மொத்தப் பக்கக்காட்சிகள்

5/09/2013

அறிவை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக உழைத்தால் வெற்றிபெறலாம்.ரஜினிகாந்த்



நான் மிகவும் மதிக்கும் நடிகர்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதா பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜிபி கார்டன் துவக்க விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அனைவரும் விஜிபி பன்னீர் தாசின் உழைப்பை பாராட்டி பேசினர். எம்.ஆர்.ராதா பேச எழுந்ததும், தனக்கே உரியபாணியில், என்ன எல்லோரும் விஜிபி பன்னீர்தாஸ் மட்டும்தான் உழைத்தது போல அவரை பாராட்டுகிறீர்கள், ஏன் நான் உழைக்கவில்லையா? நீங்கள் உழைக்கவில்லையா? எல்லோரும் தான் உழைக்கிறோம்.

அதேபோல் வி.ஜி.பன்னீர்தாசும் உழைக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம், நாம் மாடுகளை போல உழைக்கிறோம். அவர் மனிதரை போல உழைத்திருக்கிறார். நான் எங்கோ 500 ஏக்கர் வாங்கியிருக்கிறேன். அவர் கடலுக்கு அருகே 100 ஏக்கர் வாங்கியிருக்கிறார். இது அவரது புத்திசாலித்தனம். இவ்வாறு எம்.ஆர்.ராதா பேசினார்.

அவர் கூறியது போல அறிவை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக உழைத்தால் வெற்றிபெறலாம்.
   
------ரஜினிகாந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக