மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2014

தாயுள்ளம் !




புலம்பும் தாய்

புலம்ப மறுக்கும் தந்தை..
 

புடவை பின்னால் ஒளிந்து கொண்ட மகன்...
 

மறந்து போனான்..
 

தான்  பெற்றதும் மகன் என்பதை...

*************

10 மாதம் கருவறையில் சுமந்த எனக்கு

என் மகன் வீட்டில் ஒரு சிறு அறை கூட கிடைக்கவில்லை!


**************

மார்பிலே தவழவிட்டு
மகனோடு கொஞ்சுகிறான்
என் மகன்!
இப்படித்தான் அவனை
ஈரமுடன் நான் வளர்த்தேன்!
எப்படித்தான் மறந்தானோ…
என்னை இன்று துரத்திவிட்டான்!
முதுமையில் தனிமையாய்
வறுமையின் கொடுமையோடு
தள்ளாடித் தவித்தபோதும்
விழிகள் பரபரக்கும்
தூரத்தில் நின்றேனும்
ஒருமுறை என் மகனைக் காண!
பிரார்த்தனை
வேறொன்றுமில்லை
கடைசிவரை கைவிடாமல்
பேரனாவது காக்க வேண்டும்
என் மகனை!
 
Thanks to tamilparents.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக