மொத்தப் பக்கக்காட்சிகள்

4/27/2013

அரசியல் கலாட்டா! யாரும் சீரியசா எடுத்துக்காதீங்க!




குனிந்து நின்னு கும்பிடுபவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தா அது அம்மா




குஷ்புவிற்கு மேடையிலும் உண்மையான தொண்டனுக்கு இதயத்திலும் இடம் கொடுத்தால் அது  தலிவர்

 



தொண்டர்களுக்கு தர்ம அடி கொடுத்து நாயே! நாயே! என திட்டினால் அது கேப்டன்




டாஸ்மார்க் வாசலில் பூட்டுடன் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் சாதி சான்றிதழ் கேட்டால் அது மருத்துவர் ஐயா!



தன் பிறந்த நாளுக்காக தொண்டர்களிடம் தங்கக் காசு கேட்டு நச்சரித்தால் அவர் திருமா





வயிற்று வலி வந்தவனையும் வாந்தி,பேதியில் கிடப்பவனையும் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனால் அது வைகோ





பாம்புக்கும் நோகாமல் குச்சிக்கும் வலிக்காமல் அரசியல் செய்வதுபோல் நடித்தால் அது தா.பாண்டியன்





இவர் ஜெயித்தாரா? தோத்தாரா? என தெரியும் முன்பே கப்பை தூக்கிக்கொண்டு ஓடினால் அது ப.சிதம்பரம்





 

MLA ஆனதை மறந்துவிட்டு ஈமு கோழி விளம்பரத்திலும், பனியன்,ஜட்டி விளம்பரத்திலும் நடித்துக் கொண்டிருந்தால் அது சரத்குமார்



கோயில் மணியை அடிப்பதுபோல் போகிறவன்,வருகிறவன் எல்லாம் அடித்திவிட்டு போனால் அது மதுரை ஆதீனம்





# அரசியல் கலாட்டா! யாரும் சீரியசா எடுத்துக்காதீங்க!

ஃபிரீயா விடுங்க.

- Thanks to Nambikai Raj.

சம்பள உயர்வு பெறுவது எப்படி?



ஒரு சிலர் கடுமையா வேலை செய்வாங்க, சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவாங்க, எந்த வேலை கொடுத்தாலும் பக்காவா முடிப்பாங்க ஆனால் அவர்களில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு, பணி உயர்வு சம்பள உயர்வு என்று எதுவுமே கிடைக்காது. காலம் எல்லாம் இதையே புலம்பிட்டு இருப்பாங்க ஆனால் ஒன்றும் நடக்காது.

ஒரு சிலர் வேலைக்கு சேரும்போது என்ன சம்பளம் வாங்கினார்களோ அதே அளவிலேயே கடைசி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதமே நன்றாக வேலை செய்கிறார் என்ற பெயரோடு கூடுதல் சம்பளத்தையும் பெறுவார்கள்.

சம்பள உயர்வை எதிர்பார்க்கும் முன் உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், 'என் வேலைத்திறனில் எவ்வளவு உயர்வு ஏற்பட்டிருக்கிறது?'

அடுத்து எதற்காக சம்பளம் வழங்கப் படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு, எல்லோரும் சம்பளம் செய்யும் வேலைக்காக வழங்கப்படுகிறது என்று சொல்வார்கள். உண்மையில் சம்பளம் செய்யும் வேலைக்காக மட்டுமல்ல காட்டும் விசுவாசத்திற்காகவும் வழங்கப்படுகிறது.

உங்கள் வளர்ச்சியை மட்டும் யோசிக்காமல் நிறுவன வளர்ச்சியையும் யோசியுங்கள். அப்படி யோசித்து செயல்பட்டால் மட்டுமே அது உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சியாக இருக்கும்.

இப்படியெல்லாம் செயல்பட்டால் உங்கள் சம்பள உயர்வுக்கு உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அத்தனை பேரும் பேசுவார்கள்.

உங்களின் சம்பள உயர்விற்காக மற்றவர்கள் பேசும் அளவிற்கு நீங்கள் உழைத்திருந்தால் உங்களுக்கு அதிக சம்பளம் உறுதி.

சம்பள உயர்வை கையில் வாங்கியவுடன் சந்தோஷப்படுபவர்கள் அடுத்த நிமிடம் யாருடனாவது ஒப்பிட்டுப்பார்த்து கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளத்தை முழுவதும் ரகசியமாக்கிவிட்டது.

உங்களுக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் எப்போதும் மற்றவர்களின் திறமையோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சம்பளத்தோடு ஒப்பிட்டு போட்டி போடாதீர்கள். உங்கள் திறமை வளர வளர உங்கள் சம்பளமும் உயரும்.

நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தினை கணக்கு பார்த்து வேலை செய்யாதீர்கள் அப்படி செய்தால் நிறுவனமும் உங்கள் சம்பளத்தில் கணக்கு பார்க்கும்.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது உங்களுக்கு குறைவாக இருந்தால் சம்பள உயர்விற்காக பேசும் போது ஒருபோதும் கோபமாக அல்லது ஆதங்கமாக பேசாதீர்கள். மற்றவர்களை ஒப்பிட்டும் கேட்காதீர்கள்.

"இருபதாயிரம் சம்பளம் வாங்குமளவிற்கு நான் உழைத்து உயர வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் நான் கூடுதல் பணிகள் செய்யத்தயாராக இருக்கிறேன். இன்னும் என்னை என்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது போல கேளுங்கள்.

இப்படி கேட்டால், தன்மையாக நீங்கள் நடந்து கொண்ட விதத்திலேயே நீங்கள் கேட்டது கிடைக்கும்.

நிறுவனம் எதிர்பார்க்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டு சம்பள உயர்விற்குத் தயாராகுங்கள். உங்கள் சம்பளம் இரண்டு மடங்காக உயர வாழ்த்துக்கள்..


நகைச்சுவைக்காக

இந்த பதிவில் எப்படியெல்லாம் காக்கா பிடித்தால் சுலபமாக எப்படி சம்பள உயர்வு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1. தினமும் அலுவலகத்தில் மேனேஜரிடம் காலையில் குட்மார்னிங், மாலையில் குட்நைட் கண்டிப்பாக சொல்லவும்

2. நிர்வாகமும் மேலாளரும் என்ன  சொன்னாலும் ஓகே சார்,  சரி சார்  என சொல்லவேண்டும்.  

3. மேனேஜர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னரே நாம் அலுவலகத்திற்கு வரவேண்டும். அதேபோல் மேனேஜர் அலுவலகத்திலிருந்து கிளம்பிய பின்னரே கிளம்பவும்

4. மேனேஜர் எப்பொழுதெல்லாம் நம்முடைய இருக்கையை கடந்து செல்கிறாரோ அப்பொழுதெல்லாம் எழுந்து நின்று வணக்கம் வைக்கவும்.

5. மாலையிலோ அல்லது   இரவிலோ மேனேஜர் வீட்டுக்கு கிளம்பும் போது அவருக்கு மறக்காமல் கார் கதவை திறந்து விடவும்.

6. நீங்கள் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர் என்றால் இரவு 11 or 12 மணிக்கு ஆட்டோமேட்டிக்காக ஈமெயில் அனுப்புவது மாதிரி உங்கள் outlook-ஐ செட் செய்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் ஹார்டு வொர்கர் (hard worker) என்று தெரியும்.

7. தினமுமோ அல்லது வாரத்தில் ஒருமுறையோ மேனேஜரின் மேஜைக்கு அடியில் கால்களுக்கு நடுவில் அமர்ந்து மேனேஜரின் ஷூ-க்கு பாலிஷ் போடவும்.

8. மேனேஜர் போட்டோவை பர்சில் வைத்துகொண்டு அவரை கடவுளுக்கு நிகரானவர் என் மேனேஜருக்கு தெரியும்படி அதை அடிக்கடி திறந்து பார்க்கவும்.

9. மேனேஜருக்கு வாக்கிங் போகும் பழக்கம் இருந்தால் நீங்களும் தினமும் அவருடன் வாக்கிங் செல்லவும். அவரிடம் உங்களைப்போல் நல்லவர், உத்தமர், உலகில் எவரும் இல்லை எனச்சொல்ல வேண்டும்.  அவர் செய்யும் அனைத்தையும்  புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

10. தினமுமோ அல்லது வார இறுதியில் மேனேஜர் வீட்டிற்கு சென்று தேவையான வீட்டு வேலை செய்யவும்.

11. அவர் வீட்டில் இருக்கும் நாயை கொஞ்சவும்.

12. மேனேஜருக்கு டீன்ஏஜ் வயதில் பெண் இருந்தால் அவளை சிஸ்டர் என்று அழைக்கவும்.

13. குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று வர புதுப்படத்திற்கு டிக்கெட் எடுத்து தரவும்

14. மறக்காமல் அடுத்தவனை பற்றி போட்டு குடுக்கவும்.

15.  மேனேஜர் சொல்லும் எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

Thanks to lolluguru.blogspot.in