மொத்தப் பக்கக்காட்சிகள்

2/16/2016

வெற்றி-வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

 ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி ‘பத்தடி ஆழம்.. பத்தடி அகலம் கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?’ என்பது தான்

“கத்திக் கூப்படு போடுவேன்” என்றான் ஒருவன்..

“தத்தி தத்தி ஏறிடுவேன்” என்றான் ஒருவன்.

 இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை!!

கடைசியில் ஒருவன் கேட்டான்.

‘தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?’.

‘இல்லை’ என்றனர் தேர்வுக் குழுவினர்.

‘நான் விழுந்தது.. பகலிலா.. அல்லது இரவிலா’

‘ஏதற்குக் கேட்கிறாய்?’ -தேர்வுக்குழுவினர்.

இவன் சொன்னான் ‘பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை.. அஜாக்கிரதையானவனும் அல்ல. அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை. அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.’

அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினருக்கு.அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

ஒரு மனிதனின் வெற்றி அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.

படித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக