மொத்தப் பக்கக்காட்சிகள்

11/19/2011

ரூ. 2,999ல் டேப்ளெட் பிசி : அசத்தும் ரிலையன்ஸ்

ரூ. 2,999ல் டேப்ளெட் பிசி : அசத்தும் ரிலையன்ஸ்

விரைவில் பரவலாக்கப்பட இருக்கும் 4ஜி தொழில் நுட்பத்தின் இயக்கத்தையும் இணைத்து, டேப்ளட் பிசி ஒன்றை வடிவமைத்து, பட்ஜெட் விலையில் வழங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்தில் தங்களுடன் ஒத்துழைக்க கனடா நாட்டின் டேட்டாவிண்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தான், உலகிலேயே மிக மலிவான விலையில் ஆகாஷ் என்னும் டேப்ளட் பிசியினை அண்மையில் வெளியிட்டது. மேல் நாடுகளில், பல நிறுவனங்கள் 4ஜி தொழில் நுட்பத்துடன் டேப்ளட் பிசியினை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையிலான விலையில் இதனைத் தர ரிலையன்ஸ் முன்வந்துள்ளது சிறப்பான முயற்சி ஆகும். ஏனென்றால், இந்த விலை மேல்நாட்டு விலையில் நான்கில் ஒரு பங்காகும். வரும் டிசம்பர் மாதம் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்துடன் இயங்கும் டேப்ளட் பிசி ஒன்றை டேட்டாவிண்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் விலை ரூ. 2,999 என்ற அளவில் இருக்கும். முன்பு மொபைல் போன் பயன்பாடு அறிமுகமான போது மிகவும் மலிவான விலையில் நாடு முழுவதும் சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன் மற்றும் சேவையினை வழங்கி ரிலையன்ஸ் முன்னணி இடத்தைப் பிடித்தது. இதே வழியில், டேப்ளட் பிசி விற்பனையிலும் தன் தடத்தைப் பதிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிடுகிறது.

விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்? –



அரசு வழங்கும் அனைத்து இலவசங்களையும் நிறுத்தினால் விலை வாசி ஏற்றம் ஓரளவாவது  குறையும்

சாதிகள் இல்லையடி பாப்பா



சாதிகள் இல்லையடி பாப்பா "
சொன்னவர் 
மறைந்தார் அன்றே ....!
சாதி வெறியை 
தூண்டியே வாழ்கிறார் 
சிலர் இன்றே ....!

சாதி சாதி என்று 
சாகும் மனிதா....
சாதியில் பிரிவு 
எப்படி பிரித்தாய் ..?

நீயும் நானும் 
வேறு சாதி என்றால் 
நம்மை படைத்த 
இறைவன் எந்த சாதி ....?இறைவனுக்கு சாதி
இல்லையெனில் ...
எங்கிருந்து வந்தது 
இந்த வியாதி ....?

சாதி தருமா உயர்வு  ....?
சாதி தருமா வாழ்வு ....?
பின்
சாதியில் என்ன தாழ்வு ...?

ஆறடி குழிக்குள் அடங்கும்
ஆறறிவு மானுடா...
சாதி என்பதோர் வியாதி ...
சில மூர்க்கர்கள் செய்த சதி ....

சாதிகள் இல்லையென்று
சப்தமாய் கூறு........
முழங்கட்டும்  சமூகம்..
மனிதம் வாழ்கவென்று ....!

சூரிய ஒளி பேருந்து

பெருகி வரும் வாகனங்களும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் நாம் எல்லாரும் அறிந்த விசயம்தான். அதிக வாகனங்கள் இயக்க ப்படுவதால் ஏற்படும் எரிபொருள் இழப்பு மிகவும் ஈடுகட்ட முடியாத ஓன்று.இயற்கை வளமான எரிபொருட்கள் குறைந்து கொண்டே வருவதால் அதற்கும் முடிவு காணவேண்டிய நிலையில் இந்த உலகம் உள்ளது.
 
இவைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் உலகமெல்லாம் ஈடுபட்டிருக்க ,  சீனாவை சேர்ந்த  யூசா சாங்  என்பவர் ஒரு புதிய நவீன வடிவமைப்பை கண்டுபிடித்துள்ளார்.இந்த நவீன தொழில் நுட்பம் செயல்பட ஆரம்பித்துவிட்டால்சீனாவின் போக்குவரத்து நெரிசலும் சுற்றுப்புற சீர்கேட்டை கொண்டுவரும் புகையும்  (வாகனங்களால் வெளியிட படுபவை )  கணிசமாக குறைந்துவிட வாய்ப்புகள் உள்ளது. 
 

இதுதான் அந்த நவீன தொழில் நுட்பம் .  Straddling  Bus  என்று அழைக்கபடுகிறது.  18  அடி உயரமும் 25  அடி அகலமுமான ஒரு பேருந்து.     பிரத்தியேகமாக  வடிவமைக்கப்பட்ட  ஓடு பாதை பயன் படுத்தப்பட போகிறது.     இந்த பேருந்தின் மேல்தட்டில் மாத்திரம் பயணிகள் இருப்பார்கள்.   மேல் தட்டிற்கு கீழ் இருக்கும் சாலையில் மற்ற சிறு வாகனங்கள் சென்று வரும்.  படத்தை கூர்ந்து பாருங்கள்.  பேருந்தின் சக்கரங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும் எப்படி அதன் கீழ் வாகனங்கள் சென்று வருகிறது என்பதையும்.  இதனால் இந்த பேருந்தின் நிமித்தம் எந்த போக்குவரத்து இடைஞ்சலும் இருக்காது.  சுமார் 1200  பேர் இதில் பயணிக்கும் சக்தி இருப்பதால் மற்ற பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.  சுமார் 40 கிமீ  வேகத்தில் செல்லும் இந்த பேருந்து 25  முதல் 30  சதவீத நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
 
 

இந்த பேருந்தை இயக்குவதற்க்கான சக்தி முழுவதும் பேருந்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய ஒளி தகடுகள் மூலம் பெறப்படும்.  பேருந்து நிறுத்தத்தின் கூரையிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டு அந்த சக்தியும் பேருந்துக்கு மாற்றப்படும்.   இந்த பேருந்தின் மூலம் சுமார் 40  சாதாரண பேருந்துகளை ஈடுகட்ட முடியும்.  எனவே வருடத்திற்கு சுமார் 860000 கிலோ எரிபொருள் சேமிக்கப்படும் என்றும் சுமார் 2640000  கிலோ கார்பன் நச்சு பொருட்களை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.   ( நன்றி : நியூயார்க் டைம்ஸ் )

தீ பற்றி கொண்டால் ... என்ன செய்ய வேண்டும் ..?

நெருப்பு /  தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் .  வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்ப்படுகிறது .  அப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம் ..



நெருப்பு என்றால் என்ன .?
வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும் தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது .   நெருப்பு என்பது நான்கு காரணிகள் உள்ளடக்கியது . 
  1. வெப்பம்
  2. ஆக்சிஜென்
  3. எரிபொருள்
  4. தொடர்வினை
மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெருப்பை உண்டாக்குகின்றன .  அதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .


இந்த நெருப்பு 4  வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன
  1. Class A நெருப்பு
  2. Class B நெருப்பு
  3. Class C நெருப்பு
  4. Class D நெருப்பு


 Class A தீ / நெருப்பு :

சாதாரணமாக பேப்பர்  ,  மரம் , துணி  போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .  இந்த நெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும் .   தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறது .  எனவே நெருப்பு அணைக்கப்படுகிறது .   இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class A தீ அனைப்பான்களை ( Class A Fire Extinguishers )  பயன்படுத்தலாம் .


Class B தீ / நெருப்பு : 

எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது .   இந்த மாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் முதல வகுப்பு தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினது போல அநேகர் செய்கின்றனர் .  ஆனால் அது தவறான நடவடிக்கை 


 இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும்  , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும் ,  நெருப்பு அதிகமாகும் .   எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க  CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப்படும் 


Class C தீ / நெருப்பு : 

 மின்சார தீ இந்த வகையில் வருகிறது .  இப்படி தீ ஏற்ப்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் .  அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா எனபதை அறிந்து அதற்கேற்ற தீ அனைப்பானை பயன்படுத்த வேண்டும் .

Class D தீ / நெருப்பு :  


தொழிற்சாலைகளில் உள்ள சோடியம்  , பொட்டாசியம் ,  டைட்டானியம் போன்ற உலோகங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது .   சோடியம் க்ளோரைட்  எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம் . 

ஊழலுக்கு தீர்வு தான் என்ன?



1 . தனி மனித உணர்வு : லஞ்சம் வாங்கும் எல்லாரும் திருந்த வேண்டும். இது எப்படியும் நடக்காத காரியம் என்பது நாம் எல்லாரும் அறிவோம். திருட்டு மாங்காய் தின்றவனுக்கு அதை விட முடியாது என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியும்.

2 . தனி மனித எதிர்ப்பு : இது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தனி மனிதனும் ஊழலுக்கு எதிராய் ஒத்துழையாமை இயக்கம் நடத்தனும். உதாரணதிற்கு ஒரு மரண சான்று வாங்குவதற்கு நாம் 100 ருபாய் செலவழிக்க தயங்குவதில்லை . அப்படியெனில் ஊழலை வளர்ப்பது நாம் தான் என்றால் கொஞ்சம் அதிர்ச்சி அல்லவா?


தனி மனிதனை அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தூண்டுபவன் தலைவன் அல்ல. தனிமனிதனை ஊழலுக்கு எதிராக உணர வைப்பவனே தலைவன். இது கொஞ்சம் வித்தியாசம் அல்லவா. நீ எதுவும் லஞ்சமாக கொடுக்காதே , லஞ்சத்தை ஊக்குவியாதே ! லஞ்சம் தானாக அழியும்.

நண்பனே ...! ஊழல் ஒழிப்பு யார் கையில் ? அன்னா ஹசாரே கையிலா ? கட்சிகளின் கையிலா ? இல்லை .... அது நம் என் கையில்.

LPG பயன்படுத்துபவரா கொஞ்சம் கவனியுங்கள்

விறகு வைத்து சமையல் செய்த காலம் மாறி போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் .   அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( லிஃஉஎபிஎட் Petroleum Gas )  தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது .   அப்படி LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை நாம் பார்க்கலாம் .



LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே  ,  அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் .  சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு .   கீழ் உள்ள படத்தை பாருங்கள் .



LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே  ,  அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் .  சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு .   கீழ் உள்ள படத்தை பாருங்கள் .

சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி  எழுதப்பட்டிருக்கும் .  இதில் 4  ஆங்கில எழுத்துகள் ( A , B , C , D ) என்று வரும் .  இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு ( மார்ச் வரை )  ,  இரண்டாம்  காலாண்டு ( ஜூன் வரை ) , மூன்றாம் காலாண்டு ( செப்டம்பர் வரை ) ,  நான்காம் காலாண்டு ( டிசம்பர் வரை ) என்று பொருள்படும் .  தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .

மேற்கண்ட படத்தின் படி , இந்த சிலிண்டர் டிசம்பர் 2013வரை பயன் படுத்த முடியும் .

பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது .  ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டுபண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது .  அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது .  ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .

பொதுவாக LPG ,  சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால்  , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் .   அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் ( கசிவு ஏற்பட்டால் )  திறந்து வைப்பது நல்லது .


சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக ( vertically ) தான் வைக்க வேண்டும் .  படுக்க ( Horizontally ) வைக்க கூடாது .  அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி ( Like Rocket ) தள்ளப்படும் .  அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது

விலை வாசி

விலை வாசி குறையுமா ...? வாய்ப்பிருக்கிறதா ...?


இப்பொழுது எங்கே பார்த்தாலும் , எதை எடுத்தாலும் விலை அதிகமாகி கொண்டே தான் போகிறது .   எந்த பொருளும் விலை குறைந்த மாதிரி இல்லை என புலம்பும் அநேகரில் நானும் ஒருவன் .   ஒவ்வொரு முறை விலை கூடும் போதும், விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது என குற்றம் சொல்லுவோரும் உள்ளனர் உண்மையில் விலைவாசி குறையுமா ....? அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது டஜன் கேள்வி .

 ஒரு பொருளின் விலை எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் , அதன் தேவை ( Demand ) மற்றும் உற்பத்தியை ( Supply ) பொருத்தே.  ஒரு சின்ன உதாரணம் காண்போம் ..

10  பேருக்கு ஒரு நாள் அரிசி தேவை   -  10  கிலோ என்று வைத்து கொள்ளுவோம் .   ஆனால் 30  கிலோ அரிசி உற்பத்தி செய்கிறோம் என்றால் உற்பத்தியான அரிசி விற்பனை ஆகவேண்டும் ( விற்பனை ஆனால் தான் விற்றவனும் , உருவாக்கியவனும் சாப்பிடமுடியும் )  என்பதற்காக அதனுடைய விலை சற்றே குறைத்து விற்பனை செய்யப்படும் . 

ஆனால் அதே நேரத்தில் உற்பத்தி 5கிலோ தான் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அதனுடைய தேவை அதிகரிப்பதாலும் ,  உற்பத்தி குறைந்து இருப்பதினாலும் விலை அதிகமாகி விடும் . 


 இது ஒரு சின்ன உதாரணம் தான் .  மிக முக்கியமாக தேவை அதிகரிக்கிறது ஆனால் உற்பத்தி குறைகிறது .   இது தான் சாராம்சம் ...  சரி .. இதற்க்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போமே ..!

 மக்கள் தொகை பெருக்கம் :   


 இது ஒரு முக்கியமான காரணம் .   ஒவ்வொரு ஆண்டிலும் மக்கள் தொகை இந்தியாவில் பெருகி வருகிறது .  தற்பொழுது 121  கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை வெகு விரைவில் சீனாவை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .  ஒவ்வொரு குழந்தை பிறக்க பிறக்க தேவை அதிகமாகிறது என்று அர்த்தம் .  அதனால் தான் குழந்தை கட்டுப்பாட்டு முறைகள் அரசால் மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டு வருகிறது .  ஆனால் வழக்கம் போல நாம் அதை கண்டுகொள்வதில்லை என்பது வேறு விஷயம் .... 

 விவசாயத்தின் தேக்கம்  :  


நாட்டின் பல இடங்களில் விவசாயம் அழிந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் .  ஏன் எனில் விவசாயத்தினால் கிடைக்கும் வருமானம் போதாத காரணத்தினால் வேறு வேலைகளை தேடி விவசாயிகள் பயணமாகிறார்கள்.  அதனால் தான் அரசும் இயன்ற வரையில் இலவச மின்சாரம் ,உர மானியம் என்றெல்லாம் பல கொடுக்கிறது .  காரணம் அப்படியாவது விவசாயம் அழியாமல் இருந்தால் உற்பத்தி பெருகுமே ...


ரியல் எஸ்டேட் மோகம்  :


தற்பொழுது நாட்டை பிடித்திருக்கும் மிகப் பெரிய பகைமை இது தான் .   வீடு கட்ட இடம் என்ற நிலை போய் , நிலம் வாங்கி விற்பது ஒரு தொழிலாய் மாறின பிறகு , என்னமோ அழிவது எல்லாம் விளை நிலங்கள் தான் .   அதில் தான் நல்ல தண்ணீர் , பசுமை இருப்பதால் விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன.  மறைமுகமாக உற்பத்தி அழிக்கப்படுகின்றன ...  


 சர்வதேச சந்தையில் எரிபொருளின் ஏற்ற / இறக்கங்கள் :
நமது எரிபொருள் தேவை சர்வதேச சந்தையை நம்பி இருக்கிற படியால் , எரிபொருள் விலை உயருகிற பொழுது , அதனோடு கூட சேர்ந்து அது சம்பந்தப்பட்ட விலையும் உயர்கிறது . 

நாம் என்ன செய்யலாம்  :-
  1. கூடுமானவரை ..... நாம் இருவர் ...நமக்கு ஒருவர் .....! சரி பரவாயில்லை நமக்கு இருவர் ....
  2. விவசாய நிலம் இருக்குமானால் தலையே போனாலும் விற்பனை செய்ய வேண்டாமே ... ஏதாவது விவசாயம் நடக்கட்டும் .
  3. ரியல் எஸ்டேட் தொழிலை ஆதரிக்கும் வகையில் அதிக நிலங்கள் வேண்டாமே ...

11/16/2011

சென்னை நகரம் 80 ஆண்டுகளில் கடலில் மூழ்கும் அபாயம்

 
இயற்கை மற்றும் மறு சுழற்சி மின்சக்தி பற்றிய கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் இங்கிலாந்து பிரபல ஆராய்ச்சியாளரும், பனிக்கட்டி உருகுவது தொடர்பாக ஆய்வு நடத்தி வருபவருமான ராபர்ட் சவான் கலந்து கொண்டார்.

இவருக்கு பனிக்கட்டி மனிதர் என்ற பட்டப்பெயரும் உண்டு.
 
கருத்தரங்கில் அவர் பேசும் போது கூறியதா வது:-
 
பூமி கோளின் வட துரு வம், தென்துருவத்தில் உள்ள பனிக்கட்டிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். மைனஸ்-73 டிகிரி வெப்ப நிலை உள்ள இடங்களிலும் ஆய்வு நடத்தி இருக்கிறேன். அந்த இடத்தில் நின்றால் நமது கண்கள் அப்படியே உறைந்து விடும். பற்கள் வெடித்து விடும்.
 
இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதை காணமுடிகிறது.
 
அதில் அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டம் பெரு மளவு உயரும் நிலை உருவாகி உள்ளது.
 
அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் இதே போன்று தொடர்ந்தால் இன்னும் 80 ஆண்டுகளில் சென்னை நகரம் கடலில் மூழ்கி விடும்.
 
நாம் ஓட்டும் மோட்டார் சைக்கிள் கார்கள் வெளியேறும் புகை, அனல் மின் நிலையம் வெளியிடும் புகைதான் இதற்கு காரணம். அவை இயற்கை பாதுகாப்பை அழித்து அண்டார்டிகாவை உருக வைத்து கொண்டிருக்கிறது. இதை நாம் தடுத்தே ஆக வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சீனாவுக்கும் பரவியது ரஜினி புகழ்!


ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து வெளியாகும் பிரபலமான 'சைனாடெய்லி' பத்திரிகை தனது முதல் பக்கத்தில் ரஜினி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில் ரஜினி நடித்துள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான எந்திரன் மற்றும் பஸ் கண்டக்டராக இருந்து சர்வதேச புகழ் பெற்ற நடிகராக உள்ள அவரது சிறப்புகள் குறித்து எழுதியுள்ளது.

"ஒரு சாதார பஸ் கண்டக்டராக இருந்து, தென்னிந்திய ரசிகர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி" என அந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளது சைனாடெய்லி.

மேலும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ரூ 165 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள எந்திரன் திரைப்படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவான ஒரே படம். தெலுங்கில் இந்தப் படத்தின் விற்பனை புதிய சாதனையைப் படைத்துள்ளது. தெலுங்கிலேயே தயாரிக்கப்பட்ட படம் கூட இந்த விலைக்கு விற்பனையானதில்லை.

இன்கா நாகரீகத்தின் சின்னங்கள் அமைந்துள்ள மாச்சு பிக்குவில் படமாக்கப்பட்டுள்ள ஒரே இந்தியப் படம் என்ற பெருமையும் எந்திரனுக்கே உண்டு.

இந்தப் படத்தின் ஸ்டில்கள் மற்றும் ட்ரெயிலர்களைப் பார்க்கும் போதே தெரிறது, இந்தியாவின் மிக ஸ்டைலான, ஆடம்பரமான படம் இதுவே என்று குறிப்பிட்டுள்ளார் பிரபல விமர்சகரான தரண் ஆதர்ஷ்.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும், ரோபோவின் விற்பனை மற்றும் புகழுக்கு முதன்மையான காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

எழுபதுகளில் ஆரம்பித்த அவரது அபார நடிப்பு மற்றும் ஸ்டைல்கள் இன்னமும் இந்தியத் திரையுலகை ஆட்சி செலுத்துகின்றன.

150 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரஜினிகாந்த், ஒரு பாயும் புலியைப் போல திரையில் தோன்றும் போது அவரது ரசிகர்கள் அடையும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பெரிய பெரிய கட் அவுட்டுகள், பேனர்கள் என தங்கள் உற்சாகத்தை அவர்கள் பிரமாண்டமாக வெளிப்படுத்துகிறார்கள்.

"இந்தியா மட்டுமல்ல, ஜப்பான், மலேசியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிதான்... இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. அவர் மிகச் சிறந்த நடிகர்... மக்கள் இதயங்களை வென்ற மாபெரும் ஹீரோ" என்கிறார் தரண் ஆதர்ஷ்.

"ஸ்வைன் ப்ளூ, அதிகரிக்கும் தயாரிப்புச் செலவு, மோசமான ஸ்கிரிப்டுகள் என தெலுங்குப் படங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்த நேரத்தில் ரோபோ வெளியாகிறது. இந்தப் படத்துக்குள்ள உள்ள எதிர்ப்பார்ப்பும், ரசிகர்கள் காட்டும் ஆர்வமும் தெலுங்குப் பட உலகுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது", என அந்தப் பத்திரிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கார் பரிசுஎன கூறி வரும் மெயில்களை நம்பாதீர்கள்-கமிஷனர் எச்சரிக்கை


சென்னை: கார் பரிசு விழுந்துள்ளது என்று கூறி வரும் இமெயில்களை நம்பாதீர்கள் என்று சென்னை புறநகர காவல்துறை ஆணையர் ஜாங்கிட் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சமீப நாட்களாக போலி இ-மெயில் மூலம் பல லட்சம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. பணத்துக்கு ஆசைப்பட்டு பலர் போலி இ-மெயில்களை நம்பி பணத்தை இழந்து விடுகின்றனர். இது தொடர்பான புகார்கள் அதிகமாக வருகின்றன.

வங்கிகளில் இருந்து அனுப்பியது போன்ற தோற்றத்துடன் தகவல்களை பெற்று விடுகிறார்கள். வங்கி கணக்கு எண், மற்றும் ரகசிய குறியீட்டு எண் பெற்று விடுகிறார்கள்.

இத்தகைய இ-மெயில்களுக்கு பொது மக்கள் பதில் கொடுக்க வேண்டாம். ரகசிய குறியீடு எண்ணை நீங்கள் கொடுத்தால் அதன் மூலம் உங்கள் பணம் அனைத்தையும் எடுத்து விடுவார்கள்.

உங்களுக்கு போலி இ- மெயில் வரும் என்று வங்கிகள் எச்சரிப்பது போல வரும் இ-மெயில்களையும் நம்ப வேண்டாம்.

இ-மெயில் உபயோகிப்பாளர்களில் இருந்து உங்களை தேர்வு செய்து இருப்பதாகவும் உங்களுக்கு கார் பரிசு விழுந்து இருப்பதாகவும், அதை இந்தியாவுக்கு அனுப்ப செலவுத் தொகை கேட்பார்கள். இப்படி வரும் மெயில்கள் நம்பாதீர்கள்.

வெளிநாட்டில் வேலை என்றும் பல லட்சம் ரூபாய் கிடைக் கும் எனவே விசாவுக்கு பணம் அனுப்புங்கள் என்ற கோரிக்கையுடன் வரும் இ-மெயில்களையும் நம்ப வேண்டாம்.

நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து, பணம் சம்பாதிக்கலாம். அதற்காக வங்கிகளில் கணக்கு தொடங்கி, அதன் எண்ணை தருமாறு கேட்டு மெயில்கள் வரலாம். 10 சதவீத கமிஷன் நீங்களே எடுத்துக் கொண்டு 90 சத வீதத்தை வெளி நாட்டுக்கு அனுப்பும் படி இ- மெயில்கள் வரும். இது மோசடிக்கு உடந்தையாக இருப்பது போன்ற குற்றமாகும். நீங்களும் கைதாக நேரிடும். எனவே இத்தகைய மெயில்களை நம்பி ஏமாறாதீர்கள்.

நைஜீரியன் கேம்ப் என்றழைக்கப்படும் போலி மெயில் கும்பலிடம் ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நூதனமாக மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவது இல்லை. இதில் பொதுமக்கள் தான் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்

இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், சிறுகதை


ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உ

செங்கல் சூளையில் வேலை பார்த்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்


தோன்றிப் புகழோடு தோன்றுக“ என்ற வள்ளுவரின் வாக்கியத்தை உண்மையாக்கும் விதமாக இடைப்பாடி அருகே உள்ள ஓர் குக்கிராமத்தில் பிறந்து தனது படிப்பு செலவிற்காக அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தபடி இடைப்பாடி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் கோவிந்தராஜூ.
 
தனது கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார்.
 
பிளஸ்2 பொது தேர்வில் 194.75 கட்டாப்மதிபெண் பெற்று மருத்துவ படிப்பிற்காக (எம்.பி.பி.எஸ்) தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் கோவிந்தராஜுக்கு இடம் கிடைத்துள்ளது .இந்த நிலையில் மேற்கொண்டு படிப்பதற்கு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் கோவிந்தராஜு கூறியதாவது:-
 
எனக்கு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு இடம் கிடைத்ததை மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதற்காக எனது ஆசிரியர்களுக்கும், கடவுளுக்கும் எனது பெற்றோர்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன்.

இடைப்பாடி அருகே உள்ள மல்லிபாளையம் எனது சொந்த ஊர். எனது தந்தை சித்தையன், தாய் மாரியம்மாள் இருவரும் படிப்பறிவு இல்லாத சாதாரண விவசாய கூலிகள், இந்நிலையில் என்னையும் எனது சகோதரன் செல்வராஜையும் நன்றாக
படிக்க வைக்க எனது பெற்றோர்கள் கடினமாக உழைத்தனர்.

அவர்களின் வருமானம் போதாத நிலையில் எனது குடும்ப நிலையை உணர்ந்து அருகில் உள்ள செங்கல் சூளையில் காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் வேலை பார்த்தபடி படித்துவந்தேன்.

எனது படிப்பு ஆர்வத்தை பார்த்து இடைப்பாடி பகுதியில் சிறப்பு வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் பிரகாஷ் என்னை ஊக்கப்படுத்தினர். செங்கல் சூளையில் வேலைபார்த்து கொண்டே படிப்பது சற்று கடினமாகத்தான் இருந்தது. இருந்த போதும்¢ எதிர்காலத்தில் வரும் நன்மையை மனதில் கொண்டு விடா முயற்சியுடன் படித்ததால் இன்று மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது.
 
கடந்த கோடை விடுமுறையில் தினசரி பள்ளிப்பாளையத்தில் உள்ள நூல் மில்லுக்கு வேலைக்கு சென்றதில் சேர்த்த பணம் ரூ. 7 ஆயிரம் மட்டும் வைத் துள்ளேன். இருந்தும் எப்படியும் சிறப்பாக மருத்துவ படிப்பை முடித்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து நீதிபதியானவரின் கதையை நினைவுபடுத்தும் கோவிந்தராஜு வின் தன்னம்பிக்கைக்கு வெற்றி கிடைத்து அவர் ஓர் சிறந்த மருத்துவராக வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்பாக உள்ளது.

"நீங்கள் லாட்டரி winner என்று யாராவது சொல்லுவார்களேயானால் எச்சரிக்கையாக இருக்கவும்

என்னிடமும் அதைப்போல கூறி ஐநூறு டாலர் முன்பணமாக செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். நான் அவர்களிடம் என்னை எப்படி தேர்ந்து எடுத்தீர்கள்? நான் ஒன்றும் லோட்டேரி சீட் வாங்கவில்லை என்று தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தெரிவித்தது என்னவென்றால், யாஹூ மற்றும் ஹாட்மெயில் அக்கௌன்ட் வைத்து உள்ளவர்களை கணக்கெடுத்து குலுக்கலில் தேர்ந்து எடுத்ததாக தெரிவித்து இருந்தார்கள். எனக்கு இரண்டிலும் ID உள்ளதால் நம்பினேன்!. நானோ தமிழ் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு வந்த பொருளாதார அகதி, தமிழ் நாட்டில் இருந்து முகவர் மூலமாக வெளிநாட்டில் வேலை பார்கிறேன். அந்த முகவர் மூலியமாக தான் ஒவொரு மாதமும் சம்பளம் கிடைக்கும். அவனிடம் ஒவொரு மாதமும் சம்பளம் வாங்க நான் படும் துன்பத்தை அளவிடமுடியாது. அப்படி இருக்கையில் என் காதில் இப்படி ஒரு மகிழ்ச்சியான செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அவன் பணம் அனுப்ப சொன்ன நாடோ நைஜீரியா. நானும் பணம் அனுப்ப western union வங்கிக்கு அவர்கள் சொன்ன வங்கிக்கு அனுப்ப சென்றேன். அங்கே சிறிது கூட்டமாக இருந்ததால் அங்கு போடப்பட்டுள்ள நாற்காலியில் அமர்தேன். அங்கு எழுதப்பட்டுள்ள வாசகங்களை படிக்கும் போது அதில் கூறப்பட்டுள்ள வாசகம் "நீங்கள் லாட்டரி winner என்று யாராவது சொல்லுவார்களேயானால் எச்சரிக்கையாக இருக்கவும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. என் பணமும் தப்பித்தது. உழைத்து சம்பாதித்த பணம் நிலைத்து நிற்கும்!.
 
பேர் ஆசை பெரும் நஷ்டம் அது இது தான

எஸ்.எம்.எஸ். மூலம் கோடிக்கணக்கில் பரிசு மோசடி; ரூ.57 லட்சத்தை இழந்த சென்னை பெண்

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் மீனா (57) (பெயர் மாற்றம்) இவரது செல்போனுக்கு கடந்த மாதம் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் “உலககோப்பை கால்பந்து போட்டியையொட்டி நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் உங்களுக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. பரிசுத் தொகையைப் பெற கீழ்கண்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
இதைப் பார்த்ததும் மீனா குஷி அடைந்தார். உடனே அந்த எஸ்.எம்.எஸ்.சில் குறிப்பிடப்பட்டிருந்த இ- மெயிலுக்கு தனது முகவரியை அனுப்பினார். அதன் பிறகு அவருக்கு வந்த இ-மெயிலில், “உங்கள் பரிசுப் பணத்தை ஒப்படைக்க இங்கிலாந்தில் சில சட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது.
 
இதே போல் இந்தியாவில் சுங்கத் துறைக்கும் பணம் செவழிக்க வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இதையடுத்து மீனா மொத்தம் ரூ.57 லட்சம் வரை இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் பணம் செலுத்தி ஒரு மாதம் ஆகியும் குலுக்கல் பரிசு பணம் வந்து சேர வில்லை.
 
இதனால் தன்னை மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றி விட்டதை அறிந்தார். இது பற்றி அவர் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். கமிஷனர் இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றினார்.
 
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மீனா ஜல்பிகார், ஜரியார், ஜாவித்கான், இம்ரான் ஜாரி ஆகியோர் பெயரில் உள்ள தனியார் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்த மர்ம நபர்கள் பற்றிய விவரங்களை வங்கி அதிகாரிகளிடம் சேகரித்து வருகிறார்கள்.
 
ரூ.57 லட்சம் பணத்தை பரிசு குலுக்கல் கும்பல் டெல்லி, மும்பையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் எடுத்துள்ளனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் உள்ள ரகசிய கேமராவில் பதிவான படங்களை பார்க்க போலீசார் திட்ட மிட்டுள்ளனர். இதன் மூலம் எளிதில் மோசடி கும்பலை கண்டுபிடித்து விடலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
 
மோசடி கும்பல் போலி பெயர்களில் கணக்கு தொடங்கி இருந்தால் அவர்களை கண்டு பிடிப்பது கடினம் ஏ.டி.எம். மையங்களில் வேறு நபர்களை வைத்து பணம் எடுத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.
 
போலீசாருக்கு கடும் சவாலாக திகழும் இந்த எஸ்.எம்.எஸ். பரிசு குலுக்கல் மோசடி கும்பலை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பெண்கள் தினம் எதற்காக மார்ச் 8 கொண்டாடப்பட்டது

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். இந்த தினம் எப்படித் தோன்றியது?பிரெஞ்சுப் புரட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. 1789 ஜூன் 14 ம் தேதி சுதந்திரம், சமத்துவம், பிரநிதிநித்துவம் தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாரிஸில் உள்ள பெண்கள் போராட்டத்தை தொடங்கினர்.



இந்தப் போராட்டம் பாரீஸ் முழுவதும் தீயாகப் பரவியது. ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று அனைத்துத் தரப்பு பெண்களும் பாரீஸ் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.




பாரீஸ் மன்னராட்சி இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என மிரட்டியது. அதற்கு அஞ்சாத பெண்கள் ஆயிரக்கணக்கான அளவில் கொட்டும் மழையில் அரச மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றனர். அவர்களை உடனடியாக கைது செய்ய அரசு உத்தரவிட்டது. அவர்களை கைது செய்ய வீரர்கள் வந்தனர்.

 
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அரண்மனைக்குள் புகுந்த பெண்கள் அரசரின் மெய்க்காப்பாளர் இருவரை சுட்டுக் கொன்றனர். அரசன் வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டியாயிற்று.

 
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

 
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்தான். இந்த செய்தி உலகெங்கும் பரவியது. தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர்.

 
ஆனாலும் பெண்களுக்கு அரசியல் ரீதியாக உரிமைகள் கிடைக்காத நிலையே வருடக்கணக்காக தொடர்ந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கிளாரா ஜெட்கின். பாரீஸில் உள்ள உலக சோஷலிச பார்டி என்ற கட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் கிளாரா.





உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கான பிரச்சனைகளை பேசுவதற்காக பெர்லினின் ஒரு மாநாட்டை 1915 ம் ஆண்டில் துவக்கினார். அதற்காகப் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரஷ்யத் தலைவர் லெனினை சந்தித்து பெண்களுக்கான பிரச்சனைகள் குறித்தும், அதற்கு தீர்வுகள் குறித்தும் பேசினார். பெண்களுக்கென தனியாக ஒரு தினம் தேவை என்பதை வலியுறுத்தினார்.




அதன் விளைவாக 1911 ம் ஆண்டு மார்ச் 8 ம் தேதி முதன் முதலாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது

Way to reduce Tension - மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்

 
* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்
 
* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 
* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
 
* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
 
* வேலைகளைத் தள்ளி வைபபது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.
 
* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
 
* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலம். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.
 
* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
 
* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்
 
* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்என்பது போன்றவை.
 
* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
 
* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
 
* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
 
* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.
 
* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால்மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாதுஎன்று சொல்லப் பழகுங்கள்.
 
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
 
* எளிமையாக வாழுங்கள்.
 
* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
 
* நன்றாகத் தூங்குங்கள். டிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.
 
* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.
 
* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.
 
* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.
 
* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.
 
* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இலலாவிட்டாலும் கூட.
 
* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள்செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.
 
* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
 
* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
 
* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
 
* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகசசெலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.
 
* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
 
* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
 
* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.
இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை