மொத்தப் பக்கக்காட்சிகள்

3/28/2017

ஒருபெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?


 ஒருபெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

♥1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது!

♥2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும்போது!

♥3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல், படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது…..

♥4.அழகை திமிராகக் காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது……

♥5.யார் மனதையும் புண்படுத்தாமல், தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க ‘எவ்வளவு நாள்?’ என்று கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது……

♥6.அச்சப்பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது!

♥7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது…..

♥8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது……

♥9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது!

♥10.ஆபாசமில்லாத உடையணிந்து, அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது……

♥11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது, ‘நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ’ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது…….

♥12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது!

♥தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்!

1 கருத்து:

  1. மிகவும் குழம்பிப் பொய் இருகிறீர்கள். சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு