மொத்தப் பக்கக்காட்சிகள்

11/14/2018

"பணம் "

பணம் இல்லாதவனுக்கு வீடு  மட்டுமே  உலகம்.

பணம் இருப்பவனுக்கு உலகமே வீடு.


"பணம் தான் வாழ்க்கை" என்பான்.                                      -  பணக்காரன்

 "வாழ்க்கை ஒரு போரட்டம்" என்பான்.                             - ஏழை

 "வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்"என்பான்                           -   அரசியல்வாதி

"வாழ்க்கை சவால்கள் நிறைந்த பாதை" என்பான்.       -  அறிவாளி

 "காதல் தான் வாழ்க்கை" என்பான்.                                -     கவிஞன்

"கடவுளை அடையும் வழிதான்  வாழ்க்கை" என்பான்.   - ஆன்மீகவாதி

"கனவுதான் வாழ்க்கை" என்பான்.                                        - இலட்சியவாதி

"வாழ்க்கை வெறும் போர்" என்பான்.                                  -  அவசரக்காரன்

 வாழ்க்கையே ஒரு விளையாட்டு ...என்பான்.            -  வெற்றி வீரன்

 வாழ்க்கையே வீண்   . என்பான்.                                          -  சராசரி மனிதன்

தங்களுக்கு எப்படியோ இந்த வாழ்க்கை?..................

10/05/2018

அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்! அகம்பாவத்தால் அழிந்தவர்கள் ஏராளம்! ஏராளம்!

நான் தான் என்ற அகம்பாவம்.

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?

அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட

"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?

இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட

"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட

"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?

எதையும் ஏன் என்று சிந்தித்து பார்க்க

"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?

அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு.

"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட.

எனவே நான் தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும். நம் வரலாற்றில் அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்! 

அகம்பாவத்தால் அழிந்தவர்கள்
ஏராளம்! ஏராளம்!

9/05/2018

ரூபாய் வீழ்ச்சி அடைய காரணம் என்ன? | வீழ்ச்சியடைவதை தடுக்க வழியென்ன?

ரூபாய் வீழ்ச்சி அடைய காரணம் என்ன? 

வீழ்ச்சியடைவதை தடுக்க வழியென்ன?

நாளுக்கு நாள் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இதனால் செப்டம்பர் 03 அன்று ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் 71.16 என்கிற புதிய உச்சத்தை தொட்டது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என ஆரம்பித்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையிலும் தொடர்ச்சியாக உயர்வு ஏற்படுகின்றது.

டாலர் மதிப்பு உயர காரணம் என்ன?

வீழ்ச்சி அடையும் இந்திய ரூபாய்

சந்தையில் எந்த பொருளை மக்கள் வாங்க விரும்புகிறார்களோ அந்த பொருளின் விலை உயரத்தானே செய்யும் . அதனைபோலவே தான் உலக வர்த்தகத்தில் பல்வேறு காரணங்களால் பலர் டாலரை வாங்க முற்படும்போது அதனுடைய மதிப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற நாணயங்களின் மதிப்பையும் சரிவடைய செய்கின்றது , நம் ரூபாய் மதிப்பினை போல .

கச்சா எண்ணெய் விலை ,பெட்ரோல் விலை உயர்வு

கச்சா எண்ணெயை வாங்க வேண்டுமெனில் டாலரில் தான் வாங்க வேண்டும் . பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் விலையும் 50 சதவிகிதத்திற்கும் மேல் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது . இந்தியா தன்னுடைய 80 சதவிகித எரிபொருளினை இறக்குமதியே செய்துவருகின்றது . ஆகையால் இந்தியா தன்னிடமுள்ள அந்நியச்செலாவணியை அதிகமாக பயன்படுத்திடவேண்டிய சூழ்நிலையும் வரும் . நாமும் டாலரை வாங்க வேண்டிய தேவை ஏற்படும் .

மேலும் இந்த நவம்பர் முதல் ஈரானிடம் காச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது . இதுபோன்ற காரணிகள் அனைத்துமே இந்தியாவிற்கு கெட்ட செய்திதான் .


பொருளாதார மோதல்

அமெரிக்கா தற்போது பல்வேறு நாடுகளுடன் பொருளாதார மோதலில் ஈடுபட்டு வருகின்றது . குறிப்பாக சீனாவுடனும் ஐரோப்பிய யூனியனுடனும் மோதலை கடைபிடித்து வருகின்றது . இந்தியாவை ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தச்சொல்கிறது .

இதுபோன்ற காரணங்கள் இந்திய கரன்சிகளின் மீதான நம்பிக்கையை மட்டுமல்ல உலக அளவிலான பல கரன்சிகளின் நம்பிக்கையையும் குலைத்துள்ளது . இதன் காரணமாகதான் உலகின் பல்வேறு கரன்சிகளின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகின்றது .

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்க வழியென்ன?

உலக அளவில் வர்த்தகம் செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்ட கரன்சியாக டாலர் இருக்கின்றது . ஆகையால் தான் அதனை வாங்கிக்குவிக்க பல நாடுகளும் முதலாளிகளும் நினைக்கின்றனர் . அப்படி நினைக்கும்போது டாலரின் மதிப்பு உயருகிறது.

இந்தியா அரசோ , இந்திய கம்பெனிகளோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டுமெனில் டாலர் தேவை . அதிகப்படியாக இறக்குமதி செய்ய அதிகபடியான டாலர் தேவை , அதிகமாக வாங்கும்போது டாலருக்கு தேவை அதிகரிக்கும் , மதிப்பும் அதிகரிக்கும் .

இதனை சமாளிக்க எளியவழி உள்நாட்டு உற்பத்தி , ஆம் இந்தியா இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரித்தால் நமக்கு டாலருக்கான தேவை இருக்காது . நம்முடைய பொருள்களை பிறர் வாங்கும் போது டாலரில் வாங்குவதனால் நமக்கு தேவையான டாலர் கிடைத்துவிடும்.

சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல்

இந்தியாவில் அதிக அளவிலான சுற்றுலாத்தலங்களும் கோவில்களும் இருக்கின்றன . அவற்றினை காண ஆண்டுதோறும் அதிகப்படியான வெளிநாட்டு மக்கள் வந்துசெல்கின்றனர் . அவற்றினை முறையாக பராமரித்து வைத்துக்கொண்டால் அதன் மூலமாக நம்முடைய அந்நிய செலாவணியை உயர்த்திக்கொள்ள முடியும் .

இதுதவிர வட்டி விகிதங்களில் , தொழில்முனைவோருக்கான லோன் விசயங்களில் ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முடிவுகளும் முக்கிய பங்காற்றும் .

7/30/2018

கடையை பார்த்துக்கொள் !




இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.

முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது". இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார்.

"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"

இளைஞன் சொன்னான், "933005 பவுண்டுகள்".

அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்"

வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."

"ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி.

"உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்க படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஒரு இருபது அடி நீள படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்கு தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"

"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார்.

"இல்லை, அவர், தனக்கு தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன்."

முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"

"அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக ஆக இருந்தேன், ஏன் ?"

"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்த கடையை பார்த்துக்கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்துவிட்டு வருகிறேன்"

😀😀😀😂😂😂 படித்ததில் கவர்ந்தது.

7/10/2018

பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :

பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :

1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.
அதிகம் செயல் படுபவனையே கை கூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌ இரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லி கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடா முயற்சியினால்தான்.

11. முன் நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒரு வேளை பின் நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப் படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப் படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தை விட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவை அல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகி விட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது மிக இழிவானது.

5/31/2018

உண்மை !




ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட்டார்.

முதல் கைதி அரசே! நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. என்னைத் தவறுதலாகச் சிறையில் அடைத்து விட்டனர். தாங்கள்தான் அருள் கூர்ந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று வேண்டினான்.

இரண்டாவது கைதி, அரசே! எனக்கும், நீதிபதிக்கும் சிறு தகராறு. அதனால் அவர் எனக்கு வேண்டுமென்றே சிறைத்தண்டனை கொடுத்து விட்டார். நான் எந்தப் பாவமும் செய்யாதவன். என்னை அருள் கூர்ந்து விடுவிக்கும்படி வேண்டினான்.

இப்படியே எல்லாக் கைதிகளும் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யாத நல்லவர்கள் என்றும், சிறையில் இருந்து கொண்டு துன்புறுவதாகவும் கூறினார்கள்.

அரசர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியாக வந்த கைதி மட்டும் அரசே! இந்த கைகளினால் நான் திருடினேன். அதற்காகச் சிறைத்தண்டனை அனுபவிக்கிறேன் என்றான்.

அவன் கூறியதைக் கேட்டதும் அரசன் கடுங்கோபம் கொண்டார். சிறைக் காவலர்களைப் பார்த்து, நல்லவர்கள் மட்டும் இருக்கக்கூடிய இந்தச் சிறைச்சாலையில் இத்திருடனை யார் கொண்டு வந்து அடைத்தது? 

இவன் இங்கிருக்கும் எல்லோரையும் திருடர்களாக்கி விடுவான். இவனை உடனே வெளியே விரட்டி விடுங்கள் என்று கூறினார்.

அரசனின் குறிப்பை உணர்ந்து கொண்ட அரண்மனைக் காவலர்கள் அவனை விடுதலை செய்தனர்.

தத்துவம் :

உண்மை விலைமதிப்பற்றது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நேர்மையாக உண்மையை சொல்ல வேண்டும். அப்பொழுது தான் உங்கள் நேர்மைக்கான பிரதிபலனை எதிர்ப்பார்க்க முடியும்.