மொத்தப் பக்கக்காட்சிகள்

6/16/2012

வெற்றி


  • கடவுளே....
    போலி நண்பர்களிடமிருந்து
    என்னைக் காப்பாற்று..!
    என் எதிரிகளை
    நான் பார்த்துக் கொள்கிறேன்.
  • கதவை தட்டாத
    காரணத்தினால்
    எத்தனையோ வாய்ப்புகளை
    நீ இழந்து நிற்கின்றாய்...!
  • கண்டிக்கும் ஆசிரியர்
    கரையேற்றிவிடுவார்
    கவலைப்படாதே!
  • சிறுகடன் ஒரு கடங்காரனை உருவாக்கும்.
    பெருங்கடன் ஒரு பகைவனை உருவாக்கும்
  • சோம்பல் - எல்லாவற்றையும் கடினமாக்குகிறது
    சுறுசுறுப்பு - எல்லாவற்றையும் சுலபமாக்குகிறது
தானாக வருவதில்லை வெற்றி
அது....

  • வியர்வையின் விளைச்சல்
  • நீ முன்னேறினால் உழைப்பு!
    உன் எதிரி முன்னேறினால் அதிர்ஷ்டமா?
  • பத்து விரல்களால் - பாடுபட்டால்தான்
    ஐந்து விரல்களால் அள்ளி உண்ண முடியும்
  • முயற்சியை நிறுத்துவதும்,
    மூச்சை நிறுத்துவதும் ஒன்றே
  • முதுகுகள் இனணந்தால் முரண்பாடு
    முகங்கள் இணைந்தால் உடன்பாடு
  • தொண்டு செய்து வாழ்ந்தால் நீங்கள் கோயிலுக்கே போகவேண்டாம்.
  • பிறரை இழிவாக பார்ப்பதைவிட ஒரே ஒரு முறை உண்ணையே உற்றுப் பார்த்துக் கொள்.
  • கடன் வாங்கியவர்களை விட கடன் கொடுத்தவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு.
  • தேவையற்ற பொருட்களை வாங்குபவன் ஒரு நாள் தேவையான பொருட்களை விற்க நேரிடும்.
  • சுறுசுறுப்பாயிரு; சுதந்திரமாயிரு; சிக்கனமாயிரு;
  • நீங்கள் என்றைக்கு கடன் வாங்குகின்றீர்களோ, அன்றைக்கே உங்களது நிம்மதி, தன்மானம், புகழ் இவைகளை அடகு வைத்துவிட்டீர்கள்.
  • பொழுது போதவில்லை என்று சொல்கின்றவர்கள் சாதனையாளர்கள்.
    பொழுது போகவில்லையே என்று சொல்கின்றவர்கள் சோம்பேறிகள்.
  • கைநீட்டிப் பெறுவதைவிடக், கொடுத்துப் பழக கற்றுக்கொள், உனக்கு அது புண்ணியத்தைச் சேர்க்கும்.
  • சின்னஞ்சிறு செலவுகளைக் கூட எழுதி பாருங்கள் சிக்கனம் தானாக வந்துவிடும்.
  • நீ செய்த நன்மைக்கு விலைவாக உனக்கு தீமை வந்தால் சுகமாக ஏற்றுக்கொள்.
  • நீ பிறர் மேல் காட்டுகின்ற அன்பு, அவனிடத்திலே உள்ள குறையை மறைக்க உதவிட கூடாது.
Thanks to Antony Raj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக