் இரு ஜாதகங்களிலும் சந்திர பகவான் அமைவதன் மூலம் இந்த தினப் பொருத்தம் கணிக்கப்படுகிறது.

💐 இந்த நாள் திருமண பொருத்தத்திற்கு ஏற்றதாக இருந்தால், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் நல்லிணக்கமும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் இருக்கும்.

2. கணப் பொருத்தம்:

💐 ஜோதிடத்தில் நட்சத்திரங்கள் மூன்று கணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே தேவ கணம், மனுஷ கணம், ராட்சஸ கணம் ஆகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க இந்த பொருத்தம் மிகவும் முக்கியமானது.

3. மகேந்திர பொருத்தம்:

💐 மகிழ்ச்சியான திருமணத்திற்கும் இல்லறம் இனிதே இருக்கவும் குழந்தை செல்வம் அவசியம். இந்த பொருத்தம் தம்பதிகளின் குழந்தை செல்வத்தைக் குறிக்கும், அல்லது புத்திரர்கள் மூலம் செல்வம் பெருகும்.

4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்:

💐 திருமண வாழ்க்கையை மங்களகரமாகத் தொடங்கும் திருமணமான பெண், தன் வாழ்நாள் முழுவதும் மஞ்சள் குங்குமத்துடன் மங்களகரமாக இருக்க விரும்புவார். அதனால்தான் பெரியவர்களும் திருமணமான பெண்களை “தீர்க்கசுமங்கலி பவ” என்று வாழ்த்துகிறார்கள். இது பெண்ணிற்கான முக்கியமான பொருத்தமாகும்.

5. யோனிப் பொருத்தம்:

💐 ஜோதிடத்தில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உள்ளது. அதன் அடிப்படையில் இந்தப் பொருத்தம் காணப்படுகின்றது. ஆண் மற்றும் பெண் நட்சத்திர மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் இது பொருந்தாது. பகை என்பது குடும்பத்திற்கு ஆகாது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குத் தம்பதிகளிடையே அன்னியோன்யம் தேவை. எனவே இந்த பொருத்தம் காணப்படுகிறது. இந்த இணக்கம் இருந்தால், திருமண உறவு வெற்றி பெறும்.

6. ராசிப் பொருத்தம்:

💐 ராசி அதிபதிப் பொருத்தம் என்பது குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காணும் பொருத்தம். பன்னிரெண்டு ராசிகளுக்கும் அதிபதி உண்டு, அந்த ஆட்சிக் கிரகம் மற்ற கிரகங்களுடன் நட்பு, சமத்துவம், பகை என மூன்று வழிகளில் உறவைக் கொண்டுள்ளது. இதில் ஆண், பெண் ராசிகளுக்குள் பகை தவிர நட்பு, சமத்துவம் இருந்தால் பொருத்தம் உள்ளது என்று அர்த்தம்.

7. ராசி அதிபதி பொருத்தம்:

💐 மணமகன், மணமகள் இருவரும் ஒரே ராசியாக இருந்தால் பொருத்தமாக இருக்கும். இல்லையெனில், இருவரின் ராசியில், நட்பு ராசியானது அதிபதியாக இருந்தால் பொருத்தம் பொருந்தும். இரு ராசி அதிபதிகளும் பகையாக இருக்கக்கூடாது. இது ராசி அதிபதி பொருத்தம் ஆகும்.

8. வசியப் பொருத்தம்:

💐 ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும்போது, இறுதியில் சலிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த சலிப்புத் தன்மை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு வசியப் பொருத்தம் இருக்க வேண்டும்.

💐இந்த இணக்கத்தன்மை கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

9. ரஜ்ஜுப் பொருத்தம்:

💐 திருமணப் பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தம்பதியரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.

💐 மிக எளிமையாகச் சொல்வதானால், திருமணத்திற்கான ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜு அல்ல என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். இவ்வாறு பார்ப்பதன் மூலம் அந்தப் பெண் தீர்க சுமங்கலியாகச் சுகமாக வாழ்வாள்.

10. வேதைப் பொருத்தம்:

💐 வேத பொருத்தம் என்பது திருமண வாழ்வில் வலியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஒரு பொருத்தம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டுமே வேதாவாக இருக்க முடியும். இந்த வகையான வேத நட்சத்திரம் ரஜ்ஜு பொருத்தம் இல்லாத அல்லது ஒற்றை ரஜ்ஜூ நட்சத்திரமாக இருக்கலாம்.

💐ரஜ்ஜு குறுகிய கால திருமணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஏற்றது. ஆனால் வேதா நட்சத்திரம் சேர்ந்தால் குறுகிய கால திருமண வாழ்க்கை கூட மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும். பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் வேதா நட்சத்திரமாக இருந்தால், திருமணத்திற்குப் பிறகும் அவர்களுக்கிடையேயான வாழ்க்கை சண்டையாகவே இருக்கும்.

முடிவுரை:

💐 திருமணம் என்பது பூலோகத்தில் நிச்சயிக்கப்படுவது அல்ல, அவை சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். மேலே கொடுக்கப்பட்டுள்ள திருமண பொருத்தம் பற்றிய பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். திருமண பொருத்தம் பார்த்து வாழையடி வாழையாக திகழ செய்து வாழ்வை ஒளிமயமாக்குங்கள்!!

11/29/2024

பாடகர் மனோ !

 

இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர்.

🌹இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசைக் குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1985-ஆம் ஆண்டு கற்பூர தீபம் என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார்.

🌹 1986-ஆம் ஆண்டு இளையராஜா, பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் “அண்ணே அண்ணே” என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். அன்றிலிருந்து இவரது பாடல் பயணம் ஆரம்பித்தது. வேலைக்காரன், சின்னத்தம்பி, காதலன், சொல்லத்துடிக்குது மனசு, உள்ளத்தை அள்ளித்தா, சின்னக் கண்ணம்மா, முத்து, எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, சிற்பி., எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், தேவா, சந்திரபோஸ் போன்றவர்களின் இசையமைப்பில் தொடர்ந்து பாடிவந்தார். 

 🌹இவர் பாடகராவதற்கு முதலில் நடிகராகத்தான் தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். பாடும் வாய்ப்புப் பின்னர் இவரை இருகரம் கூப்பி அழைத்துக் கொண்டது. முதலில் 1979-ஆம் ஆண்டில் ‘நீடா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். தமிழில் ‘சிங்கார வேலன்’ படத்தில் 1982-ஆம் ஆண்டில் இவரை நடிகராக அறிமுகம் செய்தது பாவலர் கிரியேஷன்ஸ் பட நிறுவனம், இப்படத்தில் இவர் கமலஹாசனின் இணை பிரியா நண்பர்கள் குழுவில் ஒருவராக கவுண்டமணி, வடிவேலு கூட்டணியுடன் மனோ என்ற தனது பெயருடன் நகைச்சுவை விருந்தளித்தார். இதையடுத்து எனக்கு இருபது உனக்கு பதினெட்டு உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களில் தமிழில் நடித்தார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இவரும் நெருங்கிய நண்பர்கள்.