மொத்தப் பக்கக்காட்சிகள்

9/28/2024

உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா, அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா ?"

எழுத்தாளர் சுஜாதா வீடு.

 

தயங்கி தயங்கி தன் கணவரிடம் கேட்டார் திருமதி சுஜாதா.

"என்னங்க...

நான் ஒண்ணு கேட்டா...

அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."

மனைவியை திரும்பிப் பார்க்காமலே,

"என்ன கேக்கப் போறே ?"

"இப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாரே, உங்க நண்பர். அவருக்கு நீங்கதானே அட்வைஸர் ?"

"அவருக்கு இல்ல. அவர் கம்பெனிக்கு."

திருமதி மௌனம்.

"சரி, என்னமோ கேக்கணும்னு சொன்னியே."

"ஆமா."

"சீக்கிரம் கேளு."

"ஒண்ணும் இல்ல. அவர் புறப்படும்போது ஒண்ணு சொல்லிட்டு போனாரே. அதுதான்..."

"என்ன சொன்னார் ? எனக்கு ஞாபகம் இல்லையே."

சுஜாதா தன்னிடம் போட்டு வாங்குவதை திருமதி புரிந்து கொண்டார்.

"அதுதாங்க, அந்த வீடு விஷயம்..."

"எந்த வீடு ?"

"நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கற அந்த மூணு பெட்ரூம் வீடு."

"ம்..."

"அந்த வீட்டை அவரே விலை கொடுத்து வாங்கி அதை நம்ம பெயருக்கு முடிச்சு தர்றேன்னு..."

"நம்ம வீட்டுக்கு வந்த என்னோட நண்பர் சொல்லிட்டு போனார், அதானே?"

"ஆமா."

"எதுனாலே அப்படி சொல்லிட்டு போறார் ?"

"உங்க மேலே உள்ள அபிமானம்தான்."

"சரி. இப்போ நாம இருக்கறது..?"

"இது நாம சொந்தமா வாங்கின வீடு."

"எத்தனை பெட்ரூம் ?"

"மூணு பெட்ரூம் வீடு."

"இது வசதியா இல்லையா ?"

"இருக்கு...ஆனாலும் அதையும் சேர்த்து வாங்கினா ஆறு பெட்ரூமா இன்னும் வசதியா..."

"ம்..."

"நாம எதுவும் பணம் செலவு பண்ணப் போறதில்லையே.

உங்க நண்பர்தானே பணம் கொடுக்க ..."

சட்டென்று மனைவியை நோக்கி திரும்பினார் சுஜாதா.

"இதோ பாரு. நான் அவர் கம்பெனிக்கு அட்வைசர். அதுக்கு மாசாமாசம் சம்பளம் கொடுக்கறார். வாங்கிக்கறேன்.

புரியுதா ?"

"ம்"

"நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை. ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா, அந்த நிமிஷத்தில இருந்து

நாம அவருக்கு அடிமை."

"ம்."

"இப்போ சொல்லு. நீ இந்த உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா,

அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா ?"

"நேர்மையாத்தான்..."

"அப்போ இனிமே இதைப் பத்தி பேசாதே !"

(திருமதி சுஜாதா

அனுபவங்களிலிருந்து)

நாடகத் துறையின் மீது நாகேஷ் கொண்டிருந்த அதீத பாசத்தை விவரிக்கிறார் பாலசந்தர்!

'எதையும் மிகைப்படுத்திப் பேசப் பிடிக் காது. ஆனா, நாகேஷ் மாதிரி ஒரு கலைஞனை மிஞ்சுற ஆள் இந்தியாவிலேயே இல்லைனு சொல்வேன். அந்த மாபெரும் கலைஞனுக்கு பத்மஸ்ரீ பட்டம்கூடக் கிடைக்கலையேங்கிறது என்னோட மிகப் பெரிய ஆதங்கம்!'' - வருத் தத்தில் துடிக்கிறது இயக்குநர் பாலசந்தரின் குரல். நாடகத் துறையின் மீது நாகேஷ் கொண்டிருந்த அதீத பாசத்தை விவரிக்கிறார் பாலசந்தர்.

''என்னோட 'மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் அப்போ ஏக பிரசித்தம். டி.கே.சண்முகம், நாகேஷ் எல்லாரும் 'மேஜர் சந்திரகாந்த்’பத்தி எல்லார்கிட்டயும் பெருமையாப் பேசினாங்க. 'இனிமே துண்டு துக்கடா வேஷத்தில் நடிக்க விரும்பலை. உங்களோட இயக்கத்தில் நான் நடிச்சே ஆகணும்’னு சொன்னார் நாகேஷ். தினமும் மாலை அவர் என்னைப் பார்க்க வரும் நேரம்தான் எனக்கு டீ டைம்.

'ஏதோ ஒரு கேரக்டரைக் கொடுக்க முடியாது. உன்னை மனசுல வெச்சு தனியா கதை பண்ணினால்தான் உண்டு. அதனால, நீ கொஞ்ச காலம் காத்திரு’னு சொன்னேன். அப்போ ஸ்ரீதருடைய 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ ரிலீஸாகி, ஓவர் நைட்ல நாகேஷ் ஃபேமஸ் ஆகிட்டார். அப்புறம் அவர் என்னைப் பார்க்க வரும்போது எல்லாம் கூட்டம்கூடிரும். சினிமாவில் பிரபலமான பின்னும் என் நாடகத்தில் நடிக்கணும்னு தீவிரமா இருந் தார். அவருக்காகவே நான் உருவாக்கியது தான் 'சர்வர் சுந்தரம்’ நாடகம்.

அந்த நேரம் பார்த்து 'காதலிக்க நேரமில்லை’ ரிலீஸ். நாகேஷ் பெரிய காமெடியனா உருவாகிட்டார். எனக்குப் படபடப்பு ஆகிருச்சு. காரணம், ஒரு காமெடியனா நாகேஷ் சினிமாவில் ஜெயிச்சிருக்கும்போது 'சர்வர் சுந்தரம்’ நாடகம் எப்படி எடுபடும்கிற தயக்கம். நாகேஷ் அழுவுற ஸீன்லகூட மக்கள் சிரிச்சிடுவாங்களேங்கிற பயம். ஆனாலும், நாகேஷ், 'அப்படி எல்லாம்நடக் காது பாலு. நாடகம் நிச்சயம் ஹிட் ஆகும்’னு நம்பிக்கையா சொல்லிட்டு இருந்தார். தயக்கமும் பயமுமா நாடகம் முடிஞ்சப்ப, பெரிய ரெஸ்பான்ஸ். 'நான் உங்களுக்குத் தைரியம் சொன்னேனே தவிர, எனக்கும் பதற்றம்தான். கைத்தட்டலைப் பார்த்த துக்கு அப்புறம்தான் பதற்றம் போச்சு’னு சொன்னப்ப, நாகேஷ் முகத்தில் அப்படிஓர் உருக்கம். நாம் எதிர்பார்க்கிறதைக் காட்டி லும் அதிகமாகச் செய்து அசத்துவதில் நாகேஷை மிஞ்ச ஆளே கிடையாது!'' - பாலசந்தரின் வார்த்தைகளே நாகேஷின் நடிப்புக்கான பதக்கங்கள்.

- இரா.சரவணன் - விகடன்

வாலியும் நாகேஷும் இணை பிரியா நண்பர்கள்!

நாகேஷ் -நகைச்சுவையில்விசுவரூபம் எடுத்தவர்.

வாலி- கவிதையில் கரை கண்டவர்.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் கிளப் ஹவுஸில் அவ்விருவரையும் காப்பாற்றியவர் ஸ்ரீகாந்த்.

வாலியும் நாகேஷும் இணை பிரியா நண்பர்கள்.

ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பார் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. இப்படித்தான் இருந்தார்கள்.

சினிமா தேவதை, நாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத்தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தை இயக்கும்போது, நாகேஷை நாயகனாக்கினார். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் பண்பட்ட நடிப்பைக் கண்டு பாராட்டாதவர்களே இல்லை.

இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ... பெரிய கேரக்டரோ... ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.

எம்ஜிஆருக்கு நண்பன், சிவாஜிக்கு நண்பன், ஜெமினிக்கு நண்பன், முத்துராமனுக்கு நண்பன், பிறகு ஜெய்சங்கருக்கு நண்பன் என்றெல்லாம் நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.

அந்தக் காலத்தில், ஏவிஎம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி... ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி... முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்ஜிஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.

ஆச்சரியங்கள் நிறைந்த சில்க்" ஸ்மிதா!

ஆச்சரியங்கள் நிறைந்த சில்க்" ஸ்மிதா!

ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ, அதுவாகவே அவர்களின் பிம்பம் நம்மில் தங்கிவிடுகிறது.. அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும்!! உடல் வனப்பும் கவர்ச்சியும் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு சில்க் ஸ்மிதாவின் ஈர மனசும், தங்க குணமும் தெரிந்திருக்க நியாயமில்லைதான்... இன்று சில்க்கின் பிறந்த நாள்!

இயற்கையிலேயே அள்ள அழகை பெற்றிருந்தார் விஜயலட்சுமி என்கிற சில்க்.. இவரது இளம் வயதில் யாரையுமே கேட்காமல் நடுவீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது வறுமை. தரித்திரம் கூரை மீது ஏறி தாண்டவமாடி மிரட்டியது.. பசி ஒரு பக்கம், மாமியார் கொடுமை ஒரு பக்கம் என ஒரேடியாக மென்று தின்றுவிட்டது.

இறுதியில் வஞ்சம் இல்லாமல் வழிந்து நிறைந்த அழகுதான் சில்க்கை காப்பாற்றியது.. அப்போது சில்க்-க்கு 18 வயது.. ஏவிஎம் ஸ்டூடியோ முன்பு ஒரு மாவு மிஷினில் மிளகாய் அரைக்க வந்திருந்தபோதுதான் வினுசக்கரவர்த்தியின் கண்ணில் பட்டுள்ளார்.. அவரது தயவால், வண்டி சக்கரம் சுழல சுழல இவரது வாழ்க்கையும் வேகமாக சுழன்று முன்னேறியது.. பளபள முகம், செக்க செவேல் நிறம் கொண்ட நடிகைகள்கூட சில்க்கை பார்த்து ஆச்சரியமும், பொறாமையும் அடைந்தனர்.. முகத்தில் எதுவுமே இல்லாத அந்த வெறுமை, முகசாயங்களே இல்லாத அந்த பொலிவு.. அனைவரையுமே சுண்டி இழுத்தது.

போதைகண்கள்

ஆளுமைபோதை ஏறிய கண்களுடன் 'வா மச்சான் வா' என்று பாடவும்.. அப்போது கிறங்கி பார்த்த ரசிகர்கள், கடைசிவரை அப்படியேதான் அவரை பார்க்க விரும்பினர். ஒரு படத்தில் ஹீரோ இருப்பதுபோலதான் சில்க்கும் அன்றைய காலகட்ட படங்களில் நிறைந்திருந்தார்... ஒரு பாட்டுக்குத்தான் வருவார். ஆனால் போஸ்டரில் ஹீரோ ஒருபுறம் என்றால் சில்க்கும் மறுபுறம் நம்மை பார்த்து கொண்டு சிரிப்பார்.. அந்த அளவுக்கு ஒரு ஆளுமை இருந்தது சில்க்கிடம்..

#பெட்டி

காசுபோனியாகாமல் பெட்டியில் தூங்கி கொண்டிருந்த பல படங்களில் இவரது ஒரே ஒரு பாட்டை இணைத்து காசை அள்ளிய கூட்டமும் அதிசயமும் அன்று நடந்தது.. தவிர்க்கவே முடியாத தேவையானார் சில்க் ஸ்மிதா. கடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஆப்பிள் துண்டு முதல், சில்க் உட்கார்ந்த சேர் வரை பல ஆயிரம் ரூபாய்க்கு விலைபோயின.. சில்க் போட்டோவை வைத்து எத்தனையோ வார பத்திரிகைகள் பிழைத்தன..

#அரைகுறைஆடை

நக்சலைட் அரைகுறை ஆடை, முக்கல், முனகலுடன் கவர்ச்சி நடனம் ஆடினாலும் தங்கள் வீட்டு பெண்ணாகவே சில்க்கை பார்க்கும் மனோபாவம் நம் மக்களிடம் இருந்தது.. சில்க்கை தவிர வேறு எந்த கவர்ச்சி நடிகைக்கும் கிடைக்காத அந்தஸ்து இது!! ஒருமுறை 'நடிக்க வராட்டி என்னவா ஆகியிருப்பீங்க' என்று கேள்வி கேட்டதற்கு, 'நக்சலைட் ஆகியிருப்பேன்' என்று சொன்ன பதில் பலருக்கும் தூக்கி வாரிப்போட்டது.. அந்த அளவுக்கு முதலாளிகளின் கொடுமைகளை ஆந்திராவில் அனுபவித்த சில்க்.

கோபம்

வலிகள் இறுதிவரை, சதைப்பிண்டமாகவே மக்கள் முன் உலவிய சில்க் ஒரு தங்கமான மனசுக்கு சொந்தக்காரி... எனினும், தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு கோபக்காரியாக காட்டி கொள்ள வேண்டிய நிலைமை அவருக்கு அந்த காலகட்டத்தில் இருந்தது.. ஏகப்பட்ட வலிகளுடன்தான் இவரது பயணம் தொடங்கியது.

#மரியாதை

கூச்சம்ஷூட்டிங்கில் சிவாஜி கணேசன் வரும்போதெல்லாம் எல்லோருமே மரியாதைக்காக எழுந்துநிற்கும்போது, சில்க் மட்டும் சேரில் உட்கார்ந்து இருப்பாராம்.. இதை பற்றி அவரிடம் அங்கிருந்தோர் பதறிகொண்டு

கேட்டதற்கு, 'நான் எழுந்து நின்னா, என்னுடைய குட்டி டிரஸ் சிவாஜி சாருக்கு கூச்சத்தை தந்துடுவிடும். அவருக்கு அந்த தர்மசங்கடம் வரக்கூடாதுன்னுதான் உட்கார்ந்தே இருக்கேன்' என்றாராம். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இந்த பெண் இப்படி டான்ஸ் ஆடுகிறாரே என்று சிலர் முகம்சுழித்த சூழலிலும், அடுத்தவரின் கூச்சத்தையும் மதித்து நடந்த சில்க் மனசு பற்றி பலர் அறியவில்லை!

வதந்திகள்

பத்திரிகைகள் சில்க் பற்றி வதந்திகள் வராத பத்திரிகைகளே அன்று இல்லை.. எத்தனை கேவலங்கள், அவதூறுகள், உயரங்கள், பள்ளங்கள், வந்தாலும் கலங்காமல் அவைகளை துணிச்சலுடன் கடந்துள்ளார்.. ஆனால், தனக்கு என்ன தேவை என்பதை மட்டும் கடைசிவரை அறிந்து கொள்ள முடியாத அப்பாவியாகவே இருந்துள்ளார்.. திமிர் பிடித்தவள் என்ற பெயரை அனாயசயமாக தட்டி சென்ற சில்க், நிஜத்தில் ஒரு மிருதுவான குழந்தை என்பதை நெருங்கி பழகியவர்கள் மட்டும் இன்னமும் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்!!

#நக்சலைட்

வறுமையால் நக்சலைட் ஆக மாற நினைத்தார், ஆனால் முடியவில்லை.. நடிப்பில் சாவித்ரி போல வரவேண்டும் என்று நினைத்தார், அதுவும் நடக்கவுல்லை.. கல்யாணம், குழந்தை குட்டியுடன் சராசரி குடும்ப வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார்.. அதுவும் ஈடேறவில்லை.. கடைசியில் அவர் ஆசைப்படாத மரணம் 35 வயதிலேயே இழுத்து கொண்டு போய்விட்டது.. அதன் மர்ம முடிச்சுகளை இன்னும் யாராலும் அவிழ்க்க முடியவில்லை!!

#கட்டுமானம்

இறுதி நாட்கள் சமூக ஒழுக்கம், சமூக கட்டுமானம் என்ற வரையறைக்குள் இவரை கொண்டு வந்து பெரும்பாலானோர் பார்க்கவேயில்லை.. தன் அகத்தை யாராவது விரும்பி ஏற்று கொள்வார்களா என்ற ஏக்கத்திலேயேதான் இறுதி நாட்கள் கழிந்திருக்கின்றன.. வலி நிறைந்த வாழ்க்கையின் மீது, பிடிப்பு தளர்ந்த நிலையிலும், சுற்றியுள்ளவர்களின் மீது நம்பிக்கையிழந்த நிலையிலும், பழிகள், காயங்கள் எல்லை மீறிய சூழலிலும்தான் அப்படி ஒரு சோக முடிவை எடுத்திருப்பார் போலும்!!

#பாலுமகேந்திரா

'சில்க்குக்கும் எனக்கும் அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா, அவ எனக்கு மகளா பிறக்கணும்னு ஆசைப்படுறேன்' என்று கண்கலங்கி வினுசக்ரவர்த்தி ஒருமுறை சொல்லியிருந்தார் என்றால், அதற்கு காரணம் சில்க்-ன் வெள்ளை மனசுதான்! இன்றளவும் தென்னிந்தியாவில் பேசப்படும் ஆளுமையாக சில்க் திகழ்கிறார்.. ஆந்திரத்திலிருந்து கரையை கடந்து தமிழகம் வந்த இந்த 'கவர்ச்சி புயல்' ஒருபோதும் கரையை கடக்க நம் மக்கள் விட்டதே இல்லை.. ஒருமுறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது... 'ஒரு பேரழகிங்கிறதை தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்?!!'

எம்.ஜி.ஆர் பற்றிய யாரும் அறிந்திடாத சில சுவாரசியமான தகவல்கள் என்னென்ன?

 

Ⓜ️ எம்.ஜி.ஆர் ஜோடி கீதாஞ்சலி !➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️

எம்ஜிஆர் பற்றி இணையத்தில் இறைந்து கிடக்கும் எல்லா "அறிய தகவலுமே" OLD WINE IN A NEW BOTTLE ரகம் தான்!

சில நடிகைகளோடு அவர் எடுத்த சில படங்கள் அறிதான படமாக இருந்ததால்……

அதே வைத்து, பழைய அரைத்த மாவை புத்தம் புது கிரைண்டரில் அரைக்க போகிறேன் !

⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️⛔️

1969 ஆம் ஆண்டு தமிழ் & தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட படம் !

தமிழுக்கு எம்ஜிஆர் & தெலுங்கில் என்டிஆர் !

ஹிந்தி படத்தின் தழுவல் !

வழக்கமான எம்ஜிஆருக்கு ஏற்ற ராபின் வுட் கதை !

ஈரான் நாட்டில் வாழ்ந்த இஸ்லாமிய தலைவர் மன்சூர் பற்றிய கதை !

நான்கு பாடல்கள் பதிவு செய்யப்பட்டது !

கலரில் மலர இருந்த இந்த கைகளை ஈரான் நாட்டில் எடுக்க திட்டமிட்டார்கள் !

சித்ரா கிருஷ்ணசாமி அனுமதி பெற ஈரான் நாட்டுக்கும் பறந்தார் !

" WHAT ! இஸ்லாமிய தலைவரை கள்வனாக சித்தரிக்கும் கதையா ? "

Single window முறையில் அனுமதி மறுக்கப்பட்டது !

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுதான் காரணம் !

கீதாஞ்சலி நகைச்சுவை நடிகையானார் !

➡️ விளம்பரத்தோடு முடங்கின படம் ! 🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️🔸️

வளர்ந்து, நின்று போன இணைந்த கைகள் படத்தில் எம்ஜிஆர் அண்ணனுக்கு நல்ல கதா பாத்திரம் தரப்பட்டது !

அதை ஏற்க்க மறுத்தார் !

" நான் மன்சூரை வளர்க்கும் வளர்ப்பு தந்தை மூசா வாகத்தான் நடிப்பேன் " என்று முரண்டு பிடித்தார் எம்.ஜி.சக்கரபாணி!

அறிதான எம்ஜிஆர் ஜோடி ஜி.சகுந்தலா !➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️➖️

நாடோடி மன்னன் சுட சுட ஓடும் போதே திட்டமிடப்பட்ட படம் நாடோடி மகன் !

ஜி. சகுந்தலா & சூர்யகலா ஜோடி !

கதை : நம்பியார், நாடோடியை கொன்று அரியணையை பிடிக்க, நாடோடி மகன் வளர்ந்து பழி வாங்குவது !

பிரம்மாண்ட செட் - பயங்கர சண்டை காட்சி - சுமார் 50% எடுத்த பிறகு நின்று போனது !

எம்ஜிஆர் அரசியலும் ஒரு காரணம் !

நடிகை சகுந்தலா , குண சித்திர நடிகை ஆனார் !

இந்த கதை சப்பாத்தி மாவு போல உருட்டப்பட்டு 'அடிமை பெண் ' ஆக வந்தது!

எம்ஜிஆரின் 50 படங்கள் அறிவிப்போடு நின்று போனது !

இதில் 20 படங்கள் 50% முடிந்திருந்தன !

20 படங்கள் விளம்பரத்தோடு நின்றது !

10 படங்கள் பூசை யோடு ஏறக்கட்டப்பட்டது !

நிறுத்தப்பட்ட முதல் எம்ஜிஆர் பட நாயகி !🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️

1941 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் கெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் !

நாயகன் வாய்ப்பு 1 டொக் 2 டொக் 3 டொக்!

சாயா பட நாயகன் ஆனார் ராமசந்திரன் !

நாயகி டி.வி குமுதினி !

தயாரிப்பாளர் : NANDAN LAL JASHWANT LAL

எம்ஜிஆர் நடிக்க வந்த நாலே வருடத்தில் நாயகன் வேடம் !

மிகுந்த எதிர்பார்பில் இருந்த எம்ஜிஆருக்கு படம் நின்ற போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள் ஆனார் !

ராசி இல்லாத நடிகர் என்ற பெயர் வந்தது !

ஜமுனா உடன் இணையும் வாய்ப்பு ஸ்வாஹா !

ஆந்திராவிலிருந்து வந்த எல்லா நடிகைகளுடன் எம்ஜிஆர் ஜோடி போட்டாலும், ஜமுனா மட்டும் மிஸ்சிங் !

குமார தேவன் அதை நிரைவேற்றியது !

கலைவாணர் கைதானதும் அவரது நீதிமன்ற செலவுக்காக ஆரம்பிக்கப்பட்ட படம் பையித்திக்காரன் !

சம்பளம் வாங்கமல் நடித்துக்கொடுத்தார் எம்ஜிஆர் !

ஜோடி : டி.எம் மதுரம் - கலைவாணரின் மனைவி !

தமிழ் படத்தின் முதல் கவர்ச்சி நடிகை தவமணி தேவி !

நீச்சல் உடையில் நடித்து பிரபலமானார் !

ராஜகுமாரியில் ராமசந்தரோடு நடித்தார் !

தவமணியை சிறப்பிக்கும் விதமாக மற்றொரு ஸ்டில் !

20000 அடி வரை வளர்ந்த படம் பவானி !

வருடம் 1957 !

கண்ணதாசன் முன் பணம் போட்டு சக்கிரபாணிக்காக தயாரித்தார் !

இந்த படத்திற்க்கான செலவை கவிஞரிடம் கொடுத்து M என்ற MGR வாங்கிக்கொண்டார் !

எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது, அவரை நேரில் பார்த்த ஒரே தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் !

மூன்று படத்திற்கு அட்வானஸ் கொடுத்தார் !

அதில் வெளி வராத படம் இது …

சில அறிய பங்களை ரசித்து வைப்போம் !

பாவேந்தர் மீது M க்கு மரியாதை அதிகம் !

அவரது பாடலை தன் படத்தில் உபயோகித்து இருக்கிறார்!

ஜெயலலிதா சினிமாவில் நடிக்க அவரது சித்தி வேதவதி தான் காரணம் !

வேதவதிக்கு M ஐ நன்றாக தெரியும் !

M மும் வேதவதியும் சேர்ந்து நடித்த படம்…

எம்ஜிஆர் க்கு குரு இருக்கிறார் !

காளி என் ரத்தினம் !

பழைய…..மிக பழைய படங்களில் காமெடி நடிகர் !

M க்கு ஸ்டண்ட் கற்று கொடுத்தது ரத்தினம் !

M க்கு சிரமமான நேரத்தில் உதவியவர்கள் சின்னப்பா தேவர் & சி. டி. ராஜகாந்தம் !

ராஜகாந்தம், எம் க்கே குருநாதரின் மனைவி !

வால்டாக்ஸ் ரோட்டில் M குடியிருந்த போது ராஜகாந்தம் , M இன் கேர் டேக்கர் !

இத்துடன் பகுதி ஒன்று முடிகிறது !

கிழவனை கட்டினாலும் கட்டுவேன் ஆனால் உழவனை கட்டமாட்டேன் என்று பெண்கள் சொல்லுகிறார்களே, ஏன் இப்படி?

கிழவன், உழவன் கேள்வியே கவிதை மாதிரி இருக்கே சார்!

இக்காலத்தில் நடப்பவற்றை சொல்ல வேண்டும் என்றால், பட்டப்படிப்பு முடித்துவிட்டு மாதம் 50000 சம்பளம் வாங்குகின்ற ஆண்களே ஒரு தலை ராகமாக தான் இருக்கிறார்கள், இந்நிலையில் உழவனால் வெறும் உடுக்கை தான் வாசிக்க முடிகிறது, சூரிய வம்சம் படத்திலாவது படிச்சா நான் எங்க படிக்காத நீங்க எங்க னு நாக்கை பிடிங்குற மாதிரி கேள்வி கேட்க ஒரு பொண்ணு இருந்துச்சு,நிகழ்காலத்தில் அதற்குக்கூட வக்கில்லை உழவனுக்கு

உழவனுக்கு பெண் கொடுக்க விரும்பாத பெற்றோர்கள் பெரும்பாலும் விவசாய குடும்பமாக தான் இருக்கிறார்கள் என்பது வேதனையின் உச்சம், கிராமத்தில் வளர்ந்த பெண் பிள்ளைகள் நகரத்திற்கு படிப்பிற்கோ அல்லது வேலைக்கோ சென்ற உடன் Raw Agent போல முகத்தை மூடுவதும், தெருவில் நடக்கும்போது துப்பட்டாவை தலையில் போடுவதும் தான் கிராமத்து இளைஞிகளின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியின் தொடக்கமாக பார்க்க முடிகிறது, இது இப்படியே நீண்டு Cold Coffee ல ஆரம்பித்து KFC அது இது னு நீண்டு கொண்டே செல்கிறது, இப்படி இருக்கையில், 150 ரூபாய் டைரி மில்க் சாக்லேட்டுடன் 5 ரூபாய் கடலை பர்பி போட்டி போட முடியவில்லை

நகரத்தில் உள்ள பெண்களும் பெற்றோரும், விவசாயத்திற்கும் அதை செய்பவர்களுக்கும் நல்ல மரியாதை தருகின்றனர், அதற்காக தாம்பூலம் தட்டை நீட்ட முடியாது, காரணம் நகரத்தில் வாழ்ந்த மக்களுக்கு கிராமத்தை சுற்றி பார்க்க, பொழுதை போக்க, மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் அவர்கள் வாழ்வியல் முறைகளுக்கு கிராமம் மற்றும் விவசாயம் எக்காலமும் ஒத்து வராத ஒன்று, நகரத்தில் வளர்ந்த ஒரு பெண்ணால் கிராமத்தில் வசித்து விவசாய வேலைகளை செய்வது எளிதல்ல, அவர்கள் விரும்பினால் நலம், இல்லையெனில் நாளடைவில் வெறுப்பு உண்டாகும்

இது ஒரு சுழட்சி முறையாக தான் பார்க்க முடிகிறது, முன்னொரு சமயம் வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் என்பது கேள்விக்குறியாக பல பெண்களுக்கு இருந்துள்ளது, அதன் வினை பயன், இப்போது பத்து பைசா வேணாமுங்க உங்க பிள்ளையை கொடுத்தால் மட்டும் போதும் காலில் விழுந்து கதற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், பெண்களின் எதிர்பார்ப்புகளை கூட தாங்கி கொள்ளலாம் போல ஆனால் அவர்களின் பெற்றோர் தொடுக்கும் கேள்வி அம்புகள் தான் காதில் ரத்தம் சொட்ட வெய்க்கின்றது, உழவனுக்கு பெண் கிடைப்பதில்லை என்பது உண்மை தான் இதற்கு முதன்மை காரணம் செய்யும் வேலை இரண்டாவது பொருளாதாரம் மூன்றாவது சாதி கட்டுப்பாடுகள், கிராமம் என்றாலே சாதிப்பிரிவினைகள் நகரத்தை விட சற்று மேலோங்கியே இருக்கும், வேற்று சாதியில் அல்லது மதத்தில் பெண் எடுக்க உழவர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் தயாராக இருந்தாலும், ஊர் மக்கள் புறம் பேசுமே என்று அஞ்சி வாழ்க்கை எனும் பயணத்தில் கைவிரல் பிடித்து நடக்க துணை இல்லாமல், கைத்தடி பிடிக்கும் வரை நீண்டு விடுகிறது

உழவனை வேண்டாமென கிழவனை எந்த பெண்ணும் ஏற்று கொண்டதாய் நான் இதுவரை கண்டதில்லை, 27 வயதுக்கு மேல் இருந்தாலே பெண்கள் மற்றும் அவரின் குடும்பத்தார் சற்று யோசிக்க தொடங்குகின்றனர், எல்லா பெண்களும் மற்றும் பெற்றோர்களும் ஒரே மாதிரியான சிந்தனை உடையவர்கள் என்று சொல்ல முடியாது, பணத்தை விட குணத்திற்கு மதிப்பளிக்கும் பெண்களும் பெற்றோரும் உண்டு, அப்படி இல்லையெனில் நானும் செண்பகமே செண்பகமே னு பாட்டு பாடி பால் கறந்திட்டு தான் இருந்திருப்பேன்

ஆணோ, பெண்ணோ பார்த்த உடனே நல்ல இருக்கீங்களா என்று கேட்கலாம் தவறில்லை அதோடு நிற்காமல் அடுத்த கியர் போட்டு என்ன சம்பளம் எப்போது திருமணம், திருமணம் முடிந்துவிட்டது என்று பதில் வந்தவுடன், குழந்தை எப்போது எந்த பள்ளி என்ன மதிப்பெண் இணையவழி கல்வி அவ்வளவு நல்லதல்ல என்று டாப் கியருக்கு போக வேண்டாம், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும் அதை கிளறி வெந்த புண்ணில் அமிலம் ஊற்றி மயில் இறகால் வருடி விட வேண்டாம்

டைரி மில்க்கை விட வேர்க்கடலை மிட்டாய் உடலுக்கு நல்லது அடுத்த முறை கடைக்கு சென்றால் வாங்கி சாப்பிடுங்கள்

பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்!

 பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்.

    நான் பிறந்த போது என்னைத் தூக்கி அரவணைத்தது ஒரு பெண்- என் அம்மா

என் குழந்தைப் பருவத்தில் எனக்காகப் பரிந்து என்னுடன் விளையாடினாள் ஒரு பெண் - என் சகோதரி.

நான் பள்ளிக்கு சென்ற போது அன்புடன் கல்வி கற்பித்தவள் ஒரு பெண் - என் ஆசிரியை

நான் கவலையுடன் இருந்த போது தோள் கொடுத்து ஆறுதல் சொன்னாள் ஒரு பெண் - என் தோழி

எனக்கு உறவாகவும் உயிராகவும் துணையாகவும் இருந்தாள் ஒரு பெண் - என் மனைவி

நான் கோபமாக இருந்தபோது தனது மழலைச் சொற்களால் என்னை மயங்க வைத்தாள் ஒரு பெண் - என் மகள்

நான் இறக்கும் போது என்னைத் தன்னுள் உறங்கச் செய்வாள் ஒரு பெண் - என் தாய்நாடு

ஒரு பெண் வாழ்க்கையில் தனக்கு ஏற்படும் கவலைகளையும் துன்பங்களையும் தனது பிராத்தனைகளாலும் அசையாத நம்பிக்கையாலும் எதிர்கொள்கிறாள்.

நீ ஒரு ஆணாக இருந்தால் ஒவ்வொரு பெண்ணையும் போற்றி வணங்கு!

நீ பெண்ணாக இருந்தால் அதற்காகப் பெருமைப்படு...


ரேவதி !

 கேரளாவினை பூர்வீகமாகக் கொண்ட ஆஷா என்ற இயற்பெயர் கொண்ட நடிகை ரேவதி தமிழில் மண் வாசனை படத்தின் மூலமாக அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரியும். மண் வாசனை படத்தின் ஹிட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகொடுக்கும் கை, வைதேகி காத்திருந்தாள் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

தொடர்ந்து ரேவதி நடித்த படங்கள் ஹிட் ஆகவே குறுகிய காலத்திலேயே தமிழின் நம்.1 நடிகையாக மாறினார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறனைக் காட்டினார்.

தன்னுடைய அமைதியான இயல்பான நடிப்பாலும், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் கொண்டதாலும் குறுகிய காலத்திலேயே சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கவர்ச்சி இல்லாமல், அற்புதமான நடிப்பு, நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து நடித்ததால் 90-களின் தொடக்கம் வரை முன்னனி நடிகையாகத் திகழ்ந்தார் ரேவதி. நடிப்பு மட்டுமல்லாமல் டப்பிங், சமூக சேவை என பல துறைகளிலும் கால்பதித்தார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இவரை ஹீரோயினாக நடிக்க வைத்தது எப்படி தெரியுமா? நடிகை ரேவதி கேரளாவில் மாடலிங் துறையில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது பேஷன் ஷோக்களில் பங்குபெற்று அதனை ஆல்பமாக வைத்திருக்கிறார். பின்னர் ரேவதியின் குடும்பம் சென்னை நந்தனத்திற்குக் குடி பெயர்ந்திருக்கிறது. பாரதிராஜாவின் சகோதரர் வீடு ரேவதியின் வீட்டுக்கு மாடியில் தான் இருந்திருக்கிறது. அப்போது அங்கு அடிக்கடி வரும் பாரதிராஜா எதேச்சையாக ஒருநாள் ரேவதியின் ஆல்பங்களைப் பார்த்திருக்கிறார்.

ஆனால் அப்போது அவர் காதல் ஓவியம் பட வேலைகளில் இருந்தார். ஆனால் இந்தக் கதைக்கு ரேவதி சற்று வயது குறைவானதாக தோற்றம் கொண்டதாக இருந்ததால் காதல் ஓவியம் படத்தில் ரேவதி நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதனையடுத்து அடுத்ததாக மண் வாசனை படத்தில் ரேவதியை நாயகியாக்கினார் பாரதிராஜா. நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாதே ரேவதிக்கு பாரதிராஜா படிப்படியாக நடிப்பு கற்றுக் கொடுத்து குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் நம்.1 நடிகையாக வலம் வரச் செய்ததில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் பாரதிராஜா.

மேலும் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்களிலும் ரேவதி கதாநாயகியாக நடித்து சினிமாவில் பெரிய ரவுண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் கதைக்கு முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்.

டி.எஸ். பாலையா !

 டி.எஸ். பாலையா

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் சொல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண்.

அங்கே பிரபலமாக இருந்த ‘பாலமோஹன சபா’வில் இடம் கிடைத்தது.

அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலாவதி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.

எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.

அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.

. ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர்.

மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகி ஆக்ரோஷமாகக் கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “அடடா! இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.

“அரசே! நாங்கள் ‘பின் தொடர்ந்து’ போனோம்.ஆனால் அவர்கள் ‘முன் தொடர்ந்து’ போய்விட்டார்கள்!” என்பார்.

‘புதுமைப்பித்தன்’ (1957 ) படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். அப்போது, பாலையா குண்டாகக் கொழுகொழுவென்று நடந்து வருவார்.

வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது. நகைச்சுவை வில்லனாக அவர் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறையக் கூடியது அல்ல.

புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித 'மான' சாமான்களும் விற்கப்படும்” என்று பிரித்து வாசிப்பார். வசன உச்சரிப்பில் அவரது வித்தகத் தன்மை ஒவ்வொரு படத்திலும் பளிச்சிட்டது.

பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையாவிடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.

பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது.

‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள்.

தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி!’

- நன்றி : தி இந்து , டி.எஸ்.பாலையாவின்

நூற்றாண்டு நினைவுப் பதிவு