மொத்தப் பக்கக்காட்சிகள்

11/21/2011

சமைக்காமல் அப்படியே சாப்பிடும் 'இன்ஸ்டன்ட்' சோறு - புதுவகை அரிசி அறிமுகம்!


சமைக்காமல் அப்படியே சாப்பிடும் 'இன்ஸ்டன்ட்' சோறு - புதுவகை அரிசி அறிமுகம்! டெல்லி: வேக வைக்காமலேயே சாப்பிடக்கூடிய அரிசி வகையை ஒரிசாவில் உள்ள மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

'அகோனிபோரா' என்ற பெரிலான இந்த அரிசி வகையை சமைப்பதற்கு பதிலாக, அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தாலே போதும். சாப்பிடுவதற்கான பதம் அதில் உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டாக்கில் உள்ள மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த அரிசிக்கான சோதனைகள் நடந்து வருகின்றன.

'கோமல் சாவல்' இலக ரகத்தைச் சேர்ந்த இந்த அரிசி, அசாமின் திதாபர் நெல்லாராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டது.

பொதுவாக அரிசியில், சர்க்கரை மற்றும் கெட்டித் தன்மையைக் கொடுக்கக்கூடிய 'அமிலோஸ்' 20 முதல் 25 விழுக்காடு வரை இருக்கும்.

இந்த 'இன்ஸ்டன்ட் சோறு' அரிசியில் அமிலோஸ் அளவு 4.5 விழுக்காடு மட்டுமே உள்ளது. இதனால், கெட்டித்தன்மை குறைவாகவும், நீரில் ஊற வைத்தே சாப்பிடுவதற்கு ஏதுவாகவும் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நீரிழிவு நோயாளிகள் பலர் அரிசி வகைகளை கண்டாலே பயந்து தவிர்த்து வரும் நிலையில், அவர்களுக்கு இந்த வகை அரிசி பயன்படுமா என்பது குறித்தும், அனைத்து சீதோஷண நிலையில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அரிசி ஒத்து வருமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Thaks to One India.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக