மொத்தப் பக்கக்காட்சிகள்

2/12/2013

டி.எஸ்.பாலையா

டி.எஸ்.பாலையா

வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் 40 ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்த டி. எஸ். பாலையாவுக்கு எம். ஜி. ஆரின் முதல் திரைப்படமான ‘சதிலீலாவதி’ தான் முதல் படம். 1934 ல் வெளிவந்த இந்தப் படத்தில் வில்லனாக பாலையா அறிமுகமானார். அப்போது பாலையாவுக்கு 20 வயது.

1937 ஆம் ஆண்டு எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’ படத்தில், தளபதியாக (வில்லன்) டி. எஸ். பாலையா நடித்தார். ஆரம்ப காலத்தில் பாலையாவுக்கு புகழ் தேடித்தந்த படம் இது. இதில் பாகவதரும், பாலையாவும் கத்திச் சண்டை போடும் கட்சி உண்டு.

உலகப்போரை பின்னணியாக வைத்து மொடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தயாரித்து ‘சித்ரா’ படத்தில் டி. எஸ். பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகி கே. எல். வி. வசந்தா, பாலையா கதாநாயகனாக நடித்த மற்றொரு படம் ‘வெறும் பேச்சல்ல’ 1956 ல் வெளியான இப்படத்தில் பாலையாவுக்கு கெளபோய் வேடம். அவருக்கு ஜோடி பத்மினி!

அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ படத்தில் கதாநாயகன் கே. ஆர். ராசாமியின் நண்பனாக, முக்கிய வேடத்தில் பாலையா நடித்தார். அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தில் வில்லனாக நடித்தார்.










எம். ஜீ. ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘ராஜகுமாரி’ இப்படத்தில் வில்லனாக பாலையா நடித்தார். இப்படத்தில் எம். ஜீ. ஆரும், பாலையாவும் போட்ட கத்திச்சண்டை மிகப் பிரபலம், தொடர்ந்து எம். ஜி. ஆர். படங்களிலும் சிவாஜிகணேசன் படங்களிலும் வில்லனாக நடித்தார்.
இதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஸ்ரீதர் தயாரித்த முழு நீள நகைச்சுவை படமான ‘காதலிக்க நேரமில்லை’ பாலையாவின் சிறந்த நகைச்சுவை நடிப்புக்கு எடுத்துக்காட்டு. இப்படத்தில் ஒரு திகில் கதையை நாகேஷ் கூற அப்போது பாலையா காட்டும் முகபாவம் இன்றும் நினைவில் நிற்கும் ஒன்று.

‘திருவிளையாடல்’ படத்தில் வடநாட்டு பாகவதராக நடித்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் தவில் வித்து வானாக நடித்தார். பாகவதர், சின்னப்பா, எம். ஜி. ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் ஆகிய சூப்பர் ஸ்டார்க ளுடன் இணைந்து நடித்த பாலையா 40 ஆண்டுகளில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடனம் மட்டுமே ஆடிவந்த லலிதா - பத்மினி சகோதரிகள் முதன் முதலாக ‘பிரசன்னா’ என்ற மலையாள படத்தில் நடித்தனர்.












பட்சிராஜா தயாரித்த இப்படத்தின் கதாநாயகன் பாலையா, டி. எஸ். பாலையாவின் குடும்ப மிகவும் பெரியது. இவருக்கு 3 மனைவிகள் முதல் மனைவி பெயர் பத்மாவதி, இவருக்கு 5 மகன்கள், 2 மகள்கள், 2வது மனைவி பெயர் லீலா (இவர் டி. எஸ். பாலையா மரணம் அடைவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்) 4 மகள்கள், 2 மகன்கள் 3வது மனைவி பெயர் நவநீதம் இவர் நடிகை சந்திரகாந்தாவின் அக்கா இவருக்கு மனோகரி என்ற மகள்.

சென்னை தி நகரில் வசித்து வந்த டி. எஸ். பாலையாவுக்கு 61 வயது நிரம்பிய போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி மாரடைப்பு போன்றவற்றால் அவதிப்பட்டார். 21.12.1972 அன்று காலமானார்.

பாலையாவுக்குப் பிறகு அவரது மகன் ஜுனியர் பாலையா என்ற பெயரில் சினிமா படங்களில் நடித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக