மொத்தப் பக்கக்காட்சிகள்

6/29/2012

விளக்கு ஏற்றுவது எப்படி ?



1.குத்துவிளக்கின் தீபம் கிழக்குமுகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்!

2.மேற்குமுகமாக ஏற்றினால் கிரஹதோஷம்,பங்காளிப்பகை உண்டாகும்!

3.வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்.திரண்ட செல்வம் உண்டாகும்!

4.தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம்,பெரும்பாவம் உண்டாகும்.

5.குத்துவிளக்கில் தீபம் ஒரு முகமாக ஏற்றினால் மத்திம பலன் கிடைக்கும்!

6.இரு முகமாக ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்!

7.மும் முகமாக ஏற்றினால் புத்திரசுகம், கல்வி கேள்விகளில் விருத்தி அடையும்!

8.நான்கு முகமாக ஏற்றினால் பசு,பால்,பூமி சேர்க்கை!

9.ஐந்து முகமாக ஏற்றினால் சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐஸ்வர்யலஷ்மி கடாட்சம் பெருகும்!

10.தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்!

11.வாழைத்தண்டு நூலில் திரி போட்டால் குலதெய்வ குற்றம், சாபம் போகும்!

12.புது மஞ்சள் சேலைத்துண்டில் திரி போட்டால் தாம்பத்திய தகராறு நீங்கும்!

13.புது வெள்ளை வஸ்த்திரத்தில் பன்னீரை விட்டு உலரவிட்டுப் போட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மூதேவி அகன்று விடுவாள்!

14.விளக்கிற்கு இடும் எண்ணெய் நல்லெண்ணெய் எனில் மத்திம பலன்!

15.விளக்கெண்ணை எனில் துன்பங்கள் விலகும்!

16.இலுப்பை எண்ணெய் எனில் பூஜிப்பவருக்கும்,பூஜிக்கப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டாகும்!

17.நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்!

...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக