மொத்தப் பக்கக்காட்சிகள்

11/30/2011

மருத்துவர்கள் கமிஷன்


எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ஒரு தொகை, யூரின், ரத்தப் பரிசோதனை மற்றும் மலப்பரிசோதனை என்று பரிசோதனைக்குத் தக்க கமிஷன் தொகையை மருத்துவர்கள் பெற்று வருகின்றனர்.

ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் அதாவது காது, மூக்கு, தொண்டை நிபுணர், சிறுநீரக நிபுணர், கிட்னி சிறப்பு மருத்துவர், நரம்பியல் நிபுணர் என்று ஒரு பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மாதமொன்றுக்கு இது போண்று டெஸ்ட்களை எழுதிக் கொடுப்பதன் மூலமே ரூ.1 லட்சம் வரை வருவாய் பெறுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு சில மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை மையங்களிலிருந்து 'அட்வான்ஸ்' பெறுவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்களைத் தேர்வு செய்து குடும்பத்துடன் துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து என்று அனுப்பி வைக்கும் பழக்கமும் நீண்ட நாட்களாக இருக்கிறது.

அனைத்து பிரபல நிறுவனங்களின் பிரபல பிராண்டுகளும் இம்மாதிரி மருத்துவர்களை 'சிறப்புக் கவனிப்பு' செய்து இன்று பெரிய பிராண்டுகளாக வளர்ந்தவையே.

மொத்தத்தில் பாதிக்கப்படுவது யார்? அப்பாவி நோயாளிகள்! கல்விக்கொள்ளை, மருத்துவக் கொள்ளை ஆகியவற்றை எந்த ஒரு அரசு தடுக்கிறதோ அந்த அரசுதான் சிறந்த அரசு.

இவ்விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத எவ்வளவு பெரிய ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் புறப்பட்டாலும் அதனால் மக்களுக்கு எந்த விதப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக