மொத்தப் பக்கக்காட்சிகள்

7/25/2012

டி.எம்.சௌந்தரராஜன்


கம்பீரக்குரலால் செயியுறுபவர்களை கட்டிப்போட வைக்கும் வசியக்குரலுக்கு சொந்தக்காரர் டி எம் எஸ்.

அந்தக்காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி படங்கள் என்றால் டி எம் எஸ் இல்லாத பாட்டுக்களே இல்லை எனலாம்.

அந்தளவுக்கு அநேக படங்களுக்கு இவர்கள் இருவருக்காகவும் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி படங்கள் இமாலய வெற்றிபெற உதவி இருக்கின்றார்.

பக்திபாடல்கள், குறிப்பாக முருக பக்திபாடல்கள் பாடி நடித்து இயக்கி இப்படி பன்முகம் காட்டி திரையுலகில் வலம் வந்த ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவர்.

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் என்ற தத்துவப்பாடலாகட்டும்,எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்ற சோகப்பாடலாகட்டும்,

குறத்தி வாடி என் குப்பி என்ற ஹைபிட்சில் ஒலித்த பாடலாகட்டும்,ஞாயிறு என்பது பெண்ணாக என்ற மெலடிபாடலாகட்டும்,

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ என்ற டப்பாங்குத்து பாடலாகட்டும்,

பாவடை தாவணியில் பார்த்த உருவமா என்ற அமைதிப்பாடலாகட்டும்,மலர்களை போல் தங்கை என்ற பாசத்தைக்குழைத்து குரலெடுத்து பாடிய பாடலாகட்டும்,

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற காதல் பாடலாகட்டும் குரலை ரப்பர் போன்று வளைத்து,நெளித்து,கேட்போரை நெகிழ வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர்.

பட்டத்து ராணி பார்க்கும் பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக