மொத்தப் பக்கக்காட்சிகள்

1/28/2012

சாதியம் அழித்து மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.



மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான்.ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது.

 அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர். இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா கலாசாரங்களிலும் இத்தகைய சமூகக் குழுக்கள் தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப் பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன.

 இதே போன்று, பாரத நாட்டில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே சாதிகள்.

ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும்,மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும்.

 ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை.

மனிதர்கள் அனைவரும் ஒன்றே, சாதி வேறுபாடுகள் காலாவதியானவை என்கிற எண்ணமே மானுடநேய எண்ணமாகும்.

 ஒவ்வொரு சாதியினரும் தன்னுள் ஊறிப்போயிருக்கும் இந்த சாதிய எண்ணத்தை அழித்து மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.
 
 

நிலத்திலும், நீரிலும் செல்லும் அதிசய பேட்டரி கார்

திர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியில் இயங்கும் கார்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பல முன்னணி கார் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள பிரிஸ்ட் பல்கலைகழகத்தில் பயிலும் இறுதியாண்டு எஞ்சினியரிங் மாணவர்கள் 7பேர் கொண்ட குழு புதிய பேட்டரி காரை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய பேட்டரி கார் நிலத்திலும்,நீரிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடியிலுள்ள ஹைடெக் புராஜெக்ட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் முரளி மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி இந்த புதிய காரை பிரிஸ்ட் பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

-கார்போ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கார் நிலத்தில் 30 கிமீ வேகத்திலும்,நீரில் 15கிமீ வேகத்திலும் செல்லும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.இரண்டு பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த கார் சூரிய சக்தி மின்சாரத்தை சேமித்து இயங்கும் என்பதால் இரவில் கூட இதில் பயணம் செய்ய முடியும் என்கின்றனர் இந்த காரை வடிவமைத்த மாணவர்கள்.

மேலும்,சுற்றுச்சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாது என்று கூறிய அவர்கள் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டு இந்த காரை வடிவ மைத்ததாக தெரிவித்தனர். வெறும் ரூ.35,000 செலவில் இந்த காரை உருவாக்கியுள்ளதாக மாணவர்கள் கூறினர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் முனுசாமி முன்னிலையில் இந்த காரை புகழ்பெற்ற தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே மாணவர்கள் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பித்தனர். அப்போது, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அங்கு குழுமியிருந்தனர்.

நிலத்தில் சிறிது தூரம் சென்ற அந்த கார் திடீரென நீரிலும் இறங்கி படகு போன்று மிதந்து சென்ற அந்த காரை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்த காரை வடிவமைத்த மாணவர்களை ஆட்சியர் முனுசாமி, மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கோடியாய் கோடியாய் பணத்தை கொட்டி தொழில்நுட்பத்தை உருவாக்கி நீர், நிலம் இரண்டிலும் செல்லும் ஹோவர் கிராப்ட்டுகளை பல முன்னணி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

ஆனால், உள்ளூரில் கிடைக்கும் உதிரிபாகங்களை கொண்டு வெறும் 35,000 ரூபாயில் இந்த காரை வடிவமைத்து சாதனை புரிந்துள்ள இந்த மாணவர்களின் சாதனை தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறோம்.

இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு hitech.engineeringproject@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 
 
 
 
 

தத்துவம்…!



1.நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்ஆனால் BLOOD  TEST ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே THANK YOU  தேங்க் யூ சொல்ல முடியாது

2. . டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

3, என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

4.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

5.என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

6.நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.

7.காசு இருந்தா கால் டாக்சி!!  காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

8.பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

9.இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியை முடியாது.

10.பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

11.இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

12.பஸ்சுல கலெக்டரே ஏறினாலும்  முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

13.சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

14.ஆயிரம் தான் இருந்தாலும் 1001 ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை



1. முட்டாள் கணவன்,

மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.
 
2.மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். 

திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போ தெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.


3. விரைவான தகவல் தொடர்புக்கு

செய்தியை பெண்ணிடம் சொல்.

அதி விரைவு சேவைக்கு இதை யாரிடமும் சொல்லாதேஎன்னும் அடைமொழியுடன் சொல்.
4. திருமணம்

    ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில்
    அதை திருமணம் என்க.

5. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது    என்கிறது ?

 அடப்போப்பாஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !

1/27/2012

சூரியப் புயல்



நமது புவியை ஒளிரச் செய்துக்கொண்டிருக்கும் சூரியனில் மேற்பரப்பில் இருந்து வெளியான சூரியப் புயல் கடும் வேகத்தில் பயணித்து இரண்டு நாட்களுக்குப் பிறகு புவியின் வெளிப்பரப்பைத் தாக்கியுள்ளது.சூரியனில் இருந்து இப்படிப்பட்ட புயல் (Solar Storm) புதியது அல்ல. ஆனால் அது புவியின் வெளிப்பரப்பைத் தாக்கியது அரிதான செய்தியாகும்.

சூரியனின் மேல் பரப்பில் இருந்து வெளியாகும் இந்த புயல் கதிர் வீச்சுடனும், காந்த சக்தியுடனுமான வாயுப் பிழம்பாகும். சூரியனில் இருந்து காந்த சக்தியாக வெளிப்படும் இது பிறகு ஒளிரும் வாயுவாக மாறுகிறது என்று கூறுகின்றனர். கடந்த 24 ஆம் தேதி சூரியனின் மேற்பரப்பின் ஒரு பகுதியில் இருந்து வெளிப்பட்ட சூரியப் புயல் மணிக்கு 50 இலட்சம் மைல் வேகத்தில் பயணித்து இரண்டே நாட்களில் புவியின் வெளிப்பரப்பை தொட்டுள்ளது. புவியை தொடும்போது அது மிகவும் வலிமை குறைந்த மத்திய தரமான சூரியப் புயலாக (Medium - size solar storm) ஆனது என்று இதனை ஆய்வு செய்து, தகவலை வெளியிட்ட யு.எஸ். தேச கடல் மற்றும் வாயு மண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration - NOAA) விண் வானிலை கணிப்பு மையம் (space Weather Prediction Centre - SWPC) தெரிவித்துள்ளது. அதன் கணக்குப்படி, இந்த சூரியப் புயல் தாக்கம் 5 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாம்.
 நாம் வாழும் புவியின் வெளிப்பரப்பை சூரியப் புயல் தாக்கியது நாம் சற்றும் உணரவில்லை என்றாலும், அது வந்த வழியில் இருந்த செயற்கைக் கோள்களுக்கும், இருப்பிடம் அறிய பயன்படுத்தும் கருவிகளுக்கும் (Global Positioning System - GPS) பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஆனால் இதே சூரியப் புயல் இன்னும் வலிமையானதாக இருந்திருந்தால் அது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கைபேசிகளில் இருந்து மின்சார கட்டமைப்புகள் வரை பாதித்திருக்கும் என்று கூறுகின்றனர் அறிவியலாளர்கள். இதில் விமான சேவை, செயற்கைக்கோள்கள் ஆகியன பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் என்றும் கூறுகின்றனர். பொதுவாக சூரியனில் ஏற்படும் இப்படிப்பட்ட புயல்கள் புவிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு உருவானதில்லை என்று நாசா கூறுகிறது. சூரியனில் ஏற்படும் புயலை கண்காணிக்க இரண்டு செயற்கைக் கோள்கை எதிரும் புதிருமாக நிறுத்தி ஆய்வு செய்து வருகிறது. பல படங்களையும் எடுத்துள்ளது.ஆம் ஆண்டில்தான் பலமான சூரியப் புயல் புவியைத் தாக்கியது என்று கூறுகின்றனர். அப்போது அதனை டேவிட் காரிங்க்டன் என்பவர் பதிவு செய்தார். சில நேரங்களில் சூரியனில் இருந்து வரும் இந்தப் புயலால் புவியின் வளி மண்டலம் ஒளிருவதையும் பதிவு செய்துள்ளார்கள். பச்சை நிறத்தில் அந்த வாயுப் படலம் ஒளிரும் காட்சியின் விடியோ பதிவுகளை இங்கிலாந்தின் டெலிகிராஃப் தொலைக்காட்சி தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது.அறிவிலாளர்களில் சிலர் - இதுபற்றி ஆழமாக ஆராய்ந்து வருபவர்கள், சூரியனின் மேல் பரப்பில் இருந்து உருவாகும் இப்படிப்பட்ட புயலிற்கு காரணமாக கொதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அது எதிர்காலத்தில் பூமிக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர். இவர்களை ஹீலியோ அணுவியலாளர்கள் (Helio-Physicist) என்று கூறுகின்றனர்.சூரியப் புயல்களால் உலகிற்கு பயனும் உள்ளது. அதுதான் ஹீலியம் எனும் வாயுப் பொருள். சூரியப் புயலை புவியின் வளி மண்டலம் அப்படியே தடுத்து அமுக்கி விடுகிறது. ஆனால் அப்படிப்பட்ட வளி மண்டல தடுப்பு சந்திரனுக்கு இல்லாததால், அவைகள் சந்திரனில் மோதி அதன் தரைக்குள் ஊடுறுவுகின்றன. அதுவே அங்கு ஏராளமான அளவிற்கு ஹீலியம் இருப்பதற்குக் காரணம் என்கிறார்கள். ஒரு கிலோ ஹீலியத்தை பயன்படுத்தி ஒரு மில்லியன் டன் யுரேனியத்தை பயன்படுத்திப் பெறும் மின்சாரத்தை அணு உலைகளின் மூலம் உருவாக்கலாம் என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
1859
 
 
 
 

ரஜினிகாந்த் ஆலோசனைப்படி “ராகவேந்திரா கோவிலை கட்டினேன்” -நடிகர் லாரன்ஸ்




நடிகர் லாரன்ஸ் நடிகர் ராகவ லாரன்ஸ் தீவிர ராகவேந்திரர் பக்தர். அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயலில் ராகவேந்திரருக்கு கோவிலும் கட்டியுள்ளார். கடவுள் நம்பிக்கை பற்றி லாரன்ஸ் அளித்த பேட்டி வருமாறு:-
கடவுள் இமயமலையில் இல்லை. கஷ்டப்படுவோருக்கு உதவி செய்வதில் இருக்கிறார். நான் ஆறு வயதில் இறைவனை உணர்ந்தேன். எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடவுள் அருளாலும், என் அம்மாவின் பிரார்த்தனையாலும் பிழைத்தேன்.
நான் ராகவேந்திரரின் பக்தன். அவருக்கு கோவில் கட்ட முயன்றபோது ரஜினிகாந்த் ஆலோசனைகள் வழங்கினார். அவர் தந்த ராகவேந்திரரின் மாதிரி போட்டோவை வைத்துதான் சிலையை உருவாக்கினேன்.
குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் மேல் அதிக பிரியம் காட்டுவார்கள். அதுபோல்தான் நான் கடவுளை பார்க்கிறேன். மனிதன்தான் முதல் கடவுள். குடும்பத்தை தவிக்கவிட்டு சன்னியாசம் போவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் மதிய உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

இப்போது நிறைய பேருக்கு மதிய உணவு போடுகிறேன். கடவுள்தான் இதற்கெல்லாம் காரணம். வாழ்க்கையை நல்வழிபடுத்த தியானம், யோகா அவசியம். நான் தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.
இவ்வாறு லாரன்ஸ் கூறினார்

எம்.ஆர்.ராதா: சினிமா உலகையும் கலக்கினார்



நாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா. சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் கொடிகட்டிப் பறந்தவர். "நடிகவேள்" என்று பட்டம் பெற்றவர். எம்.ஆர்.ராதாவின் சொந்த ஊர் சென்னைதான்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவில் வசித்த ராஜ கோபால் நாயுடு- ராஜாம்பாள் தம்பதிகளின் 2-வது மகனாக 1908-ல் ராதா பிறந்தார். ராதாவின் அண்ணன் பெயர் எம்.ஆர்.ஜானகிராமன். தம்பி பெயர் எம்.ஆர்.பாப்பா. ராதாவின் தந்தை, உலகப்போரில் பணியாற்றியவர். ரஷிய எல்லையில் போர் புரியும்போது மரணம் அடைந்தார்.

நாடக நடிகர்

எம்.ஆர்.ராதா மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தார். நாடகத்தில் நடிக்கும் ஆசை சிறு வயதிலேயே வந்துவிட்டதால், மேற்கொண்டு படிக்கவில்லை. "டப்பி" ரங்கசாமி நாயுடு கம்பெனி, சாமண்ணா கம்பெனி, ஜெகந்நாத அய்யர் கம்பெனி என்று பல்வேறு நாடகக் குழுக்களில் ராதா நடித்தார்.

நவாப் ராஜமாணிக்கம், சி.எஸ். ஜெயராமன், கே.சாரங்கபாணி, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, பி.டி.சம்பந்தம் ஆகியோரும், இவருடன் நாடகத்தில் நடித்து வந்தனர். நடிப்புடன், கார் டிரைவர், மெக்கானிக், எலெக்ட்ரீஷியன் ஆகிய வேலைகளையும் ராதா கற்றுக்கொண்டார்.

ரத்தக்கண்ணீர்

பிறகு சொந்தத்தில் நாடகக் கம்பெனி தொடங்கினார். "ரத்தக்கண்ணீர்", "தூக்கு மேடை", "லட்சுமிகாந்தன்", "பம்பாய் மெயில்", "விமலா", "விதவையின் கண்ணீர்", "நியூஸ் பேப்பர்", "தசாவதாரம்", "போர் வாள்" போன்ற நாடகங்களை நடத்தினார். இவற்றில் மிகவும் புகழ் பெற்றது "ரத்தக்கண்ணீர்".

3,500 தடவை மேடை ஏறிய நாடகம் இது. இதில், செய்தித்தாளை ராதா படிக்கும் ஒரு சீன் வரும். அன்றாடம் வரும் செய்தித்தாளை கையில் வைத்துக்கொண்டு, அதில் வரும் செய்திகளைப் படித்து "கமெண்ட்" அடிப்பார்.

இதற்காகவே, ரத்தக்கண்ணீர் நாடகத்தை பலமுறை பார்த்தவர்கள் ஏராளம். ராதா நாடகங்களில் பிரமாண்டமான காட்சி ஜோடனைகள், சீன்- செட்டிங்குகள் எதுவும் கிடையாது.

ஒரு கறுப்புத்திரை; ஒரு வெள்ளைத்திரை. இதை வைத்துக்கொண்டே, தன் நடிப்பு ஆற்றலைக் கொண்டு, நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி விடுவார்.
ராமாயணமா? கீமாயணமா?

ஈ.வெ.ரா.பெரியார் மீதும், அவருடைய கொள்கைகள் மீதும் மிகுந்த பற்று உடையவர், ராதா. தன் நாடகங்கள் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார். "ராமன் ஒரு குடிகாரன். மாமிசம் சாப்பிடுகிறவன்" என்று சித்தரிக்கும் ராமாயணத்தை ராதா நடத்தினார். அதை "கீமாயணம்" என்று பிறர் வர்ணித்தபோது, "நான் நடத்துவதுதான் உண்மையான ராமாயணம். ராமனை நல்லவனாகச் சித்தரிப்பது தான் கீமாயணம்" என்று கூறுவார்,

ராதா.
நாடகத்தில் ராதாதான் ராமர்! ஒரு கையில் மதுக்கலயம், இன்னொரு கையில் மாமிசம்! நையாண்டி வசனங்கள் ஏராளம்.
தடை
ராதாவின் 6 நாடகங்கள் தடை செய்யப்பட்டு இருந்தன. "ஆந்திரகேசரி" பிரகாசம் முதல்- மந்திரியாக இருந்தபோது "போர் வாள்" என்ற நாடகத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை மீறி நாடகத்தை நடத்தியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலையான பிறகு நாடகத்தின் பெயரை "மகாத்மா தொண்டன்",

"மலையாள கணபதி" என்று பெயர் மாற்றி நடித்தார். கோவையில் இவருடைய ராமாயண நாடகத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் "லட்சுமிகாந்தன்" என்ற இன்னொரு நாடகத்தை நடத்தினார்.
அதில் ராமாயண நாடகத்தின் ஒரு காட்சியை தந்திரமாக புகுத்தினார். ராமாயணம் நாடகத்தை கீமாயணமாக நடத்தியதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் 16 நாட்கள் ஜெயில் தண்டனை அடைந்தார்.

காமராஜர் கரத்தால் பொன்னாடை
விடுதலையான பின்பு எம்.ஆர்.ராதாவுக்கு மக்கள் கமிட்டி சார்பில் பொன்னாடை போர்த்தும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு காமராஜர் தலைமை தாங்க வேண்டும் என்று எம்.ஆர்.ராதா விரும்பினார். காமராஜர் மீது அவர் அதிக மதிப்பு வைத்திருந்தார். அவர் விருப்பப்படி விழாவுக்கு காமராஜர் தலைமை தாங்கி பொன்னாடை போர்த்தினார்.

தஞ்சையில் "தூக்கு மேடை" நாடகத்தில் எம்.ஆர்.ராதாவுடன் தி.மு.கழகத் தலைவர் கருணாநிதியும் பின்னர் "போர்வாள்" நாடகத்தில்

ஈ.வெ.கி.சம்பத்தும் நடித்து இருக்கிறார்கள். ஈரோட்டில் "விதவையின் கண்ணீர்" நாடகம் நடந்தபோது அந்த நாடகத்தை அண்ணா பார்த்து பாராட்டினார்.

திருச்சியில் "போர்வாள்" என்னும் நாடகம் நடத்தியபோது ராதாவுக்கு "நடிகவேள்" என்ற பட்டத்தை பட்டுக்கோட்டை அழகிரி வழங்கினார். 1962-ல் "கலைமாமணி" பட்டம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினரால் வழங்கப்பட்டது.

சினிமா எம்.ஆர்.ராதா,

முதன் முதலாக 1937-ல், "ராஜசேகரன்" என்ற படத்தில் நடித்தார். இதில், மாடியில் இருந்து, கீழே குதிரை மீது குதிக்கும் காட்சியில் நடித்தபோது, கால் எலும்பு முறிந்துவிட்டது. குணம் அடைந்த பிறகு "பம்பாய் மெயில்" என்ற படத்தில் நடித்தார். பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி, நாடகங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

"பராசக்தி" படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார்,

"ரத்தக்கண்ணீர்" நாடகத்தை படமாகத் தயாரித்தார். இதில் எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்தனர். 1954-ல் வெளியான இந்தப்படம் பெரிய வெற்றி பெற்றும், பட அதிபர்கள் யாரும் ராதாவை அணுகவில்லை.

"அவரை சமாளிக்க முடியுமா,

ரத்தக்கண்ணீர் போல அவர் வேறு வேடத்தில் சிறப்பாக நடிக்க முடியுமா?" என்றெல்லாம் யோசித்து, அவரை வைத்து படம் தயாரிக்கத் தயங்கினார்கள். இதுபற்றி எல்லாம் ராதா கவலைப்படாமல், நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார்.

ஏ.பி.நாகராஜன்

மூன்று ஆண்டுகளுக்குப்பின், ஏ.பி.நாகராஜன், வி.கே.ராமசாமி ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்ட லட்சுமி பிக்சர்ஸ், எம்.ஆர்.ராதாவை கதாநாயகனாக நடிக்க வைத்து "நல்ல இடத்து சம்பந்தம்" என்ற படத்தைத் தயாரித்தது. இதில் ராதாவுக்கு ஜோடியாக சவுகார் ஜானகி நடித்தார்.
படத்தை கே.சோமு டைரக்ட் செய்தார். படம் மூன்றே வாரங்களில் தயாராகி, 16-2-1958-ல் ரிலீஸ் ஆகியது. குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம், வெற்றிகரமாக ஓடியது. "மாறுபட்ட வேடங்களில் ராதா சிறப்பாக நடிப்பார். குறுகிய காலத்தில் படத்தைத் தயாரிக்க ஒத்துழைப்பு தருவார்" என்ற நம்பிக்கை பட அதிபர்களிடையே ஏற்பட்டது. போட்டி போட்டுக் கொண்டு அவரை ஒப்பந்தம் செய்தனர்.

பாகப்பிரிவினை

1959-ல், சிவாஜிகணேசனுடன் எம்.ஆர்.ராதா இணைந்து நடித்த "பாகப்பிரிவினை" வெளிவந்தது. படம் மகத்தான வெற்றி பெற்றதுடன், எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிவாஜியுடனும், எம்.ஜி.ஆருடனும் இணைந்து ஏராளமான படங்களில் ராதா நடித்தார்.

குறுகிய காலத்தில் 150 படங்களில் நடித்து முடித்தார்.

7 ஆண்டு ஜெயில்

1967 தேர்தலுக்கு முன், எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இந்த சம்பவம், தமிழ்நாட்டையே குலுக்கியது. சிகிச்சைக்குப்பின், இருவரும் குணம் அடைந்தனர். எம்.ஆர்.ராதா மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

பிறகு 5 ஆண்டாக குறைக்கப்பட்டது. 1974-ல் விடுதலையானார்.

மீண்டும் சினிமா

விடுதலையாகி வெளிவந்ததும், மு.க.முத்துவுடன் "சமையல் காரன்" படத்தில் நடித்தார். தொடர்ந்து "டாக்சி டிரைவர்", "பஞ்சாமிர்தம்", "வண்டிக்காரன் மகன்", "ஆடு பாம்பே" ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

1979 செப்டம்பரில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள வீட்டில் ராதா தங்கியிருந்தார். அந்த சமயத்தில் அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி, 17-9-1979 காலை, 71-வது வயதில் ராதா காலமானார்.
எம்.ஆர்.ராதா இளமைப்பருவம் முதலே தந்தை பெரியாரின் கொள்கையில் ஆழ்ந்த பற்றும், பிடிப்பும் கொண்டவர். அதனால்தான் என்னவோ தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.

குடும்பம்

ராதாவின் முதல் மனைவி பெயர் சரஸ்வதி. பின்னர் அவருடைய தங்கை தனலட்சுமியை மணந்தார். மூத்த மகனான எம்.ஆர்.ஆர்.வாசு, சில படங்களில் நடித்தார். இளம் வயதிலேயே காலமானார்.

அடுத்த மகன் ராதாரவி இப்போது திரை உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்குகிறார். ராதாவுக்கு ரஷியா, ராணி, ரதிகலா என்ற மகள்கள் உள்ளனர்.

ராதாவின் மூன்றாவது மனைவி கீதா. இவருடைய மகள் ராதிகா, சினிமாவிலும், சின்னத்திரையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்.
ராதிகாவின் தங்கை நிரோஷாவும் நடிகையாவார்.

5 ஆயிரம் பாடல்கள் எழுதிய கண்ணதாசன்



தமிழ்த்திரைப் படங்களுக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கருத்தாழம் மிக்கப் பாடல்கள் எழுதி சாதனை படைத்தவர், கவியரசர் கண்ணதாசன்.சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தார். கண்ணதாசன் 1927-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் சாத்தப்ப செட்டியார். தாயார் விசாலாட்சி ஆச்சி.

இந்த தம்பதிகளுக்கு மொத்தம் 9 குழந்தைகள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. கண்ணம்மை, 2. ஞானாம்பாள், 3. முத்தாத்தாள், 4. காந்திமதி, 5. கண்ணப்பன், 6.ஏ.எல்.சீனிவாசன்,7. சொர்ணம்பாள், 8. முத்தையா(கண்ணதாசன்), 9. சிவகாமி.

9 குழந்தைகள் பிறந்த காரணத்தால், சாத்தப்ப செட்டியார் ஏழ்மையில் வாழ்ந்தார். முதல் இரண்டு மகள்களுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தார். செட்டி நாட்டில், அதிக பிள்ளைகள் உடையவர்கள், குழந்தை இல்லாத உறவினர்களுக்கு, குழந்தைகளை சுவீகாரம் செய்து கொடுப்பது வழக்கம். தனது ஐந்தாவது மகன் கண்ணப்பனையும், ஆறாவது மகன் ஏ.எல்.சீனிவாசனையும் பங்காளிகளுக்கு சுவீகாரம் செய்த கொடுப்பதற்கு சாத்தப்ப செட்டியார் ஏற்பாடு செய்தார்.

அப்போது ஏ.எல்.சீனிவாசன் நோஞ்சானாக இருந்தார். பெற்றோரைப் பிரிய மனமின்றி அழுதார். அதனால், முத்தையா (கண்ணதாசன்), 'அண்ணனுக்கு பதில் நான் சுவீகாரமாகச் செல்கிறேன்' என்று முன்வந்தார். அவர், முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார், சிகப்பி ஆச்சி தம்பதிகளுக்கு தத்து ப்பிள்ளையாகச் சென்றார். இப்படி சுவீகாரம் சென்ற முறையில் காரைக்குடி 'கம்பன் அடிப்பொடி'சா.கணேசன், கண்ணதாசனுக்கு தாய்மாமன் ஆனார்.(தத்து கொடுக்கப்பட்ட கண்ணதாசனின் அண்ணன் கண்ணப்பனின் மகன்தான் பஞ்சு அருணாசலம்.இவர் பிற்காலத்தில் கண்ணதாசனுக்கு உதவியாளராக இருந்து, பல படங்களுக்கு கதை- வசன ஆசிரியராகவும், பட அதிபராகவும் உயர்ந்தார்.)

கண்ணதாசனுக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா பின்னர் கவிதைகள் எழுதத் தொடங்கும்போது, அவர் கண்ணதாசன் என்ற புனை பெயரை சூட்டிக்கொண்டார். அந்தப் பெயரே நிரந்தரமாக நிலைத்துவிட்டது. கண்ணதாசன் காரைக்குடி அருகில் உள்ள அமராவதிப் புதூரில் இருக்கும் குருகுலம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு வரை படித்தார். பிறகு படிக்க வசதி இன்றி தனது 17-வது வயதில் படிப்பை நிறுத்தினார்.

அவர் படிக்கும்போது பள்ளியின் ஆசிரியராக இருந்தவர்,'நீ உருப்பட மாட்டாய்' என்று அடிக்கடி சொல்லி இருக்கிறார்.

'அவர் சொன்னதின் பலனாகத்தானோ என்னவோ நான் உயர்ந்த நிலையில் இருக்கிறேன்' என்று கண்ணதாசன் பிற் காலத்தில் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிடுவார். 1944-ம் ஆண்டில் புதுக்கோட்டையில் இயங்கி வந்த 'திருமகள்' பத்திரிகை ஆசிரியராக பொறுப்பு ஏற்றார். அவருக்கு வயது 17 தான். கண்ணதாசன் எழுதிய கவிதைகள் அதில் பிரசுரமாயின. 1945-ல் 'திரை ஒளி' பத்திரிகையின் ஆசிரியரானார், கண்ணதாசன். பிறகு அங்கிருந்து விலகி, 1947-ல் மாடர்ன் தியேட்டர்சார் நடத்திய 'சண்ட மாருதம்' என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார்.

'சண்ட மாருதம்' ஆசிரியராக இருந்தபோது மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசன் இடம் பெற்றார்.அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'மந்திரிகுமாரி'படத்துக்கு வசனம் எழுத மு.கருணாநிதி வந்தார். கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இந்தக் காலக்கட்டத்தில்,திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருணாநிதி விளங்கினார். கண்ணதாசனுக்கும், திராவிட இயக்கத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதவேண்டும் என்று கண்ணதாசன் விரும்பினார்.

'சண்டமாருதம்' பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து வந்தால் பாடல் ஆசிரியர் ஆக முன்னேற முடியாது என்று கண்ணதாசன் கருதினார். எனவே, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கோவை சென்றார். அங்கு ஜுபிடர் நிறுவனம், கேமரா மேதை கே.ராம்நாத் டைரக்ஷனில் 'கன்னியின் காதலி' என்ற படத்தைத் தயாரித்து வந்தது. ஜுபிடரின் மானேஜராக இருந்த வெங்கடசாமி (நடிகை யூ.ஆர்.ஜீவரத்தினத்தின் கணவர்) சிபாரிசின் பேரில், அந்தப் படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது.
'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே' என்ற பாடலை எழுதிக்கொண்டு போய்,டைரக்டர் ராம்நாத்திடம் கொடுத்தார், கண்ணதாசன். பாடல் டைரக்டருக்கு பிடித்து விட்டது. அந்தப் பாடலை, கதாநாயகி மாதுரிதேவிக்காக டி.வி.ரத்னம் பாடினார்.

கண்ணதாசனின் முதல் பாடலே 'ஹிட்' ஆகியது. கல்கத்தாவில் தேவகி போஸ் என்ற பிரபல டைரக்டர் இருந்தார். அவர் வங்க மொழியில் தயாரித்த 'ரத்ன தீபம்' என்ற படத்தை தமிழில் 'டப்' செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

அந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்குக் கிடைத்தது. அவர் கல்கத்தாவுக்குச் சென்று, வசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பினார். 1953-ல் தி.மு.கழகம் நடத்திய டால்மியாபுரம் போராட்டத்தில் கண்ணதாசன் கலந்து கொண்டார். அவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் 'தென்றல்' என்ற வாரப் பத்திரிகையை தொடங்கினார். அதில் கண்ணதாசன் எழுதிய கவிதைகளும், கட்டுரைகளும் அவருக்கு புகழ் தேடித்தந்தன.

 1954-ல் நேஷனல் புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனி, ஆங்கிலப்படம் ஒன்றின் கதையை தழுவி 'அம்மையப்பன்' என்ற படத்தை தயாரித்தது.

சரித்திரப் பின்னணியுடன் இதன் திரைக்கதை- வசனத்தை கருணாநிதி எழுதினார். இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா ஜோடியாக நடித்தனர். ஏ.பீம்சிங் டைரக்ட் செய்தார். இதே கதையை மாடர்ன் தியேட்டர்சார் 'சுகம் எங்கே' என்ற பெயரில் சமூகப் படமாகத் தயாரித்தார்கள். கே.ஆர். ராமசாமி, சாவித்திரி நடித்த இப்படத்தை கே.ராம்நாத் டைரக்ட் செய்தார். வசனத்தை கண்ணதாசனும், ஏ.கே. வேலனும் எழுதினார்கள்.

இரண்டு படங்களின் கதைகளும் ஒரே மாதிரி இருந்ததுடன், சில கட்டங்களில் வசனமும் ஒரே மாதிரி இருந்தது! இதனால் கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் உரசல் ஏற்பட்டது. இருவருடைய கருத்து மோதல்களும், 'முரசொலி'யிலும், 'தென்ற'லிலும் எதிரொலித்தன. 

Thanks to Malaimalar

1/23/2012

இந்தியன்

“கடவுள் என்னும் ரொட்டிக் கடைக்காரன், மனிதனைப் படைத்தான்.

சரியாக வறுபடுமுன் பிறந்தவன் வெள்ளையாகப் பிறந்தவன். அவன்தான் வெள்ளைக்காரன்.

அதிகமாக வறுபட்ட பின் பிறந்தவன் கறுப்பாகப் பிறந்தான். அவன்தான் நீக்ரோவானான்!

பக்குவமாக வறுக்கப்பட்டு பிறந்தவன்தான் இந்தியன்”
 
(டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்னது)